UPDATED : மார் 22, 2024 12:15 PM | ADDED : மார் 22, 2024 12:15 AM
மண்ணடி, மார்ச் 22-மண்ணடி, மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடக்கிறது. சென்னை, மண்ணடி, மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழா, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது. 5ம் நாளான நேற்று இரவு, மல்லிகேஸ்வரர் - மரகதாம்பாள் வெள்ளி, தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பிரம்மோற்சவத்தின், 7ம் நாளான 22ம் தேதி (இன்று), மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் உடன் பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுப்பர்.இதுகுறித்து சிவனாடியார் சேவா சங்கத்தினர் கூறியதாவது:60 ஆண்டுகளாக திருத்தேர் வைபவம் நடைபெறாமல் இருந்தது. சிவனாடியார் சேவா சங்கம் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு முதல், மல்லிகேஸ்வரர் கோவில் திருத்தேர் வைபவம் வெகுவிமர்சையாக நடத்தி வருகிறது. 16 ஆண்டுகளாக திருத்தேர் வைபவம் வெற்றிகரமாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.