உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வாகனங்கள் செல்ல வழியற்ற சாலைகள்

வாகனங்கள் செல்ல வழியற்ற சாலைகள்

சறுக்கும் சாலைஅவிநாசி - திருப்பூர் ரோடு, திருமுருகன்பூண்டி பாலம் அருகே சாலையில் மணல் நிறைந்துள்ளது. வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர்.- விஜி, திருமுருகன்பூண்டி. (படம் உண்டு)வடிகால் இல்லைதிருப்பூர் முதலிபாளையம் ஊராட்சி செம்மாண்டம்பாளையத்தில் சாலைகளை விரிவுபடுத்தி, மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். குறுகிய சாலையால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.- யோகேஷ்குமார், செம்மாண்டம்பாளையம். (படம் உண்டு)பல்லாங்குழி சாலைதிருப்பூர், பலவஞ்சிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எதிரில், வேலவன் பள்ளி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். குழியை மூட வேண்டும்.- ஜெகன், பலவஞ்சிபாளையம். (படம் உண்டு)குப்பைக்கு தீவைப்புதிருப்பூர் கணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் பொது வெளியில் குப்பை கொட்டப்பட்டு, தீ வைக்கப்படுகிறது. புகை வாகன ஓட்டிகள் கண்ணில் நிறைகிறது.- ரஹூம் அங்குராஜ், கணியாம்பூண்டி. (படம் உண்டு)வழியும் கழிவுநீர்திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுகிறது. சாலை சேதமாகும் முன், சரிசெய்ய வேண்டும்.- ஜீவானந்தம், தென்னம்பாளையம். (படம் உண்டு)சாலை சேதம்திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, ரயில்வே கேட் ஸ்டாப் அருகே சாலை சேதமாகியுள்ளது. வளைவில் திரும்பும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.- பூபதி ராஜா, ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை