உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

நீதிபதி வளாக குடியிருப்பில் கட்டுவிரியன் பாம்பு மீட்பு

ஆத்துார்:ஆத்துார், விநாயகபுரம் பஸ் ஸ்டாப் அருகே, ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் உள்ளன. அதில் நீதிபதி குடியிருப்பு வளாக பகுதியில் நேற்று காலை, 6:00 மணிக்கு, பாம்பு இருந்தது. இதுகுறித்து அளித்த தகவல்படி, அங்கு வந்த, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், 3 அடி நீள கட்டுவிரியன் பாம்பை உயிருடன் பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.நல்ல பாம்புபெத்தநாயக்கன்பாளையம், சத்தியாபுரம் அருகே ஆரியூர் தெருவை சேர்ந்த ஹேமந்த், 30, வீடு அருகே, நேற்று மாலை, 4:00 மணிக்கு பாம்பு இருந்தது. இதுகுறித்த தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு வீரர்கள் சென்று, கருவி மூலம், 6 அடி நீளமுள்ள, நல்ல பாம்பை லாவகமாக பிடித்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ