உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு

கோவில் பிரச்னை தொடர்பாக போராட்டம்; மா.கம்யூ., ஆதரவு

கரூர்: கரூர் அருகே சின்ன வடுகப்பட்டியில், வெண்ணைமலை பாலசுப்-பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் இடம் பிரச்னை தொடர்பாக, அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஆதரித்து, மா.கம்-யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் பேசினார்.அப்போது, வெண்ணைமலை கோவிலுக்கு சொந்தமான இனாம் நிலத்தில், 1,200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல ஆண்டுக-ளாக ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இப்பிரச்-னையை தீர்க்க வேண்டும் என, எம்.பி.,யிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.அப்போது, மாவட்ட செயலர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், ராஜூ, சக்திவேல், முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை