உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

துப்பட்டா சிக்கி விழுந்த பெண் மீது லாரி ஏறி பலி

கும்மிடிப்பூண்டி:செங்குன்றம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அருண் மனைவி காயத்ரி, 44. கணவருடன் செங்குன்றத்தில் இருந்து கவரைப்பேட்டை நோக்கி ராயல் என்பீல்ட் புல்லட்டில் சென்றார். சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் அடுத்த பெரவள்ளூர் அருகே செல்லும் போது காயத்ரி அணிந்திருந்த துப்பட்டா, அவர் பயணித்த டூ-- வீலரின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது, அதே திசையில் சென்ற லாரியின் பின் சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியதில், அதே இடத்தில் உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை