உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!

இந்த வாரம் வறண்ட வானிலை நிலவும்!

திருப்பூர் : 'திருப்பூரில் இந்த வாரம், வறண்ட வானிலை நிலவும்' என, வானிலை மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, இந்திய வானிலைத்துறையின் கோவை, வேளாண் ஆராய்ச்சி மையம் இணைந்து, திருப்பூருக்கான வாராந்திர வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இந்த வாரம், திருப்பூரில், பகல் நேர வெப்பநிலை அதிகபட்சம், 35 முதல், 36 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 40 சதவீதமாகவும் இருக்கும். சராசரியாக, மணிக்கு, 20 முதல், 24 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும்; பெரும்பாலும் தென் மேற்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும்.வரும் நாட்களில் மேற்கு மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழையில்லா வறண்ட வானிலைக்கே வாய்ப்புள்ளது.மக்காச்சோள பயிர் பாதுகாப்பு பொருத்தவரை, நடவு செய்து, 30 நாட்களான இறவை பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 125 கிலோ யூரியா மற்றும், 25 கிலோ பொட்டாஷ் ஆகியவற்றை, களை எடுத்த பின், மேல் உரமாக இடலாம். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை