உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

தீப்பிடித்து எரிந்த ஆம்னி பஸ் 15 பயணிகள் உயிர் தப்பினர்

பவானி: சித்தோடு அருகே ஆம்னி பஸ் தீயில் எரிந்து சேதமான நிலையில், 15 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னையில் இருந்து கோவைக்கு ஒரு ஆம்னி பஸ் நேற்று அதி-காலை புறப்பட்டது. சென்னையை சேர்ந்த கார்த்திக், 43, ஓட்-டினார்.சித்தோடு அருகில், சத்தி ரோடு பாலம் அருகே நேற்று அதி-காலை, 4:40 மணிக்கு வந்தபோது, இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் டிரைவர் உடனடியாக பஸ்சை சாலை-யோரம் நிறுத்தினார். பஸ்ஸில் இருந்த, 15 பயணிகளையும் உட-மைகளுடன் வெளியேற அறிவுறுத்தினார். அவர்கள் சற்றே பதற்றத்துடன் வெளியேறி கொண்டிருந்த-போதே, கரும்புகை சூழ்ந்து பஸ் எரிய தொடங்கியது. பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடு-பட்டனர். ஆனாலும், 80 சதவீத பஸ் எரிந்து சேதமடைந்தது. தேசிய நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில், ஆம்னி பஸ் தீப்பி-டித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை