மேலும் செய்திகள்
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
31-Oct-2025
ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்
31-Oct-2025
தோல் கழிவு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
28-Oct-2025
டில்லியில் இருந்தா சாப்பாடு வரும்?
26-Oct-2025
குடியாத்தம்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் பிச்சனுார் பேட்டையைச் சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சேகர், 42, இவரது மனைவி ரேவதி, 35. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் படிக்கிறார். கடந்த சில மாதங்களாக ரேவதி அடிக்கடி மொபைல் போனில் பேசியும், சமூக வலைதளங்களை பார்ப்பதிலும் ஆர்வமாக இருந்தார். இதை சேகர் பலமுறை கண்டித்தார்; அவர் கண்டுகொள்ளவில்லை.நேற்று முன்தினம் இரவு மொபைல்போனில், ரேவதி யாருடனோ பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டில் நுழைந்த சேகர் அதை கண்டித்தார். அப்போதும் அதை கண்டு கொள்ளாமல், மொபைலில் அந்த பெண் பேசியபடி இருந்தார்.ஆத்திரமடைந்த சேகர், அருகில் கிடந்த அரிவாள் மனையால் மனைவியின் வலது கையை வெட்டினார். அலறித் துடித்த ரேவதியை மீட்டு, வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடியாத்தம் டவுன் போலீசார் விசாரித்து, சேகரை கைது செய்தனர்.
31-Oct-2025
31-Oct-2025
28-Oct-2025
26-Oct-2025