உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல்

தேனி : ஆண்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் கலெக்டர் உங்கள் ஊரில் உங்களை தேடி சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது.இதில் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட் பகுதிகளில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் உணவுப்பாதுகாப்புத்துறையினர், போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அருப்புக்கோட்டை நாயக்கன்பட்டி ஸ்ரீவேலன் மாவுமில் பெட்டிக்கடையில் சோதனை செய்யப்பட்ட போது ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்து கடை சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை