உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

ரயில்வே ஊழியர் வீட்டில் திருட்டு

ஈரோடு:ஈரோடு, ரயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம், 40; ரயில்வே டெக்னீசியன். திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆறுமுகம் மனைவி குடும்ப பிரச்னையால் திருச்சியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆறுமுகமும் கடந்த, 27ல் திருச்சி சென்றார். நேற்றுமுன் தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 5 பவுன் தங்க நாணயம் திருட்டு போனது தெரிந்தது. அவர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை