sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 591

(நான் வாசிக்கும் புத்தகம் பகுதிக்கு)  கதைகளில் வெளிப்படுகிறது... மனித மனங்கள் பற்றிய ஆய்வு

கோயம்புத்தூர்

3 minutes ago

மேஷம்: அசுவினிஎந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். வருமானத்தை அதிகரிப்பார். தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரித்து வந்தாலும், குருப்பார்வை உண்டாவதால் விரயம் எல்லாம் சுப விரயமாகும். உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகள் வந்து போகும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் உண்டாகும் என்றாலும், அவையெல்லாம் சரியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உடல் நிலையில் தோன்றிய பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் கூடும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். முதியோர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் இருந்த இடம் தெரியாமல் நீங்கும். ஆரோக்கியம் சீராகும். பெண்களுக்கு ஏற்பட்ட குழப்பம் விலகும். நன்மையான நிலை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 26, 27.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 18, 25, ஜூலை 7, 9, 16.பரிகாரம்: விநாயகரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பரணிஉழைப்பால் உயர்வடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர்பார்த்த பணம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பொன் பொருள் சேரும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும் புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏழரைச்சனியின் சங்கடங்கள் விலகும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்களுக்கு உடல்நிலை சீராகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். லாப ராகுவால் ஆதாயம் கூடும். கையில் பணம் புரளும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் நிம்மதி உண்டாகும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். விவசாயத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய எண்ணம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 27, 28.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: சனீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் விலகும்.கார்த்திகை 1 ம் பாதம்எதிர்காலம் பற்றிய சிந்தனையுடன் திட்டமிட்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் தைரிய வீரிய பராக்கிரம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலும் தைரியமும் கூடும். எடுத்த வேலைகள் முடிவிற்குவரும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உடலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் வரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்ததை அடைந்துவிட்ட நிம்மதி உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ஜூன் 19 வரை சஞ்சரிக்கும் செவ்வாய் உங்களை வேகப்படுத்துவார். உற்சாகத்துடன் செயல்பட வைப்பார். குருப் பார்வைகள் அஷ்டம, ஜீவன, விரய ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். ஏழரைச் சனியின் பாதிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும். பெண்களுக்கு நிம்மதியான நிலை ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 28.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 19, 27, ஜூலை 9, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் குழப்பமின்றி செயல்பட வேண்டிய மாதமாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற சிந்தனைகள், குழப்பங்கள் ஏற்படும். வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் பிரச்னைகள் தோன்றும் என்றாலும், குருவின் பார்வைகள் சப்தம, பாக்ய, லாப ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் அமையும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண முடியும். மாணவர்களுக்கு மனம் தெளிவாகும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மை அளிக்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்து செல்வது அவசியம். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்புகள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 29.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 6, 10, 15.பரிகாரம்: நடராஜரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.ரோகிணிபிறப்பின் பயனை அடைய வேண்டும், வாழ்வில் உயர்ந்த இடத்தைத் தொட வேண்டும் என்ற நோக்கத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்களுக்கு தர்ம கர்மாதிபதியான சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் மற்றும் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு ஏற்பட்ட பயம் போகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குருப்பார்வையும் லாப ஸ்தானத்திற்கு கிடைப்பதால் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். சேமிப்பும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த போராட்ட நிலை விலகி நிம்மதி உண்டாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம்தரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு பிடித்தமான வரன்வரும். ஜூன் 19 முதல் ராசிக்குள் உங்கள் விரயாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. முடிந்தவரை அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மையாகும். ஒவ்வொரு வேலையிலும் பின்விளைவுகள் பற்றி யோசித்து முடிவிற்கு வருவது அவசியம். உடல் நிலையில் அவ்வப்போது சில பிரச்னைகள் தலைகாட்டும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகள் பிரச்னைகளில் இருந்து இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். மாணவர்கள் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூன் 30.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 20, 24, 29. ஜூலை 2, 6, 11, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: வேகமும் விவேகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாய் ஜூன் 19 முதல் ராசிக்குள் சஞ்சரிப்பதால் பரபரப்பாக செயல்படுவீர்கள். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் குழப்பம் அடையும் என்றாலும், ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். உறவினர் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உங்கள் தன குடும்பாதிபதி புதன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம்வரும் வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவு செலவில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். யோகக்காரகன் ராகு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். முதலீட்டிற்கேற்ற லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கும் சேமிப்பு அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் ஏற்படும். வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நன்மையாகும். பெண்களுக்கு நீண்டநாள் கனவு நனவாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 1.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.

மிதுனம்மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத் தொடக்கத்தில் உங்கள் லாபாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரித்தாலும், ஜூன் 19 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை ஏற்படும். சிலருக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். வீண் அலைச்சலால் மனம் சோர்வடையும். ஜென்ம ராசிக்குள் ஆத்ம காரகனும் உங்கள் சகாய ஸ்தானாதிபதியுமான சூரியன் சஞ்சரிப்பதால், உடல் நிலையில் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களைப் பாதுகாப்பார். நீங்கள் சோர்ந்துபோகும் நேரங்களில் தைரியத்தை ஏற்படுத்துவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். வியாபாரிகளுக்கு நம்பிக்கையை அதிகரிப்பார். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குரிய வழிகளை உருவாக்குவார். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் பெரியோரின் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்கள் தவறான நட்புகளை ஒதுக்கி வைப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 1.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.பரிகாரம்: நரசிம்மரை வழிபட நன்மைகள் நடக்கும். சங்கடங்கள் விலகும்.திருவாதிரைஉலகையும் மனிதர்களையும் புரிந்தும் தெரிந்தும் வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செல்வாக்கு உயரும்.  வருமானம் அதிகரிக்கும். செய்துவரும் தொழில்மீது அக்கறை ஏற்படும். விஐபிகள் ஆதரவும் தெய்வ அருளும் கிடைக்கும். சிலர் வேண்டுதலுடன் ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்து உயரும்.  அரசியல்வாதிகள் சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். உத்தியோகத்தில் தோன்றிய நெருக்கடிகள் நீங்கும். வழக்கு விவகாரங்கள் முடிவிற்கு வரும். மெமோ, சஸ்பெண்ட் என்று சங்கடங்களை சந்தித்தவர்கள் அவற்றில் இருந்து வெளியில் வருவீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும் என்றாலும், ராசியாதிபதி புதன் வக்கிரம் அடைந்திருப்பதும், ராசிக்குள் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதும் உங்களைக் குழப்பத்திற்கு ஆளாக்கும். எந்த ஒரு வேலையையும் எடுத்தோம் முடித்தோம் என்று முடிக்க முடியாத அளவிற்கு அதில் தடைகள் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையும் ஒத்துழைக்காமல் போகும். ஜூன் 19 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பலவகையிலும் செலவுகளை அதிகரிப்பார். சிலர் சொந்த இடம் வாங்கவும், வீடு கட்டவும் செலவு செய்வீர்கள். கையிருப்பு கரைய ஆரம்பிக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் ஆலோசித்து செயல்படுவீர்கள். எதிர்காலம், பிள்ளைகள் என்று உங்கள் கவனம் செல்லும். மற்றவர்களால் பாராட்டக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு கல்லூரியில் ஏற்பட்ட சங்கடம் விலகும். நட்பு வட்டம் விரிவடையும்.சந்திராஷ்டமம்: ஜூலை 2.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 22, 23, ஜூலை 4, 5, 13, 14.பரிகாரம்: துர்கையை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு முதன்மையாக இருந்து பிறருக்கு ஆலோசனைகள் வழங்கி வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். ஞானக்காரகன் குருபகவான் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால், இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் யாவும் விலகும். போராட்டநிலை முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன் பொருள், புதிய வாகனம் வீட்டிற்கு வரும். நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலை இருந்த இடம் தெரியாமல் போகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். ஆரோக்கியம் சீராகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு குருப்பார்வை உண்டாவதால் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும். மெமோ இடைநீக்கம் என்ற நிலை மாறும். உங்கள் செல்வாக்கு உயரும். திறமைக்கும் தகுதிக்கும் மரியாதைக் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ஞான மோட்சக்காரகன் கேது, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். உங்களைத் துணிச்சலுடன் நடைபோட வைப்பார். பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உடல்நிலை சீராகும். மூத்த குடிமக்களுக்கு மரியாதை உயரும். சிறு வியாபாரிகளுக்கு வருமானம் உயரும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். வேலைபளு கூடும். மாணவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 3.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 5, 12, 14.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

கடகம்புனர்பூசம் 4 ம் பாதம்எதிர் வருவதை முன்னதாகவே அறிந்து அதற்கேற்ப செயல் படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் ராசிக்குள் ஞானக்காரகன் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் அறிவு மேம்படும். எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். வசதி வாய்ப்புகளை அடைவதற்காக முயற்சி மேற்கொள்வீர். அதன் காரணமாக சோர்ந்திருந்தவர்களும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழிலை விரிவு செய்வதற்காக ஊர் விட்டு ஊர் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் பூர்வ புண்ணிய, சப்தம, பாக்ய ஸ்தானங்களுக்கு உண்டாவதால் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் எல்லாம் நடந்தேறும். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கும். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் நல்ல தகவல்வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். சொந்த வீடு வாகனம் என்ற கனவோடு இருந்தவர்களுக்கு அந்தக் கனவு நனவாகும். சமூகத்தில் அந்தஸ்து மரியாதை கௌரவம் உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பொருளாதார நிலை உயரும். சண்டை சச்சரவுகளால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒரே வீட்டிற்குள் வாழக்கூடிய அளவிற்கு நிலை மாறும். விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து படிப்பில் அக்கறை கொள்வீர்கள்.சந்திராஷ்டமம்: ஜூலை 4.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 21, 29, 30. ஜூலை 2, 3, 11, 12.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.பூசம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், 30 ஆண்டுகள் வாழ்ந்தவரும் இல்லை 30 ஆண்டுகள் கெட்டவரும் இல்லை என்ற வார்த்தையை உங்களுக்கு உணர்த்தப் போகிறார். அதிர்ஷ்டக் காற்று உங்களை நோக்கி வீசும். நீங்கள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். தெய்வ அருளும் விஐபிகள் ஆதரவும் உங்களை உச்சத்திற்கு கொண்டு செல்லும். பாக்ய சனியின் பார்வைகள் 3, 6, 11 ம் இடங்களுக்கு உண்டாவதால், தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். நோய் நொடி வம்பு வழக்கு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் மீண்டும் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஆச்சரியப்படும் வகையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். ஜூன் 19 முதல் உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். கையில் பணம் புரளும். பொருளாதார நிலை உயரும். பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜூலை 4, 5.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 20, 26, 29. ஜூலை 2, 8, 11.பரிகாரம்: ஏகாம்பரேஸ்வரரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.ஆயில்யம்குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் தெளிவுடன் செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். வித்தியா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்துள்ள நிலையில், உங்கள் லாபாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். ஆடை ஆபரணம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலை மீதிருந்த பயம் போகும். செய்து வரும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வைகள் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் வரும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேதுவும் அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. இக்காலத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், அனுசரித்துச் செல்வதும் நன்மையை ஏற்படுத்தும். தவறான நபர்களை நம்பி எந்த விதமான முயற்சியிலும் இக்காலத்தில் ஈடுபட வேண்டாம். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் வழியாக நீங்கள் உணரக்கூடிய நிலை உருவாகும் என்பதை மனதில் வைத்து செயல்படவும். வெளிநாட்டு முயற்சிகளிலும் புதிய முதலீடுகளிலும் நிதானம் தேவை. பெண்கள் புதியவர்களிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 5.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 11, 14.பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட நினைத்த காரியங்கள் நடந்தேறும்.

சிம்மம்மகம்அனுபவங்களை படிப்பினையாக கொண்டு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் ஞான மோட்சக் காரகன் கேது மனதில் குழப்பத்தையும் தேவையற்ற சிந்தனைகளையும் உண்டாக்குவார். எத்தனை முயற்சி செய்தாலும் கடைசி நேரத்தில் இழுபறியான நிலை ஏற்படும். நீங்கள் பெரிதும் நம்பி இருந்த நண்பர்களும் அவசர ஆபத்திற்கு உதவாமல் நகர்ந்து விடுவார். செய்து வரும் வேலையில் நெருக்கடி இருக்கும். மேல் அதிகாரிகளும் உங்களுக்கு உதவி புரிய முடியாத நிலை உருவாகும். வியாபாரிகளுக்கு முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். புதிய முயற்சிகள் எதிர்பார்த்த அளவிற்கு பலன் தராமல் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும், அஷ்டம சளியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து உங்களை விடுவிப்பார். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்ப்பு நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பணியாளர்களில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழவேண்டிய நிலை சிலருக்கு உண்டாகும். பெண்கள் இந்த நேரத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவது நன்மையாகும். புதிய நட்புகளிடம் ஓரடி விலகி இருப்பதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். விவசாயிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 6.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 19, 25, 28. ஜூலை 1, 7, 10, 16.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம்செல்வம் செல்வக்கோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும்.  குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் லாபம் தரும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவரின் உடல்நிலையை எண்ணி சங்கடப்பட்டு வந்த பெண்களுக்கு மனதில் நிம்மதி ஏற்படும். தாலி பலம்பெறும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். உங்கள் லாபாதிபதி புதன் மாதத்தின் முற்பகுதியில் வக்கிரம் அடைந்திருப்பதால் புதிய முயற்சிகளில் நிதானம் காப்பது நன்மையாகும். ஜூலை 8 முதல் லாப புதனால் எடுத்த வேலைகள் லாபம்தரும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். கலைஞர்களுக்கும் வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். உங்களை விட்டு விலகிச்சென்ற உறவினர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். வருவோருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். மனம் தெளிவடையும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் விளைச்சலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜூலை 7.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 19, 24, 28. ஜூலை 1, 6, 10, 15.பரிகாரம்: லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.உத்திரம் 1 ம் பாதம்முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். உங்கள் ராசிநாதன் சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி வேலைகள் லாபம் தரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். வெளிநாடு செல்வதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நிரந்தர குடியுரிமை என்ற கனவு நனவாகும். பெரியோர்  ஆதரவு கிடைத்து முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட தொல்லைகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும் மெமோ இடைநீக்கம் என்று சங்கடங்களை அனுபவித்து சோர்ந்து போனவர்களுக்கு அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியமும் தடைபட்ட பதவி உயர்வும் வரும். மனதில் நிம்மதி உண்டாகும். விரய குருவால் செலவுகள் அதிகரித்தாலும் உங்கள் மனதில் மகிழ்ச்சி இருக்கும். நோய் நொடி விலகும். அஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் இல்லாமல் போகும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு சாதகமாகும். வேலைப் பார்க்கும் பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்கள் தவறான நட்புகளை விலக்கி படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 8.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 28. ஜூலை 1, 10.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

கன்னிஉத்திரம் 2, 3, 4 ம் பாதம்முயற்சியால் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் உங்கள் நட்சத்திராதிபதி சூரியனால் எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். தொழில் முன்னேற்றம் அடையும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் அஷ்டமாதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் திடீர் வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்திலிருந்த நெருக்கடிகள் விலகும் பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 8.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28. ஜூலை 1, 5, 10, 14.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.அஸ்தம்தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ராசிநாதன் புதன் ஜூலை 9 முதல் உங்கள் கனவுகளை நனவாக்குவார். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். லாப குருவின் சஞ்சாரங்களும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனியால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் தன குடும்பாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு திருமணம் கூடும். குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின் மீது கவனம் கூடும்.சந்திராஷ்டமம்: ஜூலை 9.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29. ஜூலை 2, 5, 11, 14.பரிகாரம்: பார்த்தசாரதியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் பதவியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாட்களாக வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். தினப்பணியாளர்களாக வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு வரும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அதற்குரிய அனுமதி கிடைக்கும். உங்கள் சப்தமாதிபதி குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் 3, 5, 7 ம் இடங்களையும் பார்ப்பதால், வருமானம் அதிகரிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுத்த வேலைகள் எல்லாம் இழுபறியாக இருந்த நிலைமாறும். நினைத்ததை சாதிக்கும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். பூர்வ புண்ணிய பலன்கள் கிடைக்கும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல் வாதிகளுக்கு அதிகாரமுள்ள பதவி கிடைக்கும். சப்தம ஸ்தானத்தில் கண்டக சனியாக சஞ்சரித்து வரும் சனியால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் விலகும். நட்பு வட்டம் விரிவடையும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நோய் நொடிகளில் இருந்து விடுபடுவீர்கள். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். மாதம் முழுவதும் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும் என்றாலும், எதிர்வரும் பிரச்னைகளை சமாளித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலைமாறும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகள் கவனமாக செயல்படுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 10.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9, 14.பரிகாரம்: பகவதி அம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

துலாம்சித்திரை 3, 4 ம் பாதம்உழைப்பால் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப் பார்க்கும் செவ்வாய் உங்களுக்குள் வேகத்தை அதிகரிப்பார். திட்டமிடாமல் செயல்பட வைத்து அதனால் சங்கடங்களுக்கு ஆளாக்குவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். ஜூன் 19 ம் தேதி முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறு சிறு சங்கடங்கள், மனதிற்குள் பயம், தேவையற்ற பிரச்னைகள், நெருக்கடிகள் என உண்டாகும். ஜூன் 6 வரை ராசிநாதன் சுக்கிரன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு கரையும். ஆசையின் காரணமாக இழப்புகள் தோன்றும். சிலருக்கு மருத்துவச்செலவு ஏற்படும். வசிக்கும் ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல வேண்டிய நிலையும் ஒரு சிலருக்கு உருவாகும் என்றாலும், குருப்பார்வை தன குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். சிலருக்கு புதிய இடம், வீடு என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். ஆனி மாதத்தில் வியாபாரிகள் திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் வார்த்தைக்கு மதிப்பளிப்பதால் பிரச்னைகளை ஏற்படாமல் போகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 10.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27. ஜூலை 6, 9, 15.பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.சுவாதிநினைத்தபடி நினைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால், எல்லாவற்றிலும் உங்களுக்குள் ஒரு வேகம் உண்டாகும். நினைத்ததை அடைய வேண்டும் என்ற முயற்சி இருக்கும். சிலருக்கு குடும்பத்திற்குள் சலசலப்பு ஏற்படும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒற்றுமை இல்லா நிலை உருவாகும். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். உங்கள் பாக்யாதிபதியும் விரயாதிபதியுமான புதன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும் என்றாலும், எடுக்கும் வேலையில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம். மறதியின் காரணமாக சிலருக்கு சங்கடங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தவை இழுபறியாகும். வருமானத்தில் தடை உண்டாகும். புதிய ஒப்பந்தங்களுக்காக மேற்கொள்ளும் முயற்சியில் முழுமையான கவனம் செலுத்துவதும் பின் தொடர்வதும் நன்மை அளிக்கும். உறவுகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். இந்த நேரத்தில் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எல்லா விதமான நெருக்கடிகளும் உங்களை விட்டு விலகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும். உடல்நிலை சீராகும். மனதில் இருந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நெருக்கடி நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும் என்றாலும், புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. பிறரை நம்பி எந்த ஒரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம் அதனால் சங்கடங்களே அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வந்து கொண்டிருக்கும். நெருக்கடிகள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் தடை ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 11அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, 24. ஜூலை 4, 6, 13, 15.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எதிர்ப்பு விலகும். நோய்நொடி நீங்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்எதிர்காலத்தை மனதில் எண்ணி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன ஞானக்காரகன் குரு பகவான் பத்தாம் இடத்தில் உச்சமாக சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இருந்த செல்வாக்கில் பின்னடைவு உண்டாகும். செய்துவரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். மனம் குழப்பம் அடையும் என்றாலும், குரு பகவானின் பார்வைகள் குடும்ப, சுக, சத்ரு ஜெய  ஸ்தானங்களுக்கு கிடைப்பதால், எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். எதிர்பார்த்த சந்தோஷமும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் கிடைக்கும். ஆறாமிட சனி பகவானுக்கும் குருப் பார்வை உண்டாவதால் மேலும் நன்மைகள் அதிகரிக்கும். நோய்நொடி என்றிருந்த பாதிப்பு நீங்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வம்பு வழக்கு என்று பயந்து பயந்து வாழ்ந்த நிலை மாறும். எல்லாவற்றிலும் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், ராசிநாதன் சுக்கிரன் ஜூன் 6 வரை ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனம் தேவை. வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நன்மை அளிக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்வதற்கு முன்னதாக சந்தை நிலவரத்தை அறிந்து செய்வது நன்மையாகும். மாதம் முழுவதும் லாப கேது உங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பார். பொருளாதார நிலை சீராக இருக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை கேட்டு செயல்படுவதும் பிள்ளைகள் நலனில் அக்கறை எடுப்பதும் நன்மையாகும். பாக்ய ஸ்தானத்தில் உங்கள் லாபாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். ஒரு பக்கம் சங்கடங்கள் ஏற்பட்டாலும் மறுபக்கம் அதிலிருந்து விடுபடக்கூடிய நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனைத்திலும் கவனம் அவசியம். சட்ட சிக்கல்களுக்கு உட்பட்டு நடந்து கொள்வது நன்மை அளிக்கும். சிபாரிசுகளுக்கு இந்த நேரத்தில் இடம் கொடுக்காமல் இருப்பது நன்மையாகும். வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தால் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுப்புடன் நடந்து கொள்வது அவசியம். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். விவசாயிகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 12.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 15.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

விருச்சிகம்விசாகம் 4 ம் பாதம்மற்றவருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தன புத்திரக்காரகனான குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் நடைபெறாத வேலைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்கள் தங்களுக்கு மேலானவர்களின் பாராட்டிற்கு ஆளாவர்.  உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கடன் சுமை விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். ஜூன் 19 வரை ராசிநாதன் செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு அதிகரிக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஜூன் 15. ஜூலை 13.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 21, 27, 30. ஜூலை 3, 9, 12.பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.அனுஷம்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கர்மக்காரகன் சனிபகவான் சஞ்சரித்தாலும், பாக்ய குருவின் பார்வை சனி பகவானுக்கு உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளுக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். வேலைக்காக முயற்சி செய்து வருவோருக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆதாயம் கூடும். ஜூலை 8 முதல் அஸ்டம புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  பெண்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 15, 16. ஜூலை 13, 14.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: பைரவரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.கேட்டைவெற்றிப் படிக்கட்டில் கால் வைத்துள்ள உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றமான மாதமாகும். ஜூலை 8 வரை புதன் வக்கிரமாக சஞ்சரித்தாலும், பாக்ய குருவால் உங்கள் முயற்சி வெற்றியாகும். ஜூலை 8 முதல் புதன் வக்கிர நிவர்த்தி அடைவதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த பணம்வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழில் லாபம் தரும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். ஜூலை 6 வரை சப்தமாதிபதி சுக்கிரன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆடை ஆபரணம் சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஜூன் 19 முதல் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியைப் பார்ப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களிடம் இருந்த மந்த நிலை நீங்கும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். சொந்த இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும் என்றாலும், உங்கள் ஜீவனாதிபதி சூரியன் அஸ்டம ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் அக்கறையாக நடந்து கொள்வது அவசியம். தவறுகள் நேராத வகையில் நடந்து கொள்வது இந்த நேரத்தில் முக்கியம். வியாபாரிகள் கணக்கு வழக்கினை சரியாக வைத்துக் கொள்வதால் அரசு வழியில் ஏற்படும் பிரச்னைகள் உங்களை நெருங்காமல் போகும். சுக ஸ்தானத்தில் யோகக் காரகன் ராகு சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும். தாய் வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும். வருமானம் உயரும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள், போராட்டங்கள் முடிவிற்கு வரும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை ஏற்படும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 16, 17. ஜூலை 14.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27. ஜூலை 5, 9.பரிகாரம்: அபிராமியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும். 

தனுசுமூலம்நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞான மோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். நீண்டநாளாக உங்களை சங்கடப்படுத்தி வந்த பிரச்னைகள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நிலை உருவாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கும் ஆத்மகாரகன் சூரியனால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். வியாபாரிகள் சிலர் செய்துவரும் தொழிலை இடமாற்றம் செய்வீர்கள். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் மாத தொடக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியான நிலையும் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொன் பொருள் சேரும். ஜூன் 6 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் பிறருக்கு உதவி செய்யக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரம் தொழிலில் ஆதாயம் கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அர்த்தாஷ்டம சனிக்கு குருப்பார்வை உண்டாவதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தாய்வழி உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தாயாரின் உடல்நிலை சீராகும். உங்களுக்குள் இருந்த மந்த நிலை நீங்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். கையில் பணம் புரளும். விவசாயிகளுக்கு நெருக்கடி நீங்கும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 17, 18. ஜூலை 14, 15.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 16, 21, 25, 30. ஜூலை 3, 7, 12, 16.பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.பூராடம்மனசாட்சியின்படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். உங்கள் லாபாதிபதி சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பணவரவு அதிகரிக்கும். தம்பதிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும் ய. நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். குருப்பார்வைகளால் மருத்துவம் மற்றும் வீண் செலவுகள் குறையும். மனதில் நிம்மதி இருக்கும். உறக்கமின்றி தவித்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியம் சீராகும். தைரிய வீரிய சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிக்க முடியும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஜூன் 19 முதல் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள் ஒரு அசாத்திய துணிச்சல் ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிரிகளால் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும்.உணவகம், மருத்துவம், விவசாயம், பில்டர்ஸ், ரியல் எஸ்டேட் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி நீங்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனையின்படி செயல்படுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 18, 19. ஜூலை 15, 16.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30. ஜூலை 3, 6, 12.பரிகாரம்: ஆண்டாள் அழகரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.உத்திராடம் 1 ம் பாதம்அறிவாற்றலுடன் முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் நிலையில் மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீரென இடமாற்றம் ஏற்படும். குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழ வேண்டிய நிலையும் சிலருக்கு உண்டாகும். ராசிநாதன் குருபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் இழுபறி உண்டாகும் என்றாலும் குரு பகவானின் பார்வைகள் விரய மற்றும் குடும்ப சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மனதில் நிம்மதி இருக்கும். சிலருக்கு கண் பார்வையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சனிப்பார்வையால் உங்களுக்குண்டான நெருக்கடி, மந்தநிலை நீங்கும். பெண்கள் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையாகும். உடன் பணிபுரிபவரிடம் குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். அரசியல்வாதிகள் தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு நடப்பது நன்மையாகும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு முன்பாக சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படுவது அவசியம் என்றாலும், மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும். பொன் பொருள் சேரும். புதிய வாகனம் வீட்டிற்கு வரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூன் 19. ஜூலை 16.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 28, 30. ஜூலை 1, 3, 10, 12.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.

மகரம்உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்செல்வாக்கோடு வாழ வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எடுக்கும் முயற்சிகளை லாபமாக்குவார். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை நீக்குவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் துறையில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு உண்டாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வியாபாரம் தொழிலில் போட்டி பிரச்னை சங்கடம் என்றிருந்த நிலைமாறும். வியாபாரம் விருத்தியாகும். வழக்கு விவகாரத்தால் சங்கடங்களை சந்தித்து வந்தவர்களுக்கு அதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். பெரியோர் ஆதரவு உங்களைப் பாதுகாக்கும். ஜூலை 6 முதல் சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். இக்காலம் உங்கள் செல்வாக்கு உயர்கின்ற காலமாக இருப்பதால் அனைத்திலும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியம். அஷ்டம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும் மருத்துவ செலவு ஏற்படும் என்றாலும் அதிலிருந்து மீண்டு வருவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். விவசாயிகள் விளைச்சல்மீது கவனமாக இருப்பது அவசியம் மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூன் 19.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 26, 28. ஜூலை 1, 8, 10.பரிகாரம்: தில்லை நடராஜரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.திருவோணம்எந்த நிலையில் இருந்தாலும் உயர்வை மட்டுமே நோக்கமாக கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்னைகள் விலகும். வம்பு வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வாடகை இடத்தில் தொழில் செய்து வருபவர்களுக்கு சொந்த இடம் அமையும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவும் எதிர்பார்த்த பொறுப்பும் கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ஒரு சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் என்றாலும், குடும்ப ஸ்தானத்தில் ராகு அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறு  சலசலப்புகள் இருந்து கொண்டிருக்கும். எதிரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படும். மனம் குழப்பம் அடையும் என்பதால் அனைத்திலும் நிதானமாக நடந்து கொள்வதும் கவனமாக செயல்படுவதும் உங்களைப் பாதுகாக்கும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு இதுவரை இருந்த சங்கடம் நீங்கும். பொருளாதார நிலை உயரும் விவசாயிகளுக்கு மனம் குழப்பம் அடையும். எதிர்பார்ப்பு இடுபறியாகும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதும் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 20.அதிர்ஷ்ட நாள்: ஜூன். 17, 26, 29. ஜூலை 2, 8, 11.பரிகாரம்: வக்ர காளி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் செவ்வாய் ஜூன் 19 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். ராசிநாதன் சனி பகவான் சகாய ஸ்தானத்தில் குருப்பார்வையுடன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.  தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மற்றவர்கள் முடியாது என்று கைவிட்ட வேலைகளையும் எடுத்து லாபம் காண்பீர்கள். உங்கள் பாக்யாதிபதி புதன் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் வருமானம் அதிகரிக்கும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியம் மேம்படும். வரவேண்டிய பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வதற்காக வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே வந்து சரண் அடையும் நிலை உருவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாடு செல்ல எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் லாபம்தரும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வயதானவர்களுக்கு உடல்நிலை சீராகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 21.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

கும்பம்அவிட்டம் 3, 4 ம் பாதம்உழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூன் 19 வரை செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை வெற்றி ஆக்கினாலும், அதன்பின் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற நிலை சிலருக்கு உருவாகும். உடல் நிலையிலும் எதிர்பாராத பாதிப்புகள் தோன்றும். நம்பிக்கொண்டிருந்த வருமானங்கள் தள்ளிப் போகும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். வெளியில் என்னதான் செல்வாக்கோடு இருந்தாலும் வீட்டிற்கு வரும்போது உங்கள் மனநிலை பாதிக்கும். நண்பர்களும் உங்களுக்கு எதிராக இருப்பர். புதிய நபர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும். சிலர்மீது தவறான விமர்சனங்களும் எழும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்புவர் என்பதால் இந்த நேரத்தில் முடிந்தவரை ஒவ்வொரு வேலையிலும் கவனமாக இருப்பது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியின் வார்த்தைகளை ஏற்பது அவசியம். சுயதொழில் செய்து வருபவர்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்தமாக இருப்பதால் சங்கடங்கள் நேராமல் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் எதுவும் நடக்கவில்லை என்ற கவலை மேலோங்கும். பெண்களுக்கு உடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் வந்து போகும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 22.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 18, 26, 27. ஜூலை 8, 9.பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.சதயம்எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதம் முழுவதும் உங்கள் சுகாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரன் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் மனதில் ஏதாகிலும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். உடல்நிலையிலும் அவ்வப்போது சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாலினர் நட்பால் சிலருக்கு அவப்பெயரும் ஏற்படும் என்பதால் தங்கள் தகுதியை நினைத்து ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நன்மையாகும். குரு பகவான் சஞ்சாரமும் சாதகமாக இல்லை என்பதால் எதிர்ப்பு அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் உண்டாகும். சிலருக்கு வம்பு வழக்கு என்ற நிலை ஏற்படும் என்றாலும், குருவின் பார்வைகள் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்திற்கும் விரய ஸ்தானமான 12 ம் இடத்திற்கும் கிடைப்பதுடன், 2 ம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவானுக்கும் கிடைப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எதிர்பார்த்த பணம்வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். விரயச்செலவுகள் கட்டுப்படும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். இந்த மாதம் முழுவதும் ஆரோக்கியத்திலும், சுயத்திலும் பெண்கள் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். கணவன் மனைவிக்குள் இணக்கமற்ற நிலை இருக்கும். புதிய நபர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் முடிந்தவரை கவனமாக செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 22, 23.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 26. ஜூலை 4, 8, 13.பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்சிந்தித்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். நண்பர்களும் பகைவராக மாறக்கூடிய நிலை உருவாகும். உடல்நிலையும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். எடுத்த வேலைகள் இழுபறியாகும் என்றாலும், குருப்பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். அரசியல் வாதிகளுக்கு செல்வாக்கை உண்டாக்கும். ஏழரைச்சனியின் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். உங்கள் செல்வாக்கு கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படக்கூடிய நிலை உருவாகும். ஒரு சிலர் உங்களுக்கு எதிராக அவதூறும் பரப்புவர். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையாகும். புதிய இடம் வீடு வாங்கும் போது சட்ட சிக்கல்களை அறிந்து செயல்படுவது அவசியம். களத்திரக்காரகன் சுக்கிரன் ஜூன் 6 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். பெண்களுக்கு வேலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும் என்பதுடன் உடல்நிலையின் காரணமாக அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியதாகவும் இருக்கும். சிலருக்கு தவறானவர்களின் வழிகாட்டுதலால் குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசித்து செயல்படுவது நன்மையாகும். ராகு, கேது, சூரியன், செவ்வாய், சுக்கிரன் என்று பெரும்பாலான கிரகங்கள் உங்களுக்கு எதிர்மறையாக சஞ்சரிப்பதால் ஒவ்வொரு வேலையிலும் எச்சரிக்கை அவசியம். விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்கும் உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள்ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 23.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

மீனம்பூரட்டாதி 4 ம் பாதம்தெளிந்த ஞானமும் திடமான சிந்தனையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தன புத்திரக்காரகனான உங்கள் ராசிநாதன் குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும் அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். விஐபிகள் ஆதரவு ஏற்படும். செய்து வரும் தொழிலில் தோன்றிய தடைகள் விலகும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானால் ஏற்பட்ட பாதிப்புகள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூன் 24.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 30, ஜூலை 3, 12.பரிகாரம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடக்கும் சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதிநினைத்த வேலையை நினைத்த நொடியே நடத்தி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவானுக்கு பூர்வ புண்ணிய குருவின் பார்வைக் கிடைப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து விடுபடுவீர்கள். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மனம் தெளிவாகும். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். உங்கள் சுகாதிபதியும் சப்தமாதிபதியுமான புத பகவான் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் இதுவரை மந்தமாக இருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். வியாபாரிகளுக்கு போட்டி எதிர்ப்பு என்ற நிலை மாறும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் முன்னேற்றமான நிலை ஏற்படும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அவர்களைப் பற்றி நீண்ட நாட்களாக இருந்த கவலை நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் அமையும். செல்வாக்கும் அந்தஸ்து உயரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். தைரியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 24, 25.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 17, 21, 26, 30. ஜூலை 3, 8, 12.பரிகாரம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும்.ரேவதிநிதானமாக செயல்பட்டு மற்றவரால் முடிக்க முடியாத வேலைகளையும் முடித்துக்காட்டும் உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் வித்யா காரகன் புதன் வக்கிரம் அடைந்திருந்தாலும் ஜூலை 8 முதல் வக்கிர நிவர்த்தி அடைவதால் திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கையில் பணம் புரளும். ஜூன் 19 முதல் உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் விலகும். சகோதரர் ஆதரவு கிடைக்கும். ஞான மோட்சக்காரகன் கேது ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் ராசியையும் ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானையும் பார்ப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் விருத்தி அடையும். விவசாயம் செழிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூன் 25, 26.அதிர்ஷ்ட நாள்: ஜூன் 21, 23, 30. ஜூலை 3, 5, 12, 14.பரிகாரம்: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us