உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வன்முறை: காங்., - எம்.எல்.சி., பேச்சால் சர்ச்சை

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் வன்முறை: காங்., - எம்.எல்.சி., பேச்சால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு : “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று, அசம்பாவிதங்கள் நடக்கும் அபாயம் உள்ளது,” என, காங்கிரஸ் எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியது, சர்ச்சைக்கு காரணமானது.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது: பாபர் மசூதியை இடித்தது தொடர்பாக, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது கிரிமினல் வழக்குப் பதிவாகியிருந்தது. இப்போதும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.தன்னார்வ சேவகர் என கூறி குற்ற வழக்குகளில் இருந்தவர்களை விட்டுவிட முடியாது. வழக்குப் பதிவானதால் தலைமறைவாக நடமாடுகின்றனர். சட்டவிரோத செயலை செய்தவர்கள், தர்மத்தின் பெயரில் என்னென்ன செய்தனர் என்பது தெரியும்.ஏற்கனவே மாநில மக்கள், சரியான தீர்ப்பை அளித்துள்ளனர். கர்நாடகாவை அமைதி பூங்காவாக வைத்திருப்போம் என, தேர்தல் அறிக்கையில் நாங்கள் கூறியிருந்தோம். அந்த அமைதியை பாழாக்கும்போது, போலீசார் நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. 30 ஆண்டுகளாக இவர்களை விட்டு வைத்ததே தவறு.தன்னார்வ சேவகர்கள் மீது, பதிவான வழக்கை திரும்பப் பெறும்படி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்தாகும்.ராமர் கோவிலுக்கும், அயோத்தி வரலாற்றுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. நான் ஒரு ஹிந்துவாக கூறுவதானால், ஆன்மிக குரு ராமர் கோவிலை திறந்து வைத்தால், அழைப்பு இல்லாமலேயே நாங்கள் சென்றிருப்போம். பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இது அரசியல் நிகழ்ச்சி. அவர் ஆன்மிக குருவா?அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின்போது, குஜராத்தின் கோத்ராவில் நடந்ததைப் போன்று வன்முறை நடக்கும் வாய்ப்புள்ளது. சரியான தகவலை வைத்துக்கொண்டே, நான் கூறுகிறேன். அயோத்திக்குச் செல்லும் மக்களுக்கு, அரசே பாதுகாப்பு அளிக்க வேண்டும்.யார், யாரை என்னவென்று அழைக்கின்றனர் என்பது முக்கியம் அல்ல. அனைவருக்கும் பக்தர்கள் உள்ளனர். கைலாச ஆஸ்ரமத்தின் நித்யானந்தாவுக்கும், பக்தர்கள் உள்ளனர். அதே போன்று முதல்வர் சித்தராமையாவுக்கும் பக்தர்கள் உள்ளனர். இதை பொருட்படுத்த வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.ஹரி பிரசாத் பேச்சை, பா.ஜ., தலைவர்கள் கண்டித்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடக்கும், 22ல் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதற்கு ஹரிபிரசாத்தே காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துவோம். இதுகுறித்து, நகர போலீஸ் கமிஷனரிடம் முறையிடுவோம். ஹரிபிரசாத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும். பொறுப்பான பதவியில் உள்ள அவர், இதுபோன்று பேசுவது தவறு.

- -சதானந்தகவுடா, பா.ஜ., - எம்.பி.,

கோத்ரா அசம்பாவிதம் போன்று, மீண்டும் நடக்கலாம் என, ஹரிபிரசாத் கூறியுள்ளார். ஆனால் ராம பக்தர்களை, ராமனே காப்பாற்றுவார். இத்தகைய மிரட்டல்களுக்கு, ராம பக்தர்கள் பயப்படமாட்டார்கள்

- கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

வாய்மையே வெல்லும்
ஜன 04, 2024 18:22

காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை கூர்ந்து கவனியுங்கள்.. இவர்களுக்கு காஷ்மீரத்தில் மக்களாட்சி வேண்டாம்.. பழைய ஆர்டிகிள் முன்னூற்றி எழுவது ஸ்பெஷல் ஸ்டேட்டஸ் ஆட்சி தான் வேணும்.. அங்க மக்கள் முன்னேறுவதில் இவர்களுக்கு உடன்பாடில்லை அதே போல ராமர் கோவில் கட்டுவதிலும் வயித்தெரிச்சல் பிடிச்சு முடிஞ்ச அளவுக்கு வன்முறை என பரப்புரை ஆக்கி குட்டை குழப்ப செய்துள்ளனர்.. மக்கள் இவர்களை நன்கு கவனிக்கிறார்கள்... அநேகமாக காங்கிரஸ் இனிமேல் முன்னுக்கு வருவது சாத்தியமற்றது ..


Sampath Kumar
ஜன 04, 2024 09:46

இது ஏதிர் பார்த்த ஓன்று தான் நானே


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 04, 2024 08:57

விடுங்க ....... பாஜவுக்காக பிரச்சாரம் பண்ணுறார் ........


ராஜ்
ஜன 04, 2024 07:51

இது அரசியல் நிகழ்ச்சின்னு ஒரு அரசியல்வாதி சொல்றாந். கர்நாடகாவில் ஓவ்வொரு முறை இவர்கள் ஆட்சி வரும்போது ஒரே அட்றாசிட்டி மட்டும் தான். வாட்டாள் நாகராஜ் எங்கிருந்தோ எழுந்து வந்து விடுவார், வேதிகே அமைப்பினர் பொங்க ஆரம்பித்து விடுவர். பல ரௌடி மொழிவெறி, ஜாதிவெறியுடன் வெளியே திரிவான். காவேரி சம்பவத்தில் தாக்கப்பட்ட தமிழர் எத்தனை பேர் தெரியுமா? அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது எவ்வளவு தெரியுமா? போன வாரம் கூட பல கடைகள், மால்கள் தாக்கப்பட்டது தெரியுமா? காங்கிரஸ் அவர்களை நேரடியாகவே தூண்டிவிடுவது அந்த மாநில மக்களுக்கே நன்றாக தெரியும். இவருக்கு கோவில் திறப்பு விழாவிற்கு போக வக்கில்லை என்றால் சாத்திக்கொண்டு இருப்பது நல்லது.


தமிழ்வேள்
ஜன 04, 2024 11:51

கருணாநிதியி கூட்டணி கட்சியின் ஆட்சி லட்சணம் இதுதான் ........ரவுடிக்கு நண்பன் பெருக்கியாக தானே இருக்க இயலும் ?


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 07:33

இனிமேல் முஸ்லிம் தீவிரவாதிகள் யாராவது செய்தால் கூட காங்கிரஸ்காரர்கள் தான் செய்தார்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்று இவருக்கு தெரியாதா.


Rajasekaran
ஜன 04, 2024 07:10

வன்முறையை தூண்டும் விதத்தில் இவர் பேசியதை சட்டங்கள் அலட்சியப்படுத்தாமல் இவர் மீது தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் .


ramani
ஜன 04, 2024 06:58

வன்முறையை தூண்ட காங்கிரஸ் கட்சியே தயாராகிறது என்று நன்றாக இவன் கூறுவதிலிருந்து தெரிகிறது. வன்முறை ஏற்பட்டாலீ முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சி மட்டுமே காரணம். அவர்களுக்கு ஒத்து ஊதும் அவர்களின் கூட்டணி கட்சிகளும் காரணம்


ராமகிருஷ்ணன்
ஜன 04, 2024 06:54

காங்கிரஸ்காரர்களின் கவலை தெளிவாக தெரிகிறது. பி ஜே பி க்கு இந்துக்களின் ஓட்டுவங்கி மிக பெரியதாக அமைந்து விடும் என்று பயந்து, அதை கெடுக்க முஸ்லிம்கள் மூலம் முயற்சி செய்து வருகிறது. நல்லதே நடக்கும். காங்கிரஸின் இந்த மாதிரியான முட்டாள்தனமான முயற்சிகள் தான் பி ஜே பி யின் வளர்ச்சியை கூட்டும். செய்ங்க....


Duruvesan
ஜன 04, 2024 06:35

காங்கிரஸ் என்னைக்குமே ஹிந்துவுக்கு ஆதரவான கட்சி இல்லை. நீ கோயிலுக்கு போவதே இல்லை, எலெக்ஷன் வந்தா கெளம்பிடுவானுங்க, நீயெல்லாம் வரணும்னு யாரும் எதிர்பார்களை


Duruvesan
ஜன 04, 2024 06:32

காங்கிரஸ் ஏற்பாடு பண்ணிடுச்சா?? மூர்கனுங்க எப்பவும் காங்கிரஸ் விசுவாசிகள்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை