sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

25

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 975

குடிநீர் வினியோகம் தொய்வு லோயர்கேம்ப் மக்கள் அவதி

தேனி

19 hour(s) ago

மேஷம்: அசுவினி: நல்லகாலம் வந்தாச்சுஇரத்தக் காரகனான செவ்வாய், ஞான மோட்சக்காரகனான கேது அம்சத்தில் பிறந்து பலருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்துவரும் உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கிறார் குரு பகவான். ஜூலை 7 ல் கடகத்தில் அஸ்தமனம் அடைந்து ஆக. 9 ல் உதயம் ஆகிறார். அக். 20  ல் அதிசாரமாக சிம்மத்திற்கு செல்பவர், டிச. 22 ல் சிம்மத்தில் வக்ரமாகி வக்ர கதியிலேயே 2027. பிப். 13 ல் கடகத்திற்கு வந்து, ஏப். 20 ல் வக்ர நிவர்த்தி அடைபவர் மே 13 ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார்.உங்கள் ராசிக்கு 4 ம் வீட்டில் சஞ்சரிக்கப் போகும் குரு உங்களுக்கு யோகமான பலன்களை வழங்குவாரா என்றுதானே கேட்கிறீர்கள்? பொதுவாக 4 ம் வீட்டில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் இடமாற்றத்தை ஏற்படுத்துவார் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதற்காகவே தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போம்படி ஆனதும் என்று குரு சஞ்சார நிலைகள் குறித்த பாடலில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், உங்கள் ராசி நாதனான செவ்வாய்க்கு குரு நட்பானவர் என்பதால் உங்களுக்கு குரு நன்மைகளையே  வழங்குவார் என்பதுடன், அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பூசம், ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு அஸ்டமம் மற்றும்  ஜீவனம், விரய ஸ்தானங்களைப் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடலில் ஏற்பட்ட சங்கடங்கள், எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். செய்துவரும் வியாபாரம் நடத்திவரும் தொழில் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். விரயச்செலவுகள் கட்டுப்படும். மனக்குழப்பம் விலகும். விரய சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானத்தையும் பார்க்கும் குருவால் உங்கள் செல்வாக்கு, அந்தஸ்து, புகழ் யாவும் உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, ஜூலை 10 முதல் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிக்கிறார். குரு பகவான் வக்ரமடையும் போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களையே ஜாதகருக்கு வழங்குவார் என்பதால், சிம்மத்தில் வக்ரமடையும் காலத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும், கடக ராசியில் சஞ்சரிக்கும்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும் தன் பார்வைகள் வழியே வழங்கி உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார்.பொதுப்பலன்குருப்பார்வைகளும், நவ. 13 வரை லாப ராகுவும், 122 நாட்கள் சூரியனும், 3,6,11ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.தொழில்ஜீவன ஸ்தானத்திற்கும், தொழில் காரகனான சனிக்கும் குருப்பார்வை உண்டாவதால் நஷ்டத்தில் இயங்கிய தொழில்கள் லாபமடையும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில் போட்டியாளர்கள் பலமிழப்பர். வாடகை லீஸ் இடங்களில் தொழில் செய்பவர்கள் அந்த இடத்தை வாங்கும் அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். இயந்திரம், எலெக்ட்ரானிக்ஸ், எக்ஸ்போர்ட், பங்கு வர்த்தகம், திரைத்துறை, கெமிக்கல், காண்ட்ராக்ட், ரியல் எஸ்டேட், விவசாயம் சார்ந்த தொழில்களில் ஆதாயம் கூடுதலாகும்.பணியாளர்கள்வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்குவதுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வரும் சிலருக்கு நிரந்தரக் குடியுரிமையும், அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் ஏற்படும்.பெண்கள்குருப்பார்வைகளால் நீண்டநாள் கனவு நனவாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் லட்சியம் பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் மதிப்பு உயரும்.கல்விபடிப்பில் ஆர்வம் கூடும். உயர் கல்வி என்ற இலக்கை எட்ட முடியும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.உடல்நிலைஉடல்நிலையில் சிறு சிறு சங்கடங்கள் பாதிப்புகள் என்று வந்தாலும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போய்விடும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். வேலையின் காரணமாக பிரிந்திருந்தவர்களும் ஒன்றாக வாழும் நிலை உண்டாகும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். ஆடை ஆபரணம் சேரும். சேமிப்பு உயரும். பிள்ளைகளால் பெருமையும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கும் உண்டாகும்.பரிகாரம்கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் வளம் உண்டாகும்.பரணி: அதிர்ஷ்ட காலம்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், தைரிய வீரிய காரகன் செவ்வாய் அம்சத்தில் பிறந்து உயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் ராசிக்கு 4 ம் இடமான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, 2027. மே 13 ல் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.கடகத்தில் சஞ்சரிக்கும் குரு, இடையில் அஸ்தமனம் அடைவதும், அதிசாரமாக சிம்மத்திற்கு சென்று வக்ரம் அடைந்து வக்ர கதியிலேயே மீண்டும் கடகத்திற்கு வருவதால் அவர் வழங்கும் பலன்களிலும் மாற்றம் இருக்கும். அஸ்தமனம் அடையும் காலத்தில் சஞ்சாரப்பலனையும் பார்வைகளால் வழங்கும் சுபப்பலன்களைகளையும் வழங்க முடியாமல் போகும். அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் பூர்வ புண்ணிய பலன்களுடன் யோகப் பலன்களையும் வழங்குவார். உங்கள் ராசி நாதனான செவ்வாய்க்கு குரு நட்பானவர் என்பதுடன் உங்கள் நட்சத்திரத்திற்கு சாதகமான புனர்பூசம், நட்பான ஆயில்யம், அதிநட்பான மகம் நட்சத்திரங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும், கை பட்டதெல்லாம் துளிர்க்கும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு, தொழில் மற்றும் உத்தியோகத்தின் காரணமாக எதிர்பாராத இடமாற்றத்தை ஏற்படுத்துவார், ஆசையை அதிகரிப்பார், மனதில் சஞ்சலம் உருவாக்குவார். விருப்பப்பட்ட வாகனத்தை வாங்க வைப்பார். நீண்டநாள் கனவுகளையும் முயற்சிகளையும் உங்கள் வசமாக்குவார். இக்காலத்தில்உங்கள் ராசிக்கு 8 ம் வீடான அஸ்டம ஸ்தானத்தையும், 10 ம் வீடான ஜீவன ஸ்தானத்தையும், 12 ம் வீடான விரய ஸ்தானத்தையும் பார்ப்பதால், முதலில் உங்கள் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நோய் நொடி என்று வாழ்ந்த நிலை மாறும். அவமானத்தால் தலைக்குணிந்து வாழ்ந்து வந்த நிலைமாறி தலைநிமிர்ந்து நடைபோடக்கூடிய நிலை உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வியாபாரம் முன்னேற்றமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். செயல்களில் வேகமும் தெளிவும் உண்டாகும். விரயச்செலவுகள் கட்டுப்படும். மனக்குழப்பம் விலகும். விரய சனியால் ஏற்படும் சங்கடங்கள் நீங்கும். அக். 20 முதல் சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், நினைத்ததை சாதிக்க முடியும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். நவீன பொருட்களின் சேர்க்கை ஏற்படும். புதிய வீடு, மனை என்ற கனவு நனவாகும். குழந்தைக்காக தவமிருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் குழந்தைப் பிறக்கும். சிலருக்கு ஆண் குழந்தைப் பிறக்கும். இக்காலத்தில் 9 ம் வீடான பாக்ய ஸ்தானத்தையும், 11 ம் வீடான லாப ஸ்தானத்தையும், 9 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்க்கும் குருவால், நீங்கள் பிறந்த பலனை அடைவீர்கள். நடக்காது என்ற கை விட்ட வேலையெல்லாம் நடக்கும். கிடைக்காது என்று முடிவெடுத்ததெல்லாம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். பட்டம் பதவி என்பதெல்லாம் தேடிவரும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடியே நடக்கும். சிலர் தந்தையின் தொழிலைக் கையில் எடுப்பீர்கள். ஏளனமாகப் பார்த்தவர்களுக்கு மத்தியில் செல்வாக்கோடு நடைபோடுவீர்கள்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். குரு வக்ரமடையும் போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களை வழங்கிடக் கூடியவர் என்பதால், சிம்மத்தில் வக்ரமடையும் காலத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும், கடக ராசியில் சஞ்சரிக்கும்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கும் பலன்களையும் தன் பார்வைகள் வழியே வழங்கி முன்னேற்றத்தை உண்டாக்குவார். பார்வைகளால் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவார்.பொதுப்பலன்குருப்பார்வைகளும், நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், 122 நாட்கள் சூரியனும், 3,6,11ம் இடங்களில் செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்களிலும் நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும்.இடையில் வந்த சங்கடங்கள் போராட்டங்கள் யாவும் விலகும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு அந்தஸ்துடன் பணப்புழக்கமும் உண்டாகும்.தொழில் செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் ஆதரவால் தொழில் விருத்தியாகும். ஆடை ஆபரணம் வாகன விற்பனை எலக்ட்ரானிக்ஸ், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, அழகு சாதனம், நிதிநிறுவனம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மருந்தகம், உணவகம், பெட்ரோலியம், விவசாயம் சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், வழக்குகள் முடிவிற்கு வரும். தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு  நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்குருப் பார்வைகளால் கௌரவமாக வாழக்கூடிய நிலை உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். இணக்கமான நிலை உண்டாகும். இளம் பெண்களுக்கு படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். கணவரைப் பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். சிலருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். பொன் பொருள் சேரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உருவாகும்.கல்விபடிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்வீர்.உடல்நிலைஉடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பு, எதிர்பாராத விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும். மருத்துவச் செலவு குறையும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். டைவர்ஸ் கேட்டு நீதிமன்றம் வரைச் சென்றவர்களும் மனம் மாறுவீர்கள். தம்பதிக்குள் இணக்கம் உண்டாகும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். பிள்ளைகளுக்காக சேமிப்பை உருவாக்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை ஏற்படும். பரிகாரம்அண்ணாமலையாரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். நினைத்தது நடந்தேறும்.கார்த்திகை 1ம் பாதம்: முயற்சி வெற்றியாகும்ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பொதுவாகவே உங்களுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கும். மதிப்போடும் மரியாதையோடும் வாழக்கூடிய நிலை இருக்கும்.கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், இடமாற்றம், தொழில்மாற்றம் என்பதுடன் புதுப்புது முயற்சிகளை முன்னெடுத்து அதில் ஆதாயம் காண்பீர்கள். வீடு, வாகனம், வசதி வாய்ப்புகள் என்று வாழ்க்கை வளமாகும். திருமணம், குழந்தை பாக்யம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும்.2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மே 26 முதல் 3 ம் வீடான கடகத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், பார்த்துவரும் வேலையில் போராட்டம், செய்துவரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை,வருமானத்தில் தடைகளையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாக வைப்பார். உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் சாதக நட்சத்திரமான பூசம் மற்றும் நட்பு நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும்.சஞ்சாரம், பார்வை பலன்1ம் பாதத்தினருக்கு கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 8,10,12 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 9,11 மற்றும் ராசியையும் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு முகூர்த்த நாள் முடிவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடக்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 7,9,11 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது 8,10,12 ம் இடங்களையும் பார்ப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும்.பொதுப்பலன்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில்  நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.தொழில் தொழிலில் இருந்த தடைகள் நெருக்கடிகள் நீங்கும். நஷ்டத்தால் மூடிவைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் திறந்து லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம், ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்தொடர்ந்து போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணம் சேரும்.கல்விபடிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு மருத்துவம், பொறியியல் என்ற லட்சியம் நிறைவேறும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். தீராமல் இருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உண்டாகும்.பரிகாரம்அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷபம் கார்த்திகை 2,3,4: முயற்சி வெற்றியாகும்ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும் உள்ளனர். பொதுவாகவே உங்களுக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கும். மதிப்போடும் மரியாதையோடும் வாழக்கூடிய நிலை இருக்கும்.கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் நிகழும், இடமாற்றம், தொழில்மாற்றம் என்பதுடன் புதுப்புது முயற்சிகளை முன்னெடுத்து அதில் ஆதாயம் காண்பீர்கள். வீடு, வாகனம், வசதி வாய்ப்புகள் என்று வாழ்க்கை வளமாகும். திருமணம், குழந்தை பாக்யம், பட்டம், பதவி என்ற கனவு நனவாகும்.2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு, மே 26 முதல் 3 ம் வீடான கடகத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், பார்த்துவரும் வேலையில் போராட்டம், செய்துவரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை,வருமானத்தில் தடைகளையும், எதிர்பாராத இடமாற்றத்தையும், அலைச்சலையும் ஏற்படுத்துவார். திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி சங்கடத்திற்கு ஆளாக வைப்பார். உங்கள் நட்சத்திராதிபதியான சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் சாதக நட்சத்திரமான பூசம் மற்றும் நட்பு நட்சத்திரமான மகத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும்.சஞ்சாரம், பார்வை பலன்1ம் பாதத்தினருக்கு கடகத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 8,10,12 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 9,11 மற்றும் ராசியையும் பார்ப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். தொழில் முன்னேற்றமடையும். செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு முகூர்த்த நாள் முடிவாகும். 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கடக்தில் சஞ்சரிக்கும் காலத்தில் 7,9,11 ம் இடங்களையும், சிம்மத்தில் சஞ்சரிக்கும்போது 8,10,12 ம் இடங்களையும் பார்ப்பதால் குடும்பத்தில் சுபிட்ச நிலை உண்டாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும்.பொதுப்பலன்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் இக்காலத்தில்  நீங்கள் எடுத்த வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.தொழில் தொழிலில் இருந்த தடைகள் நெருக்கடிகள் நீங்கும். நஷ்டத்தால் மூடிவைக்கப்பட்ட தொழில்களையும் மீண்டும் திறந்து லாபம் காணக்கூடிய நிலை உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர், அலைபேசி, சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம், ஏற்றுமதி இறக்குமதி, கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வழக்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் கிடைக்கும். வழக்கு விவகாரம் சாதகமாகும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்தொடர்ந்து போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வந்தவர்களுக்கு நிம்மதியான நிலை உண்டாகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். கணவரின் ஆதரவு கிடைக்கும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். ஆடை ஆபரணம் சேரும்.கல்விபடிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சிலருக்கு மருத்துவம், பொறியியல் என்ற லட்சியம் நிறைவேறும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று மருத்துவ மனைக்கு சென்று வந்தவர்கள் ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும். தீராமல் இருந்த நோய்கள் மருத்துவத்திற்கு கட்டுப்படும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உண்டாகும்.பரிகாரம்அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.ரோகிணி: செல்வாக்கு உயரும்மனோ காரகனான சந்திரன், அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரன் அம்சத்தில் பிறந்த நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்களாவீர். போராட்டம், நெருக்கடி, பிரச்சனைகளையெல்லாம் வென்றிடக்கூடிய சக்தி கொண்ட உங்களுக்கு குரு பகவான் லாபாதிபதி என்பதுடன், உங்களை சுபிட்சமாக வைத்திருப்பவரும் அவரே, மே 26 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, அதிசாரமாக அக். 20 முதல் உங்கள் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக அக். 20 வரை ஒவ்வொரு வேலைக்கும் கடுமையாக முயற்சிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தேக்கம் ஏற்படும். வருமானத்திலும் பின்னடைவு, கடன் தொல்லை, தைரியமாக செயல்பட முடியாத நிலை, குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். அக். 20 முதல் திடீர் இடமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் உழைப்பையும் அதிகரிப்பார் என்பது பொதுவான விதி என்றாலும், உங்கள் நட்சத்திராதிபதியான சந்திரனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் யோகமான, முன்னேற்றமான பலன்களையே உங்களுக்கு வழங்குவார்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குரு   உங்கள் ராசிக்கு, 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால், குடும்பத்தில் நிம்மதியும் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும் இருக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் மனமறிந்து நடந்து கொள்வர். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். சிலர் புதிய இடம் வீடு என்று வாங்குவீர்கள். பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைப்பதுடன் உங்கள் செல்வாக்கும் உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். வசதியாக வாழக்கூடிய நிலை உருவாகும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 8,10,12 ம் இடங்களைப் பார்ப்பதால், உங்கள் திறமை வெளிப்படும். வாய்ப்புகள் தேடிவரும், உடல்நிலை சீராகும், செய்துவரும் வியாபாரம் மற்றும் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். விரயச்செலவுகளும் அலைச்சலும் குறையும். நிம்மதியான துக்கம் இருக்கும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருப்பார்வைகளால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எடுக்கும் வேலைகள் யாவும் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கிரகப்பிரவேசம், திருமணம், குழந்தை பாக்யம் என்று வீட்டில் சுபிட்சம் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். நவ. 13 முதல் ஞான மோட்சக்காரகன் கேது சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வற்றிய கிணறும் சுரக்கும். பட்ட மரமும் துளிர்க்கும் என்பதுபோல் உங்கள் வாழ்க்கை நிலை உயரும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும்.தொழில் குருப்பார்வைகளும், தொழில் காரகன் சனி பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் தொழிலில் நஷ்டம், கஷ்டம் என்றிருந்த நிலையெல்லாம் மாறும். சிறிய முதலீட்டிலும் லாபம் அதிகரிக்கும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வாகன உற்பத்தி, உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்டஸ்ட்ரீஸ், ஹார்ட்வேர், ஸ்டேஷனரி, அழகு சாதனம், நவீன பொருட்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ், சினிமா, சின்னத்திரை, பங்கு வர்த்தகம், ஆடை ஆபரணம் வளர்ச்சி அடையும், வேளான் சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள், பயம் எல்லாம் விலகும். சிலர் பார்த்துவரும் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்திற்கு மாறுவீர்கள். உங்கள் திறமைக்குரிய மரியாதைக்கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். சிலருக்கு வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்இனம் புரியாத குழப்பத்துடன் எதிர்பார்த்த எந்த ஒன்றும் நடக்கவில்லையே என்ற மன வருத்தத்துடன் வாழ்ந்து வந்தவர்களுக்கு குருப்பார்வைகள் யோகத்தை உண்டாக்கும். குடும்பத்திலும் வேலைப்பார்க்கும் இடத்திலும் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். கணவருடன் ஏற்பட்ட முரண்பாடு விலகும். உடலில் இருந்த சங்கடங்கள் குறையும். ஆரோக்கியமாக நடைபோட முடியும். இளம் பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம், அந்தஸ்து என்ற கனவுகள் நனவாகும். கணவரை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.கல்விகுருப் பார்வைகள் சாதகமாக இருப்பதால் மாணவர்கள் மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். கல்வியின் அவசியம் புரியும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைவேலை பளுவாலும், மன உளைச்சலாலும் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கும், பரம்பரை நோய், தொற்றுநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள்.குடும்பம்பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்கி நிலைமைகளை சமாளித்து வந்தவர்களுக்கு இனி நிம்மதியான நிலை உருவாகும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முடியும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம் என மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். உறவினர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்கள் வளர்ச்சி இருக்கும்.பரிகாரம் உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். வேண்டுதல் பலிதமாகும்.மிருகசீரிடம் 1,2: நல்லதே நடக்கும்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். எடுத்த முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும். குறிக்கோளை எட்ட முடியும்.மிருகசீரிடம் 1,2ம்  பாதத்தினருக்கு மே 26 முதல் 3 ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 4 ம் வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால், செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணியாளர்களுக்கு பார்த்துவரும் வேலை நிலைக்குமா என்ற பயம் உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத தடை ஏற்படும். எடுத்த வேலையை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராகும். மனதில் இனம்புரியாத பயமும், உங்களுக்கு கீழானவர்களால் சிலர் அவமானத்தையும் சந்திக்க நேரும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்பதால் அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமிது. 3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் இடமான சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், உங்கள் நிலையை உயர்த்துவார், செல்வம், செல்வாக்கு அந்தஸ்தோடு வாழ வைப்பார். எடுக்கும் வேலைகளில் வேகம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். எதிலும் வெற்றி என்ற நிலையுடன் எதிர்பாராத பண வரவும் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அனைத்திலும் நிதானம் தேவை. இவையெல்லாம்  பொதுப்பலன்கள் என்றாலும் உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் உங்கள் நிலையில் குரு முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். தாரா பலன் அடிப்படையில் ஷேம தாரையான பூசத்திலும், சாதகத் தாரையான மகத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனால், அவருடைய பார்வைகள்படும் இடங்கள் எல்லாம் யோகத்தை உண்டாக்கும். 1,2ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 7,9,11 ம் இடங்களையும், அக். 20 முதல் 8,10,12 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். புதிய இடம், வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் லாபம்தரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரயச்செலவுகள், அலைச்சல் குறையும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11ம் இடங்களையும் குரு பார்ப்பதால், வம்பு, வழக்கு, நோய் நொடி என்றிருந்த நிலைகள் மாறும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு திருமணம், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் ஆதாயம், புதிய சொத்து, வியாபாரம் தொழிலில் முன்னேற்றம். பணப்புழக்கம் என்று வாழ்க்கை வளமாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.தொழில் தொழில் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை ஆபரணம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், பங்கு வர்த்தகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். ஆட்குறைப்பின் காரணமாக வேலைப் போய்விடுமோ என்ற பயம் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த நிலை மாறும். கணவரின் ஆதரவு உங்களை மதிப்போடு வாழ வைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம் என அவரவர் கனவு நனவாகும். உடல்நிலை சீரடையும்.கல்வி படிப்பில் ஆர்வம் கூடும். உங்கள் திறமையைக் கண்டு பெற்றோர்கள் நீங்கள் விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்ப்பார்கள். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.உடல்நிலைஉடல்நிலையில் தோன்றிய சங்கடங்கடங்கள் விலகும். விபத்து, கடுமையான பாதிப்பு என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் நலமடைந்து வீடு திரும்புவீர்கள். உடல்நிலையின் காரணமாக உங்களுக்கேற்பட்ட பயம் போகும்.குடும்பம்குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும் சொந்த வீடு வாகனம் என்ற கனவு நலவா குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும் வசதி வாய்ப்புகள அதிகரிக்கும்.பரிகாரம்அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில்  இருந்த சங்கடம் நீங்கும்..........

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: நல்லதே நடக்கும்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். எடுத்த முயற்சியில் உறுதியாக இருக்கும் உங்களால் நினைத்ததை சாதிக்க முடியும். குறிக்கோளை எட்ட முடியும்.மிருகசீரிடம் 1,2ம்  பாதத்தினருக்கு மே 26 முதல் 3 ம் வீடான கடகத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 4 ம் வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால், செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும். பணியாளர்களுக்கு பார்த்துவரும் வேலை நிலைக்குமா என்ற பயம் உண்டாகும். வருமானத்தில் எதிர்பாராத தடை ஏற்படும். எடுத்த வேலையை முடிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராகும். மனதில் இனம்புரியாத பயமும், உங்களுக்கு கீழானவர்களால் சிலர் அவமானத்தையும் சந்திக்க நேரும். உழைப்பின் காரணமாக உடல்நிலையில் சிறு சிறு சங்கடம் தோன்றும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும் என்பதால் அனைத்திலும் கவனமாக செயல்பட வேண்டிய காலமிது. 3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும், அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் இடமான சிம்மத்திலும் சஞ்சரிப்பவர், உங்கள் நிலையை உயர்த்துவார், செல்வம், செல்வாக்கு அந்தஸ்தோடு வாழ வைப்பார். எடுக்கும் வேலைகளில் வேகம் இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். எதிலும் வெற்றி என்ற நிலையுடன் எதிர்பாராத பண வரவும் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மனதில் நிம்மதியான நிலை இருக்கும். அக். 20 முதல் அனைத்திலும் நிதானம் தேவை. இவையெல்லாம்  பொதுப்பலன்கள் என்றாலும் உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் உங்கள் நிலையில் குரு முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். தாரா பலன் அடிப்படையில் ஷேம தாரையான பூசத்திலும், சாதகத் தாரையான மகத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்களை அதிகரிப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனால், அவருடைய பார்வைகள்படும் இடங்கள் எல்லாம் யோகத்தை உண்டாக்கும். 1,2ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 7,9,11 ம் இடங்களையும், அக். 20 முதல் 8,10,12 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், குடும்பத்தில் சுபிட்சமான நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் அமையும். புதிய இடம், வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில் லாபம்தரும். திருமண வாழ்க்கையில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விரயச்செலவுகள், அலைச்சல் குறையும். 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11ம் இடங்களையும் குரு பார்ப்பதால், வம்பு, வழக்கு, நோய் நொடி என்றிருந்த நிலைகள் மாறும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். திருமண வயதினருக்கு திருமணம், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, கூட்டுத்தொழிலில் ஆதாயம், புதிய சொத்து, வியாபாரம் தொழிலில் முன்னேற்றம். பணப்புழக்கம் என்று வாழ்க்கை வளமாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வாக்கு உயரும். வசதி வாய்ப்புகள் உருவாகும். வருமானம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும்.தொழில் தொழில் மற்றும் லாப ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த தடைகள் விலகும். முடங்கிக்கிடந்த தொழில்கள் வளர்ச்சி அடையும். சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், கேட்டரிங், ஆடை ஆபரணம், மருந்தகம், கெமிக்கல், பெட்ரோல், நிதிநிறுவனம், பங்கு வர்த்தகம் தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலைப் பார்க்கும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். ஆட்குறைப்பின் காரணமாக வேலைப் போய்விடுமோ என்ற பயம் விலகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் உங்கள் நிலையை உயர்த்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். செல்வாக்கு உயரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த நிலை மாறும். கணவரின் ஆதரவு உங்களை மதிப்போடு வாழ வைக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும். இளம்பெண்களுக்கு உயர்கல்வி, வேலை, திருமணம் என அவரவர் கனவு நனவாகும். உடல்நிலை சீரடையும்.கல்வி படிப்பில் ஆர்வம் கூடும். உங்கள் திறமையைக் கண்டு பெற்றோர்கள் நீங்கள் விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் சேர்ப்பார்கள். சிலர் உயர் கல்விக்காக வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்.உடல்நிலைஉடல்நிலையில் தோன்றிய சங்கடங்கடங்கள் விலகும். விபத்து, கடுமையான பாதிப்பு என்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்கள் நலமடைந்து வீடு திரும்புவீர்கள். உடல்நிலையின் காரணமாக உங்களுக்கேற்பட்ட பயம் போகும்.குடும்பம்குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும் கணவன் மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும் சொந்த வீடு வாகனம் என்ற கனவு நலவா குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும் வசதி வாய்ப்புகள அதிகரிக்கும்.பரிகாரம்அங்காள பரமேஸ்வரியை வழிபட வாழ்வில்  இருந்த சங்கடம் நீங்கும்.திருவாதிரை: யோக காலம்வித்யாகாரகனான புதன், யோகக்காரகனான ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் ஒன்றை நூறாக்கிடக் கூடியவர்கள். எண்ணியதை அடைந்திடும் ஆற்றல்மிக்கவர்கள். சூழ்நிலைகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, குரு  பகவானே ஜீவனாதிபதியாவார். தொழிலுக்கும் முன்னேற்றத்திற்கும் வழிகாட்டியாவார். மே 26 முதல் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, அதிசாரமாக அக். 20 முதல் உங்கள் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக மே. 26 முதல் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நடக்கவே நடக்காது என்று கை விட்ட வேலைகளும் முடிவடையும். உங்களிடம் புதிய வேகம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடக்கும். உறவினர்களுடன் சுமூகமான நிலை உருவாகும். சம்பத் தாரையான புனர்பூசம் நட்சத்திரத்திலும், ஷேம தாரையான ஆயில்யம் நட்சத்திரத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் மேலும் நன்மைகள் கூடும். மேன்மையான நிலை உண்டாகும். அக். 20 முதல் எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படும். சாதாரணமாக நடந்துவந்த வேலைகளையும் கடுமையான முயற்சிகளால் முடிக்க வேண்டியதாக இருக்கும். மனம் குழப்பமடையும். அலைச்சல் அதிகரிக்கும் என்பது பொதுப்பலனாகும். இந்த சமயத்தில் உங்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், யோகமான திசா புத்தி நடந்தால் சங்கடங்கள் எதுவும் உங்களை நெருங்காமல் போகும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 ல் கடகத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு, 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், நோய் நொடி எதிர்ப்பு பகை வம்பு, வழக்கு என்றிருந்த நிலையெல்லாம் மாறும். வழக்கு சாதகமாகும். ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த பயம் போகும். வியாபாரம் மற்றும் தொழில் லாபமடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும்.அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 7,9,11 ம் இடங்களைப் பார்ப்பதால், நட்பு வட்டம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். பெரியோரின் ஆதரவும் தெய்வ பலமும் கூடும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கும் வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சகாய கேதுவும், 120 நாட்கள் உங்கள் சகாய ஸ்தானாதிபதி சூரியனும் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். பட்டம், பதவி, பெருமை என்ற ஆசையை நிறைவேற்றுவர்.தொழில் தன குடும்ப வாக்கு ஸ்தான குருவும், சகாய குருவின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வாடகைக்கும் லீசுக்கும் இடம் எடுத்து தொழில் செய்துவந்த சிலருக்கு அந்த இடத்தையே வாங்கும் நிலை உண்டாகும். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பிரிக்ஸ், பில்டர்ஸ், நிதிநிறுவனம், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஆன்லைன் வர்த்தகம், மருத்துவம், ஐ.டி, ஷேர் மார்க்கெட், வாகன விற்பனை, தொழிற்சாலை, டிராவல்ஸ், பதிப்பகம், கல்வி நிறுவனம், கமிஷன் ஏஜென்சி, சினிமா, சின்னத்திரை, வலைதளம், ஏஐ தொழில், மற்றும் வேளாண்மை வளர்ச்சி அடையும் மற்ற தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும்.கலைஞர்கள் நிலை உயரும்.பணியாளர்கள் அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகமாகப் பணியாற்றி வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு நிறுவனத்தில் வேலையில் சேருவீர்கள். சம்பள உயர்வுடன் எதிர்பார்த்த சலுகைகளும் கிடைக்கும்.பெண்கள்எந்த ஒன்றிலும் முன்னேற்றம் இல்லை, எந்தப்பக்கம் போனாலும் பிரச்சனை ஏற்றிருந்த நிலையெல்லாம் மாறும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். பொன் பொருள் சேரும். உறவுகளுடன் இணக்கம் ஏற்படும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். உடல் நிலையில் ஆரோக்கியம் கூடும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.கல்வி இயல்பாகவே படிப்பில் வல்லவரான உங்களுக்கு, இக்காலத்தில் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல்நிலையில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சூரியனைக்கண்ட பனிபோல் இருந்த இடம் தெரியாமல் போகும். தொற்றுநோய், பரம்பரை நோய், பருவநோய் என்று அவதிப்பட்டு வந்தவர்களுக்கு உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். மருத்துவச. செலவுகள் குறையும்.குடும்பம்என்னதான் முன்னேற்றம் இருந்தாலும், கையில் பணம் புழங்கினாலும், குடும்பத்தில் நிம்மதி இல்லையே என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பர். சமூகத்தில் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு வாகனம் பொன் பொருள் சேரும். பிள்ளைகளுக்கு உயர்கல்வி, திருமணம் என குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறுவீர்கள்.பரிகாரம் திருவாலங்காடு காளியை வழிபட வாழ்வில் இருந்த சங்கடங்கள் விலகும். நினைத்தது நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: நினைப்பது நடந்தேறும்ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். சாதுரியமாக செயல்பட்டு சாதித்திடக்கூடிய நீங்கள் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் உங்கள் வாழ்க்கை வளமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். சோர்ந்து கிடந்தவர்களும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். வராமல் இருந்த பணம்வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். அக். 20 முதல், செய்துவரும் தொழிலில் சின்னச்சின்ன நெருக்கடிகள், தடைகள் ஏற்படும், வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும், எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் போகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்பது பொதுவிதியாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜென்ம குருவாகவும், அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால் மே 26 முதல்,  பார்த்துவரும் வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். நன்றாகப் பழகி வந்தவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். தொழிலிலும் சிலருக்கு பிரச்சனைகள் உண்டாகும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போகும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். இழந்த பொருளெல்லாம் கைக்கு வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஸம்பத்து தாரையான பூசம் மற்றும் ஷேமத் தாரையான மகத்தில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் கூடும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் சஞ்சரிக்கும் இடங்களைவிட பார்க்கும் இடங்களை சுபிட்சமாக்கிடக்கூடியவர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10 ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுத்த வேலைகள் ஜெயமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். புதிய இடம், வீடு வாங்க முடியும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயம் கூடும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 5,7,9 ம் இடங்களையும், அக். 20 முதல் 6,8,10 ம் இடங்களையும் குரு பாரப்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம், வசதி வாய்ப்பு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலைகள் முடியும். அனைத்திற்கும் சூழ்நிலை சாதகமாகும். சொந்த தொழில், சிலருக்கு தகுதியான வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் கூடும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.தொழில் தொழில் ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வைகள் கிடைப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கவனமாக செயல்பட்டு லாபம் காணக்கூடிய நிலை உருவாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ, அலைபேசி சம்பந்தப்பட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், அழகு சாதனப் பொருட்கள், கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வெளிநாட்டு மோகம் குறையும். வெளிநாட்டில் வேலைப் பார்த்துவரும் சிலர் சொந்த ஊர் நோக்கி வரக்கூடிய நிலை உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கூடும்.பெண்கள் மனரீதியாக சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எந்த ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லை என்றக் குறை விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ற தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.கல்வி வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உங்களைப்பற்றி பல்வேறு முடிவுகளுக்கு வந்தாலும், படிப்பில் அக்கறை கொண்டவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள். எதிர்காலம் என்பது படிப்பினால்தான் என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல் நிலையில் இருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய் என்று அவ்வப்போது சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய நிலை உருவாகும். மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்த நிலை மாறும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்துவரை சென்றவர்களும் பெரியோரின் அறிவுரைகளால் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக் கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம்நெல்லையப்பரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் கூடும்....................

கடகம்புனர்பூசம் 4: நினைப்பது நடந்தேறும்ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான கடகத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர். சாதுரியமாக செயல்பட்டு சாதித்திடக்கூடிய நீங்கள் பிறருக்கு வழிகாட்டுபவர்களாகவும் இருப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2 ம் வீடான தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக உங்கள் ராசிக்கு 3 ம் வீட்டில் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் உங்கள் வாழ்க்கை வளமாகும். தொட்டதெல்லாம் துலங்கும். நினைத்ததெல்லாம் நடந்தேறும். சோர்ந்து கிடந்தவர்களும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். வராமல் இருந்த பணம்வரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைத்தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செல்வாக்கு உயரும். அக். 20 முதல், செய்துவரும் தொழிலில் சின்னச்சின்ன நெருக்கடிகள், தடைகள் ஏற்படும், வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும், எடுத்த வேலைகளை முடிக்க முடியாமல் போகும். வருமானத்தில் தடையுண்டாகும் என்பது பொதுவிதியாகும். 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜென்ம குருவாகவும், அக். 20 முதல் அதிசாரமாக தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால் மே 26 முதல்,  பார்த்துவரும் வேலையின் காரணமாக குடும்பம் ஓரிடம், தான் ஓரிடம் என்று வசிக்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். எந்த ஒன்றிலும் யோசிக்காமல் செயல்பட்டு சங்கடத்திற்கு ஆளாக நேரும். சிலருக்கு குடும்பத்திலும் நிம்மதி இல்லாமல் போகும். நன்றாகப் பழகி வந்தவர்களும் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்று விடுவார்கள். தொழிலிலும் சிலருக்கு பிரச்சனைகள் உண்டாகும். வருமானம் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காமல் போகும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். இழந்த பொருளெல்லாம் கைக்கு வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். ஸம்பத்து தாரையான பூசம் மற்றும் ஷேமத் தாரையான மகத்தில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் யோகப்பலன்கள் கூடும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் சஞ்சரிக்கும் இடங்களைவிட பார்க்கும் இடங்களை சுபிட்சமாக்கிடக்கூடியவர். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 6,8,10 ம் இடங்களையும், அக். 20 முதல் 7,9,11 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு ஜெயமாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். எடுத்த வேலைகள் ஜெயமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி மேற்கொண்டவர்களுக்கு வேலைக்கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவால் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். புதிய இடம், வீடு வாங்க முடியும். அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயம் கூடும். சேமிப்பு உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். 4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 5,7,9 ம் இடங்களையும், அக். 20 முதல் 6,8,10 ம் இடங்களையும் குரு பாரப்பதால், குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம், வசதி வாய்ப்பு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். எடுத்த வேலைகள் முடியும். அனைத்திற்கும் சூழ்நிலை சாதகமாகும். சொந்த தொழில், சிலருக்கு தகுதியான வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் கூடும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளோர் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பணவரவு அதிகரிக்கும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.தொழில் தொழில் ஸ்தானத்திற்கும் லாப ஸ்தானத்திற்கும் குருவின் பார்வைகள் கிடைப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபமடையும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். கவனமாக செயல்பட்டு லாபம் காணக்கூடிய நிலை உருவாகும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., ஏ.ஐ, அலைபேசி சம்பந்தப்பட்ட தொழில்கள், ஏற்றுமதி இறக்குமதி, பங்கு வர்த்தகம், நிதி நிறுவனம், தொழிற்சாலை, ட்ராவல்ஸ், குடிநீர், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரியல் எஸ்டேட், அழகு சாதனப் பொருட்கள், கமிஷன் ஏஜென்சி தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வெளிநாட்டு மோகம் குறையும். வெளிநாட்டில் வேலைப் பார்த்துவரும் சிலர் சொந்த ஊர் நோக்கி வரக்கூடிய நிலை உருவாகும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கூடும்.பெண்கள் மனரீதியாக சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். எந்த ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லை என்றக் குறை விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ற தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கணவரின் ஆதரவு அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.கல்வி வெளியில் இருந்து பார்ப்பவர்கள் உங்களைப்பற்றி பல்வேறு முடிவுகளுக்கு வந்தாலும், படிப்பில் அக்கறை கொண்டவர்களாகவே நீங்கள் இருப்பீர்கள். எதிர்காலம் என்பது படிப்பினால்தான் என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். மேல் நிலையில் இருந்து உயர்கல்விக்கு செல்லக்கூடிய நிலை உருவாகும். எதிர்பார்த்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய் என்று அவ்வப்போது சங்கடப்பட்டு வந்த உங்களுக்கு இக்காலத்தில் அவற்றிலிருந்து வெளிவரக்கூடிய நிலை உருவாகும். மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சென்று வந்த நிலை மாறும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பிரச்சனைகள் எல்லாம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். விவாகரத்துவரை சென்றவர்களும் பெரியோரின் அறிவுரைகளால் மீண்டும் இணைந்து வாழக்கூடிய நிலை உருவாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்திடக் கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட வேண்டுதல் நிறைவேறும். வாழ்வில் வளம் கூடும்.பூசம்: முயற்சி வெற்றியாகும்மனக்காரகனான சந்திரன், கர்மக்காரகனான சனியின் அம்சத்தில் பிறந்த நீங்கள், தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லமையாளர்கள். உங்களுக்கு குரு பகவான் பாக்யாதிபதி மட்டும் அல்ல உங்கள் ராசிநாதனுக்கும் நட்பானவர். மே 26 முதல் உங்கள் ஜென்ம ராசியில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார். பொதுவாக, ஜென்ம குரு அலைச்சலை அதிகரிப்பார், பிரிவினையை ஏற்படுத்துவார் என்று கூறப்பட்டாலும் கடகம், தனுசு, மீனம் ராசிக்குள் அவர் சஞ்சரிக்கும் காலங்களில் மட்டும் அந்த ராசியினருக்கு யோகத்தையே ஏற்படுத்துவார். அந்த நிலையில் மே 26 முதல், கடக குருவால் உங்கள் வாழ்க்கை ஏற்றமடையும். எண்ணிய வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். அக். 20 முதல் இரண்டாமிடமான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். செய்துவரும் தொழில் லாபம் தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும் என்பது பொதுவான விதியாகும். உங்கள் நட்சத்திராதிபதி சனியும், ராசியாதிபதிகள்  சந்திரனும் சூரியனும் குருவிற்கு நட்பானவர்கள் என்பதால் நீங்கள் எடுக்கும் வேலையெல்லாம் இக்காலத்தில் வெற்றியாகும். புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் குரு சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு, 5,7,9 ம் இடங்களைப் பார்ப்பதால், பெரியோரின் ஆதரவும் குலதெய்வத்தின் அருளும் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். குழந்தை பாக்யத்திற்காக தவமிருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் வாரிசு வந்து பிறக்கும். திருமண வயதினருக்கு வரன் வருவதுடன் திருமணமும் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றாக வாழும் நிலை உருவாகும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் முடிவிற்குவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். வேலைக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். சொந்தத் தொழில் என்ற கனவு நனவாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குரு பகவானின் சஞ்சாரமும் அவருடைய பார்வைகளும் சாதகமாக இருப்பதுடன், பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும் குரு பார்ப்பதால் இக்காலம் உங்களுக்கு யோகமான காலமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். மனதில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பொருளாதார நிலை உயரும். புதிய தொழில்,  எதிர்பார்த்த வேலை, வசதியான வீடு, என்ற எண்ணமெல்லாம் நிறைவேறும். திருமண வயதினருக்கு திருமணம், சிலருக்கு குழந்தை பாக்யம், பட்டம் பதவி, கௌரவம், அந்தஸ்து என்ற கனவெல்லாம் நனவாகும்.தொழில் மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தொழில்காரகன் சனிக்கும், அக். 20 முதல் தொழில் ஸ்தானத்திற்கும் குருப்பார்வை உண்டாவதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். முடங்கிக்கிடந்த தொழில்கள் இயங்க ஆரம்பிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இயந்திரத் தொழிற்சாலை, வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன விற்பனை, ஐ.டி., ஏ.ஐ, வெளிநாட்டு வர்த்தகம், ஏஜென்சி, டிராவல்ஸ், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, பால் வியாபாரம், ஜுவல்லரி தொழில்கள், சட்டம் சார்ந்த தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள்உழைப்பாளர்கள் திறமைக்கு மதிப்புண்டாகும். சிலர் சம்பள உயர்வு மற்றும் சலுகைகளுக்காக தற்போது வேலைப்பார்க்கும் நிறுவனத்தை விட்டுவிட்டு வேறு நிறுவனத்தில் சேர்வீர்கள். வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். குழப்பம் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள் பெண்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சி மிகப்பெரிய யோகப் பலன்களை உண்டாக்கும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவருக்குரிய தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் விலகும். அதிர்ஷ்ட. வாய்ப்புகள் தேடிவரும். உடல்நிலை சீராகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். வேலைப்பார்த்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு உயரும்.கல்வி படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி என்ற கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளிநாடு வெளி மாநிலம் என்றும் செல்வீர்கள்.உடல்நிலைநோய் நொடி மருத்துவச்செலவு என்றிருந்த நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்வீண் செலவுகள், குடும்பத்தில் நெருக்கடி, எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவீர்கள்.பரிகாரம்சொர்ண ஆகர்ஷன பைரவரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும்வித்யாகாரகனான புதன், மனக்காரகனான சந்திரன் அம்சத்தில் பிறந்த நீங்கள், எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். பிறரால் சாதிக்க முடியாதவற்றை சாதித்திடக் கூடியவர்கள். எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உங்கள் நட்சத்திராதிபதி புதனுக்கு குரு பகையானவர் என்றாலும், ராசியாதிபதியான சந்திரனுக்கு நட்பானவர் என்பதுடன் இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, நட்பு, அதிநட்பு, ஸாதக தாரைகள் என்பதால்மே 26 முதல் உங்கள் ராசிக்குள் உச்சமாக சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான சிம்மத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் காலத்திலும் யோகப்பலன்களையே வழங்குவார்.ஜென்ம குருவின் காலம் அலைச்சலையும் சங்கடத்தையும் போராட்டத்தையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்றாலும், அவை எல்லாமும் உங்கள் வளர்ச்சிக்கானதாகவும், வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காகவும், முன்னேற்றத்திற்குமானதாகவே இருக்கும். கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அடி மட்டத்தில் இருப்பவரையும் உச்சத்திற்கு கொண்டு செல்வார். சாதாரணமாக வாழ்ந்தவர்களையும் செல்வாக்கோடு வாழ வைப்பார்.அக். 20 முதல் உங்கள் ராசிக்கு தன குடும்ப வாக்கு ஸ்தானமான, தனக்கு நட்பு வீடான சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, பொருளாதார நிலையை உயர்த்துவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். வேலையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்குரிய வழிகளை அமைத்துக் கொடுப்பார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் சஞ்சரிக்கும் இடத்தைவிட அவர் பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது விதி. மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள்  உங்கள் ராசிக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு உண்டாவதால், குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி மகிழ்ச்சி நிலவும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். செய்துவரும் தொழில் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாலினரால் மகிழ்ச்சியான நிலை உருவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன்வரும். எதிர்பாலினரின் ஆதரவு அதிகரிக்கும். அவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியும், பணவரவும் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். தொழில் லாபம்தரும். மாணவர்களுக்கு உயர்கல்வி கனவு நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதுவும் மனதிற்கு விருப்பமானதாக இருக்கும். புதிய வீட்டில் பால் காய்ச்சிடக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படும். பழைய வீட்டில் இருந்து வசதியான வீட்டிற்கு மாறிடக்கூடிய நிலை ஒரு சிலருக்கு உருவாகும். சமூகத்தில் மதிப்பும் மரியாதை அதிகரிக்கும். அக். 20 முதல்  சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 6,8,10 ம் இடங்களைப் பார்ப்பதால், நோய் நொடி என்று வாழ்ந்த நிலைமாறும். வீண் செலவுகள் குறையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விரோதிகள் தொல்லை இருந்த இடம் தெரியாமல் போகும். மனம் உற்சாகம் அடையும். பணவரவு கூடும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். எந்த நேரத்திலும் பயத்தோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய நிலை உண்டாகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலைக்கிடைக்கும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குரு பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதுடன், உங்கள் தன குடும்பாதிபதி சூரியன் 120 நாட்கள் யோகப்பலன்களை வழங்கிட இருப்பதால், எடுக்கும் வேலைகள் எல்லாம் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம் தொழில் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம் வீடு வாகனம் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும் மற்றவர்களுக்கு பயந்து வாழ்ந்து வந்த நிலை மாறும்.தொழில் கடகம் மற்றும் சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் சாதகமாக இருப்பதால்,செய்துவரும் தொழில் முன்னேற்றம்  அடையும். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். பால் பண்ணை, நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், காலண்டர், டைரி, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, செய்தித்தாள், ஐ.டி., ஏ.ஐ துறைகள், வெளிநாட்டு வர்த்தகம், குடிநீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், மினரல் வாட்டர், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சின்னத்திரை, வலைதளம், தனியார் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ஆட்குறைப்பின் காரணமாக வேலையில் ஏற்பட்ட பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் அறிந்து எதிர்பார்த்த சலுகைகளை வழங்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு நிறுவனத்திற்கு செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் விலகும் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய மாற்றம் ஏற்படும்.பெண்கள்உடல் நிலையிலும் மனநிலையிலும் பாதிப்பினை சந்தித்து வந்தவர்களின் சங்கடங்கள் விலகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு உயர்கல்வி எண்ணம் நிறைவேறும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யம் இல்லாமல் கவலைப்பட்டு வந்தவர்களின் ஏக்கம் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆடை ஆபரணம், வாகனம் சேரும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.கல்விமாணவர்களுக்கு படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். பொதுத் தேர்விலும், போட்டி தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், குரு பகவானின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். விபத்தின் காரணமாக ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும்குடும்பம்நீண்டநாள் முயற்சிகள் வெற்றி அடையும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். குடும்ப நலனிலும் குழந்தைகள் மீதும் அக்கறை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். சேமிப்பு அதிகரிக்கும்.பரிகாரம் பூவராகப் பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். வேண்டுதல் பலிதமாகும்..........

சிம்மம்: மகம்: விடாமுயற்சி வெற்றிதரும்ஞான மோட்சக் காரகனான கேது, ஆத்மக் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள், எடுத்த வேலைகளில் உறுதியாக இருப்பவர்கள். நீதி நியாயம் நேர்மை தவறாதவர்கள். பிறருக்கு சிம்ம சொப்பனமாகவும் திகழக்கூடியவர்கள். எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் செல்வாக்குடன் திகழக்கூடியவர்கள். உங்கள் ராசியாதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதியும் குருவே ஆவார். இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால், மே 26 முதல் உங்கள் ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிக்கும் காலத்திலும் நற்பலன்களையே வழங்குவார்.விரய குருவின் காலம் செலவுகளை அதிகரிக்கும். அலைச்சலை உண்டாக்கும். செய்துவரும் தொழிலில் நெருக்கடியை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்றத் தொல்லைகளையும், விரும்பாத இடத்திற்கு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது பொது விதியாக இருந்தாலும், உங்கள் ராசிநாதனுக்கு குரு நட்பானவர் என்பதால் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்க மாட்டார். அக். 20 முதல் அதிசாரமாக உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக சஞ்சரிப்பவர், பூர்வ புண்ணிய பலன்களை வழங்குவார். திட்டமிட்டு செயல்பட வைப்பார். வியாபாரம், தொழில், உத்தியோகத்தின் காரணமாக வெளியூர் பயணங்களை அதிகரிப்பார். சிலருக்கு தான் ஓரிடம் குடும்பம் ஓரிடம் என்று வாழவேண்டிய நிலை உருவாகும். வருமானம், அந்தஸ்து என உங்கள் கவனம் செல்லும். சிலருக்கு புதிய சொத்துகள் சேரும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பார்க்க கோடி புண்ணியம் என்பதால், அவர் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களைப் பலப்படுத்துவார் என்பது விதி. மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள்   உங்கள் ராசிக்கு, 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால், மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். சொந்த வீடு, வாகனம் அமையும். நோய் நொடி என்று வாழ்ந்த நிலை மாறும். கடன் தொல்லை நீங்கும். வீண் செலவுகள் குறையும். தொழிலில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விரோதிகள் தொல்லை விலகும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் சாதகமாகும். பணவரவு கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அக். 20 முதல், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு, 5,7,9ம் இடங்களைப் பார்ப்பதால், உங்கள் நிலை உயரும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். ஆடை ஆபரணம் சேரும். வசதி வாய்ப்புகள் உண்டாகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். கூட்டுத்தொழில் லாபம்தரும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். திருமணத்தடை விலகும். புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். உங்களுக்கென்று தனி கௌரவம் அந்தஸ்து ஏற்படும். சிலர் வசதியான வீட்டில் குடியேறுவீர்கள்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், ஆரோக்கியம் சீராகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். புதிய நிலம், வாகனம், வீடு என்று சேரும். இதுவரை உங்களுக்கிருந்த பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். வாழ்வில் புதிய நம்பிக்கைப் பிறக்கும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.தொழில்அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தொழில்காரகன் சனிக்கு, மே 26 முதல் குருப் பார்வை உண்டாவதால் செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் வளர்ச்சி அடையும். பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், ஐ.டி., ஏ.ஐ., கால்நடை, இயந்திரத்தொழில், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ரியல் எஸ்டேட், ஹார்ட்வேர், ஷேர் மார்க்கெட், சினிமா, சின்னத்திரை, ஜுவல்லரி, ஆடை வணிகம், செய்தித்தாள், மீடியா, காலண்டர், டைரி, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை உண்டாகும். நிர்வாகத்தால் பாராட்டப்படுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். பகுதி நேரமாகவும், தினக்கூலிகளாகவும் பணியாற்றி வந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்ஜென்ம ராசிக்குள் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சனி என உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், குருவின் சஞ்சாரமும் பார்வைகளும் அதிலிருந்து உங்களை மீட்டெடுக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வேலைப் பார்க்கும் இடத்தில் அடைந்த சங்கடங்கள் நீங்கும். திறமைக்கும் தகுதிக்கும் மரியாதை ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.கல்விபாக்ய ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலை மே 26 முதல் சுகம், ருண ரோகம், அஷ்டம ஸ்தானங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், பரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். மருத்துவச்செலவுகள் குறையும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, போராட்டம் பிரச்சனை கடன்தொல்லை, நோய் நொடி என்று வாழ்ந்து வந்தவர்களுக்கு இக்காலத்தில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கோடு வாழும் நிலை உண்டாகும்.பரிகாரம் காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மை உண்டாகும்.பூரம்: குருப்பார்வையால் நன்மைஅதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், ஆத்மக்காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த நீங்கள், நினைத்ததை சாதிப்பதில் வல்லவர்கள், எதிரிகளை வீழ்த்துகின்ற சாமர்த்திய சாலிகள், எடுத்த வேலையை முடித்திடக்கூடிய சக்தி மிக்கவர்கள், கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதுபோல் பூரத்தில் பிறந்தவர்களுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு என்று சொல்லக்கூடிய அளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள் நீங்கள். உங்கள் நட்சத்திராதிபதி சுக்கிரன் குருவிற்கு பகையானவர் என்றாலும், ராசியாதிபதி சூரியனுக்கு நட்பானவர். இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி, ஸாதகம், நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால், மே 26 முதல் உங்கள் ராசிக்கு 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்திலும், அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் காலத்திலும் நற்பலன்களையே வழங்குவார் குரு.மே 26 முதல் விரய குருவின் காலம் தொடங்குவதால் அலைச்சல் அதிகரிக்கும், செலவுகள் கூடும், தொழிலில் பின்னடைவு ஏற்படும், உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டு வேலை நிமித்தமாக சிலருக்கு வெளியூர் செல்லும் நிலை ஏற்படும், மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணியாதிபதி குரு பகவான் என்பதால் அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் அனைத்திலும் முன்னேற்றத்தையே ஏற்படுத்துவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் சிலருக்கு ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படும். செய்துவரும் தொழிலின் காரணமாகவும், பார்த்துவரும் வேலையில் ஏற்படும் மாறுதலாலும் குடும்பம் ஓரிடம் தான் ஓரிடம் என்று வாழ வேண்டிய நிலை உருவாகும் என்றாலும், இக்காலத்தில்தான் எல்லாவிதமான பாக்யங்களும் கிடைக்கும். இடம், வீடு, வாகனம், திருமணம், குழந்தை பாக்யம், வேலை என வாழ்க்கையின் அத்தனை லட்சியங்களும் நிறைவேறும்.சஞ்சாரம், பார்வை பலன்மே 26 அன்று கடகத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு, 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால், உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலும் வேலையிலும் ஏற்பட்ட எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சிலர் புதிதாக இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப மாற்றி அமைப்பீர்கள். இதுவரை சந்தித்த பிரச்சனைகள் உங்களைவிட்டு விலகும். வாழ்வில் புதிய நம்பிக்கை உண்டாகும். நஷ்டத்தில் இயங்கிவரும் தொழில் மீண்டும் வளர்ச்சி அடையும். அக். 20 முதல், ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு 5,7,9ம் இடங்களைப் பார்ப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உறவுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தோரின் வேண்டுதல் நிறைவேறும். சிலருக்கு இரண்டாவது குழந்தை சுபமாக பிறக்கும். திருமணத்தில் தடையை சந்தித்து வருபவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். சிலருக்கு மறுமணமும் நடந்தேறும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேரும் நிலை ஏற்படும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு, வாகனம், செல்வாக்கு, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருப்பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப கடகம் மற்றும் சிம்ம ராசிகளில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் உங்கள் வாழ்வை வளமாக்கும். நவ. 13 முதல் யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். ஜென்ம ராசியை விட்டு கேது விலகுவதால் மனதில் இருந்த குழப்பம் விலகும். பயம் போகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். பொருளாதார நிலை உயரும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை அந்தஸ்து கிடைக்கும்தொழில் பூரத்தில் பிறந்தவர் போராட்டத்திலும் சாதிப்பர். போராடியும் சாதிப்பர் என்பதால், எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவர்களாக இருப்பீர்கள். செய்யும் தொழிலில் ஜெயித்துக் காட்டுவீர்கள். இக்காலத்தில் குருவின் பார்வைகளுடன், 135 நாட்கள் செவ்வாய், 120 நாட்கள் சூரியனின் சஞ்சாரங்களும் சாதகமாக இருப்பதால் செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். ஜுவல்லரி, ஃபேன்சி ஸ்டோர், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆடை வணிகம், கவரிங் நகைகள், வாகன விற்பனை, உதிரி பாகங்கள் விற்பனை, பியூட்டி பார்லர், நவீன சாதனங்கள், ஸ்பா, உடற்பயிற்சிக் கூடங்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப் தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு வேலையின் மீது பயம் ஏற்படும். சிலர் சொந்த ஊருக்குத் திரும்பும் நிலையும் உருவாகும். உள்நாட்டில் வேலைப் பார்ப்பவர்கள் திறமைக்கேற்ற உயர்வும் சலுகையும் பெறுவர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்போராட்டமும் பிரச்சனையாகவும் இருந்த வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவால் நீண்டநாள் கனவுகள் நனவாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் வயதிற்கேற்ப தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொன் பொருள் சேரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமான நிலை உண்டாகும்.கல்வி படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்விக்காக சிலர் வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலை குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதுடன், நவ. 13 முதல் ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வந்த நோய்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். நீண்டநாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்து, பரம்பரைநோய், தொற்றுநோய், பருவநோய் என்று சங்கடப்பட்டு வந்தவர்களுக்கு ஆரோக்கியம் சீராகும். மருத்தவச்செலவுகள் குறையும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். கடன் தொல்லை விலகும். வருமானம் அதிகரிக்கும். சொந்த இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வீட்டில் மங்கள ஓசை கேட்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும்.பரிகாரம்மகாலட்சுமியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். சிரமம் நீங்கும்.உத்திரம் 1: தொழிலில் முன்னேற்றம்ஆத்மக்காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். துணிச்சலாகவும், அதே நேரம் திட்டமிட்டும், சூழ்நிலை அறிந்தும் செயல்படக்கூடிய நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவராக இருப்பீர்கள்.உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வீண் செலவு, அலைச்சல், செய்துவரும் தொழிலில் போராட்டம், பார்த்துவரும் வேலையில் நெருக்கடி, சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையினை ஏற்படுத்துவார் என்பது பொது விதியாக இருந்தாலும் உங்களுக்கு அவரே பூர்வ புண்ணியாதிபதி என்பதால் உங்கள் கனவுகளையும் நனவாக்குவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உழைப்பு கூடும். வருமானத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாலும் சிலர் வேலை மற்றும் தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வசிக்க நேரும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் லாப குருவாகவும், அக். 20 முதல் 12ம் வீடான விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நேரம் சாதகமாகும். புதிய வீடு, சொத்து என வாங்கும் நிலை உண்டாகும். அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று வருத்தப்படநேரும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். தொழிலில் போட்டி, எதிர்ப்பு என ஏற்படும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பாத இடத்திற்கு  மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு நட்சத்திரம் என்பதால் சோதனைகளும் சாதனைகளாகும். செய்யும் செலவுகளும் வாழ்வின் ஆதாரமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான், தான் பார்க்கும் இடங்களுக்கு யோகப்பலன்களை வழங்கிடக்கூடியவர். அதன் காரணமாகவே குருப் பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4,6,8 ம் இடங்களையும், அக். 20 முதல் 5,7,9ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் நிலவிய போட்டி, எதிர்ப்பு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் நிம்மதியான நிலை உருவாகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்குவரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  இதுவரை சந்தித்த பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு வாகனம் செல்வாக்கு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7ம் இடங்களையும், அக். 20 முதல் 4,6,8ம் இடங்களையும் குருப் பார்ப்பதால், வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். சூழ்நிலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவர். வருமானம் உயரும். சொந்த வீடு வாகனம் அமையும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் நட்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிலர் புதிதாக நிலம் வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டைப் பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருவின் பார்வைகளும், செவ்வாய் சூரியன் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். செய்துவரும் தொழில் லாபம் அடையும் பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும்.தொழில் உத்திரத்தில் பிறந்தவர் உறுதியானவர் என்பதுடன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருந்திடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழில்மீது அக்கறையும் பக்தியும் இருக்கும். ஷேர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ., கம்ப்யூட்டர், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆன்லைன் வர்த்தகம், நிதி நிறுவனம், ரெடிமேட்ஸ், அழகு சாதனம், வாகன விற்பனை, பப்ளிகேஷன் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற மதிப்பும் ஊதியமும் கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் உயர்வும் கிடைக்கும்.பெண்கள்கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் தேடிவரும்.கல்வி படிப்பில் பின் தங்கியிருந்த மாணவர்களும் இக்காலத்தில் முன்னேற்றம் அடைவர். பொதுத்தேர்விலும், போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானுக்கு குருப் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.  தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து சென்று வந்தவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், சூரியன் செவ்வாய் சஞ்சார நிலைகளும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். சொந்த வீடு வாகனம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பொன் பொருள் சேரும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4: தொழிலில் முன்னேற்றம்ஆத்மக்காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1 ம் பாதமான சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன் ராசி நாதனாகவும், 2,3,4ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும் உள்ளனர். துணிச்சலாகவும், அதே நேரம் திட்டமிட்டும், சூழ்நிலை அறிந்தும் செயல்படக்கூடிய நீங்கள் நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவராக இருப்பீர்கள்.உத்திரம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12 ம் வீடான விரய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 ல் அதிசாரமாக ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வீண் செலவு, அலைச்சல், செய்துவரும் தொழிலில் போராட்டம், பார்த்துவரும் வேலையில் நெருக்கடி, சிலருக்கு விரும்பாத இடத்திற்கு மாற்றம், ஊர்விட்டு ஊர் செல்லும் நிலையினை ஏற்படுத்துவார் என்பது பொது விதியாக இருந்தாலும் உங்களுக்கு அவரே பூர்வ புண்ணியாதிபதி என்பதால் உங்கள் கனவுகளையும் நனவாக்குவார். அக். 20 முதல் உங்கள் ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால் குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். உழைப்பு கூடும். வருமானத்திற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாலும் சிலர் வேலை மற்றும் தொழில் காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூரில் வசிக்க நேரும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் லாப குருவாகவும், அக். 20 முதல் 12ம் வீடான விரய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பவரால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு நேரம் சாதகமாகும். புதிய வீடு, சொத்து என வாங்கும் நிலை உண்டாகும். அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லை என்று வருத்தப்படநேரும். உடல்நிலையும் ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். தொழிலில் போட்டி, எதிர்ப்பு என ஏற்படும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பாத இடத்திற்கு  மாற்றம் ஏற்படும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் என்பது பொதுவான விதியாக இருந்தாலும், உங்கள் நட்சத்திராதிபதி சூரியனுக்கு குரு நட்பானவர் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு நட்சத்திரம் என்பதால் சோதனைகளும் சாதனைகளாகும். செய்யும் செலவுகளும் வாழ்வின் ஆதாரமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான், தான் பார்க்கும் இடங்களுக்கு யோகப்பலன்களை வழங்கிடக்கூடியவர். அதன் காரணமாகவே குருப் பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். உத்திரம் 1ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 4,6,8 ம் இடங்களையும், அக். 20 முதல் 5,7,9ம் இடங்களையும் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். செய்துவரும் தொழிலில் நிலவிய போட்டி, எதிர்ப்பு என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலையில் நிம்மதியான நிலை உருவாகும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்குவரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும்.  இதுவரை சந்தித்த பிரச்சனைகள் போராட்டங்கள் எல்லாம் உங்களை விட்டு விலகும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் லாபம் தரும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்குவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். புதிய வீடு வாகனம் செல்வாக்கு அந்தஸ்து என்ற கனவு நனவாகும். உத்திரம் 2,3,4ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7ம் இடங்களையும், அக். 20 முதல் 4,6,8ம் இடங்களையும் குருப் பார்ப்பதால், வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். சூழ்நிலைகளின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேருவர். வருமானம் உயரும். சொந்த வீடு வாகனம் அமையும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் நட்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். சிலர் புதிதாக நிலம் வாகனம் வாங்குவீர்கள். வசிக்கும் வீட்டைப் பழுது பார்த்து புதுப்பிப்பீர்கள். இதுவரையில் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் உங்களை விட்டு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்குருவின் பார்வைகளும், செவ்வாய் சூரியன் சஞ்சார நிலைகளும் சாதகமாக இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். செய்துவரும் தொழில் லாபம் அடையும் பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த நெருக்கடிகள் நீங்கும்.தொழில் உத்திரத்தில் பிறந்தவர் உறுதியானவர் என்பதுடன் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் முதன்மையாக இருந்திடக்கூடியவர் என்பதால் செய்துவரும் தொழில்மீது அக்கறையும் பக்தியும் இருக்கும். ஷேர் மார்க்கெட், டிராவல்ஸ், ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், விவசாயம் சார்ந்த தொழில்கள், சின்னத்திரை, சினிமா, யூட்யூப், ஏ.ஐ., கம்ப்யூட்டர், ஒப்பந்தங்கள், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆன்லைன் வர்த்தகம், நிதி நிறுவனம், ரெடிமேட்ஸ், அழகு சாதனம், வாகன விற்பனை, பப்ளிகேஷன் தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு திறமைக்கேற்ற மதிப்பும் ஊதியமும் கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் விலகும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். சிலர் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வீர்கள். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றமும் உயர்வும்கிடைக்கும்.பெண்கள்கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்சனைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். திருமண வயதினருக்கு திருமணம் நிகழும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கையில் பணம் புழங்கும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப்போன பதவி உயர்வும் இடமாற்றமும் தேடிவரும்.கல்வி படிப்பில் பின் தங்கியிருந்த மாணவர்களும் இக்காலத்தில் முன்னேற்றம் அடைவர். பொதுத்தேர்விலும், போட்டித்தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானுக்கு குருப் பார்வை உண்டாவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும்.  தொற்றுநோய், பரம்பரைநோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு தொடர்ந்து சென்று வந்தவர்களுக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியமாக செயல்படக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்குருவின் சஞ்சாரமும் பார்வைகளும், சூரியன் செவ்வாய் சஞ்சார நிலைகளும், குடும்பத்தில் நிம்மதியான நிலையை ஏற்படுத்தும். நீண்டநாள் கனவுகளை நனவாக்கும். சொந்த வீடு வாகனம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். பொன் பொருள் சேரும் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம் சுவேதாரண்யேசுவரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.அஸ்தம்: வெற்றிமேல் வெற்றிமனக்காரகன் சந்திரன், வித்யாகாரகன் புதன் அம்சத்தில் பிறந்த நீங்கள், மதி நுட்பம் மிக்கவர்கள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவதுடன் நினைத்ததை சாதிக்கும் சக்தியும் பெற்றவர்கள்.  நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் பார்த்திடக்கூடிய உங்களுக்கு நல்லதும் தெரியும் கெட்டதும் தெரியும். நல்லவர்களை அறிவதுடன் தவறானவர்களை ஒதுக்கியும் வைப்பீர்கள். ஒரு முடிவிற்கு நீங்கள் வந்து விட்டால் எவராலும் உங்களை மாற்ற முடியாமல் போகும். உங்கள் ராசியாதிபதி புதன் குருவிற்கு பகையானவர் என்றாலும், நட்சத்திராதிபதி சந்திரன் நட்பானவர். இக்காலத்தில் அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம், ஸாதக தாரைகள் என்பதால் இக்காலத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மே 26 முதல் உங்களுக்கு லாப குருவாக சஞ்சரிப்பவர் அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 12ம் வீடான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். மே 26 முதல் லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குருவால், இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் போராட்டங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வீடு, வாகனம், பட்டம், பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் இழந்தவற்றை மீண்டும் அடையக்கூடிய நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மனநிலையில் தெளிவு ஏற்படும். நீங்கள் நினைத்த ஒவ்வொன்றும் நினைத்தபடியே நடக்கும். பொருளாதார நிலை உயரும். சிலருக்கு உயர் பதவிகள் தேடிவரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர் உறவினரிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மணவாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு புதிய துணை அமையும். நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். கோயில் தரிசனம் மேற்கொள்ளும்  வாய்ப்பு சிலருக்கு உண்டாகும்.அக். 20 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால், பலவகையிலும் செலவுகள் ஏற்படும் அலைச்சல் அதிகரிக்கும் செய்துவரும் தொழிலில் நெருக்கடி ஏற்படும் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும் கையிருப்பு குறையும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் சஞ்சார ரீதியாக யோகப்பலன்களை வழங்குவார். அதே நேரத்தில் எந்த இடத்தில் சஞ்சரித்தாலும் தான் பார்க்கும் 5,7,9 ம் இடங்களை சுபிட்சமாக்குவார். இதன் காரணமாகவே குருப்பார்க்க கோடி புண்ணியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். மே 26 முதல் 3,5,7ம் இடங்களைப் பார்க்கும் குருவால், உங்கள் வாழ்க்கை வளமாகும். உங்களுக்கிருந்த நெருக்கடிகள், தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும்.அக். 20 முதல் 4,6,8ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகி ஆரோக்கியம் மேம்படும் வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளும் வகையில் நிறையவே செலவுகள் செய்வீர்கள். வசிக்கும் இடத்தையும் மாற்றி அமைப்பீர்கள். பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் புகழுக்காக செலவுகள் மேற்கொள்வீர்கள். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். உங்கள் செல்வாக்கு உயரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அக். 20 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் உங்கள் வாழ்க்கை வளமாகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால்  உங்கள் செல்வாக்கு உயரும். ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். நவ. 13 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும். கையில் பணம் புரளும். பொருளாதார நிலை உயரும்.தொழில்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழிலில் வெற்றி அடைய வேண்டும் என்ற லட்சியம் எப்போதும் இருக்கும். இக்காலம் உங்கள் முயற்சிகள் வெற்றியடையும் காலமாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். கல்வி நிறுவனம், நிதி நிறுவனம், பங்குச்சந்தை, நோட்டுப்புத்தகம் தயாரிப்பு, ஆன்லைன் வர்த்தகம், அரசு மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள், ஏற்றுமதி இறக்குமதி, ஜவுளி, குடிநீர், வேளாண்மை, ஜுவல்லரி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், ட்ரான்ஸ்போர்ட், பப்ளிகேஷன், திரைப்படம், சின்னத்திரை, வலைதளம் தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கு லாபம் அதிகரிக்கும்.பணியாளர்கள் எந்த நேரத்தில் வேலையை விட்டு அனுப்பி விடுவார்களோ என்று பயந்து பயந்து வேலைப்பார்த்து வந்தவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். வேலையில் ஏற்பட்ட பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்கடக குருவும், கும்ப ராகுவும், நவ. 13 முதல் லாப கேதுவும் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பர். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். கணவருடன் இணக்கமான நிலை இருக்கும். திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் சேரும். உறவினர் மத்தியில் செல்வாக்குடன் வாழும் நிலை உருவாகும்.கல்வி படிப்பில் இருந்த தடைகள் விலகும். வாழ்க்கையின் ஆதாரம் கல்வி என்பதை உணருவீர்கள். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் வரும். விரும்பிய  கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைகுருப்பார்வைகளும், ஆறாமிட ராகுவும் உங்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பர். நோய்நொடி என்று அவதிப்பட்ட நிலைமாறும். மருத்துவச்செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும் அந்தஸ்து கௌரவம் செல்வாக்கு உயரும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும் இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.பரிகாரம் ஆண்டாள் அழகரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்வில் நன்மை உண்டாகும்.சித்திரை 1,2: வளமுடன் வாழ்வீர்கள்ரத்தக்காரகன் யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாம் ராசியில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். எந்த ஒன்றிலும் தைரியத்துடனும் அதே நேரத்தில் திட்டமிட்டும் செயல்பட்டு வெற்றியை அடைபவர்கள் நீங்கள்.சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் அதிசாரமாக விரய ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். வீடு வாகனம் பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம், மனநிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால், பல வகையிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். சாதாரணமாக நடத்தி முடித்த வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தடைகளும் நெருக்கடிகளும் ஏற்படும். பார்த்துவரும் வேலையிலும் பிரச்சனைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும்.சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திலும், அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்திலும் குரு  சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் கனவுகளை நனவாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். பெரியோரின் ஆதரவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் சோதனையான நேரத்திலும் உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் பார்க்கும் இடங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிடக்கூடியவராவார். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அக். 20 முதல், 4,6,8 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவிற்கேற்ற வருமானம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு பகை நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்சனைகள் விலகி நிம்மதி உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மனதில் இருந்த சங்கட நீங்கும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். வாழ்வில் முன்னேற்றப் பாதைத் தெரியும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். சோதனைகளை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு சாதனைகள் புரியும் வாய்ப்பு உண்டாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப குருவும், சத்ரு ஜெய ஸ்தான ராகுவும், நவ. 13 முதல் கேதுவும் யோகப் பலன்களை வழங்குவர். 3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஜெய ஸ்தான சனியும், அக். 20 முதல் குருவும், இக்காலம் முழுவதும் குருப்பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி தொழிலில் லாபம், உத்தியோகத்தில் முன்னேற்றம் என ஏற்படும்.தொழில்எந்த ஒன்றிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் நீங்கள். செய்யும் தொழிலிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம், காலண்டர் நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூடியூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் வேலையில் நிம்மதி இல்லை, எதிர்பார்த்த ஊதியம் இல்லை, சலுகைகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தோரின் நிலை மாறும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, எதை எடுத்தாலும் பிரச்சனை போராட்டம் என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். சொல்வாக்கிற்கு மரியாதை உண்டாகும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.கல்வி படிப்பின் மீது அக்கறை ஏற்படும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தோரின் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். நோயினால் ஏற்பட்ட பயம் விலகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் பலன் தரும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடமான நிலை மாறும் நீண்டநாள் கனவுகள் நனவாகும். சொந்த இடம் வீடு வாகனத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் தீரும். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.

துலாம்சித்திரை 3,4: வளமுடன் வாழ்வீர்கள்ரத்தக்காரகன் யுத்தக்காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாம் ராசியில்  பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். எந்த ஒன்றிலும் தைரியத்துடனும் அதே நேரத்தில் திட்டமிட்டும் செயல்பட்டு வெற்றியை அடைபவர்கள் நீங்கள்.சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் அதிசாரமாக விரய ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவால், மே 26 முதல் வாழ்க்கை வளமாகும். எடுத்த காரியங்கள் வெற்றியாகும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். வீடு வாகனம் பட்டம் பதவி என்ற கனவுகள் நனவாகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் முன்னேற்றம், மனநிலையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அக். 20 முதல் விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால், பல வகையிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். சாதாரணமாக நடத்தி முடித்த வேலைகளையும் போராடி முடிக்க வேண்டியதாக இருக்கும். செய்துவரும் தொழிலில் தடைகளும் நெருக்கடிகளும் ஏற்படும். பார்த்துவரும் வேலையிலும் பிரச்சனைகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அதனால் ஊர் விட்டு ஊர் செல்லும் நிலையும் உருவாகும்.சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்திலும், அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்திலும் குரு  சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும் எதிர்பாராத இடமாற்றமும் ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் கனவுகளை நனவாக்குவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை உண்டாக்குவார். வாழ்க்கையில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். வியாபாரம் மற்றும் தொழிலில் ஆதாயத்தை அதிகரிப்பார். பெரியோரின் ஆதரவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். செல்வாக்கையும் அந்தஸ்தையும் உயர்த்துவார். உங்கள் நட்சத்திராதிபதியான செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால் சோதனையான நேரத்திலும் உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் அதிகரிக்கும். வாழ்க்கை வளமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் தான் பார்க்கும் இடங்களுக்கு யோகமான பலன்களை வழங்கிடக்கூடியவராவார். சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்கள் வாழ்வில் இருந்த சங்கடங்கள் நெருக்கடிகள் யாவும் விலகும். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழும் நிலை உருவாகும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். அக். 20 முதல், 4,6,8 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செலவிற்கேற்ற வருமானம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள், வம்பு வழக்குகள் முடிவிற்கு வரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு பகை நோய் நொடி என்பதெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். வேலைப் பார்க்கும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சித்திரை 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்சனைகள் விலகி நிம்மதி உண்டாகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். மனதில் இருந்த சங்கட நீங்கும். பல வழியிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். வாழ்வில் முன்னேற்றப் பாதைத் தெரியும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். நோய்கள் தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்க முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். வேலையில் ஏற்பட்ட மறைமுக எதிர்ப்பு விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். சகோதர சகோதரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். சோதனைகளை மட்டுமே சந்தித்து வந்தவர்களுக்கு சாதனைகள் புரியும் வாய்ப்பு உண்டாகும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்சித்திரை 1,2 ம் பாதத்தினருக்கு லாப குருவும், சத்ரு ஜெய ஸ்தான ராகுவும், நவ. 13 முதல் கேதுவும் யோகப் பலன்களை வழங்குவர். 3,4 ம் பாதத்தினருக்கு சத்ரு ஜெய ஸ்தான சனியும், அக். 20 முதல் குருவும், இக்காலம் முழுவதும் குருப்பார்வைகளும் நன்மைகளை உண்டாக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி தொழிலில் லாபம், உத்தியோகத்தில் முன்னேற்றம் என ஏற்படும்.தொழில்எந்த ஒன்றிலும் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டவர்கள் நீங்கள். செய்யும் தொழிலிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு இக்காலம் யோகமான காலமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல் தயாரிப்பு மற்றும் விற்பனை, மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், உணவகம், விவசாயம் சார்ந்த தொழில்கள், ரசாயன பொருட்கள், குடிநீர் சார்ந்த தொழில்கள் மற்றும் விற்பனை, பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஆடை ஆபரணம், காலண்டர் நோட்டுப் புத்தகம் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் பள்ளிகள், ஏ.ஐ., யூடியூப், சின்னத்திரை, சினிமா மற்றும் அதைச்சார்ந்த தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் வேலையில் நிம்மதி இல்லை, எதிர்பார்த்த ஊதியம் இல்லை, சலுகைகள் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு வந்தோரின் நிலை மாறும். நிர்வாகத்தின் ஆதரவு ஏற்படும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை, எதை எடுத்தாலும் பிரச்சனை போராட்டம் என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். சொல்வாக்கிற்கு மரியாதை உண்டாகும். படிப்பு வேலை திருமணம் என்ற அவரவர் கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.கல்வி படிப்பின் மீது அக்கறை ஏற்படும். தவறான நண்பர்களை விட்டு விலகுவீர்கள். பொதுத்தேர்வு போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்று நோய், விபத்து என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தோரின் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். நோயினால் ஏற்பட்ட பயம் விலகும். சிலருக்கு இயற்கை வைத்தியம் பலன் தரும்.குடும்பம்குடும்பத்தில் இருந்த சங்கடமான நிலை மாறும் நீண்டநாள் கனவுகள் நனவாகும். சொந்த இடம் வீடு வாகனத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சச்சரவுகள் தீரும். பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளின் கல்வி திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும்.பரிகாரம் சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.சுவாதி: தொட்டது துலங்கும்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த நீங்கள் பெரிய பெரிய திட்டங்கள் தீட்டி செயல்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். எந்தவொரு வேலையைக் கையில் எடுத்தாலும் அதை முடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நினைத்ததை சாதிப்பதில் வல்லவர்களான உங்களுக்கு மே 26 முதல் உங்கள் தொழில் ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 11 ம் வீடான லாப ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.மே 26 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு, இதுவரை நீங்கள் அடைந்துவந்த நற்பலன்களில் பின்னடைவை ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் மேல் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு அதன் காரணமாக எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு மெமோவும் வரும். செய்து வரும் தொழிலில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். பொருட்கள் தேக்கமடையும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியில் தடைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட வேலைகள் இழுபறியாகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நெருக்கடிகளை நீக்குவார். உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவார். பணப்புழக்கத்தை அதிகரிப்பார். புதிய சொத்து வாங்க வைப்பார். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட போராட்டங்களை இல்லாமல் செய்வார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தையும் பதவி உயர்வையும் வழங்குவார். திருமண வயதினருக்கு திருமணத்தை நடத்தி வைப்பார். குழந்தை பாக்யத்திற்காக தவம் இருந்தவர்களுக்கு குழந்தை வரத்தை வழங்குவார். பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் ஷேம தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகளை அதிகரிப்பார். உங்கள் வாழ்க்கையை மேலும் வளமாக்குவார்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பகவான் ஒரு ராசிக்குள் சஞ்சரிக்கும்போது தன் 5,7,9ம் பார்வைகளால் மூன்று இடங்களை சுபத்துவப்படுத்துவார். சஞ்சார நிலை பாதகமாகவே இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் மேன்மையடையும் என்பது ஜோதிட விதி. அந்த ரீதியில், மே 26 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருவின் பார்வைகள் கிடைப்பதால் குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். சிலர் வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கடன் தொல்லை விலகும்.  உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை உருவாகும். விருப்பங்கள் பூர்த்தியாகும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களுக்கு குருவின் பார்வைகள் கிடைப்பதால், தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுக்கும் வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமாகும். வேலையில் ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்குவரும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். திருமண வயதினர் கழுத்தில் மணமாலை ஏறும். வேலையின் காரணமாக பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேரக்கூடிய நிலை உருவாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், அக் 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், நவ. 13 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும், குருவின் பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும். பொன், பொருள், புகழுடன் நடைபோட வைக்கும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.தொழில்எடுத்த வேலையில் வெற்றியினை அடைய வேண்டும். செய்யும் தொழிலில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, இதுவரை பல்வேறு முயற்சிகள் செய்தும் போட்ட பணத்தைக்கூட எடுக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஹோட்டல், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, எக்‌ஸ்போர்ட், மேன்பவர் ஏஜன்சி, சினிமா, தொலைக்காட்சி, வலைதளம் தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதாயம் கூடும்.பணியாளர்கள் கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்று வருத்தப்பட்டு வந்தவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு ஏற்படும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். அரசு ஊழியர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்குடும்பத்திலும் வெளியிலும் நெருக்கடிகளை சந்தித்து வந்த நிலை மாறும்.  கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். வாழ்க்கைத்துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். பொன் பொருள் சேரும். உறவினர் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.கல்வி உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மேற்கல்விக்காக சிலர் வெளிநாடு வெளிமாநிலம் என்றும் செல்வீர்கள், மருத்துவம், பொறியியல், அக்ரி, சட்டம் என்று படிக்க நினைத்தவர்கள் கனவு நனவாகும்.உடல்நிலைருண ரோக ஸ்தானத்தில் ஆயுள்காரகன் சனி சஞ்சரிப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும்.குடும்பம்குடும்பத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும் பொன் பொருள் வீடு வாகனம் என வாழ்க்கை வளமாகும் பிள்ளைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.பரிகாரம்  நாகநாத சுவாமியை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.விசாகம் 1,2,3: உழைப்பால் முன்னேற்றம்மங்களக்காரகன், ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகம் ராசியில்  பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். சமூகத்தில் தனித்துவத்துடன், பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர்கள் நீங்கள். எங்கு இருந்தாலும் அங்கு உங்கள் வார்த்தைக்கு தனி மதிப்பிருக்கும்.விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் தொழில்  ஸ்தானமான 10 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்துவரும் தொழிலில் நெருக்கடியும், போராட்டமும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும், பண வரவில் தடைகளும், உறவினர்களுடன் இடைவெளியும், ஆரோக்கியத்தில் சங்கடங்களும் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும். பணவரவு அதிகரிக்கும். மதிப்பு, கௌரவம், செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விசாகம் 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்திலும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். அக். 20 முதல் பொருளாதார நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்சனை, தொழிலில் மந்தமான நிலை ஏற்படும்.உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால் உங்களுக்கு சங்கடங்கள் வரும்போதெல்லாம் அவரே உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் கூடும். வாழ்க்கை வளமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கினாலும் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சத்தையே ஏற்படுத்துவார். விசாகம் 1,2,3, ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நோய்கள் விலகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் வழக்குகள் சாதகமாகும்.அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.  உயர் கல்வி கனவு நனவாகும்.விசாகம் 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் குருப்பார்வை உண்டாவதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அக். 20 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி நிம்மதியான நிலை உண்டாகும். கையில் பணம் புரளும், சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், 6 ம் இட சனியும், அக். 20 முதல் லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய குருவும்,  நவ. 13 முதல் சகாய ராகுவும் யோகப் பலன்களை வழங்குவர். குருப்பார்வைகள் நன்மைகளை வழங்கும் என்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கள். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.தொழில்தெளிவான முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், குளிர்பானம், மினரல் வாட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், நவீன சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள இடத்தை விட வேறு இடத்தில் எதிர்பார்த்த ஊதியத்துடனும் சலுகைகளுடனும் தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்பெண்கள் எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உடல்நிலையும் மனநிலையும் மேம்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். கையிருப்பு கூடும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.கல்வி குரு பகவானின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே படிப்பின் மீது அக்கறையும் ஆர்வமும் இருக்கும். பொதுத்தேர்வில் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய அக்கறை அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும்.  பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.

விருச்சிகம்விசாகம் 4: உழைப்பால் முன்னேற்றம்மங்களக்காரகன், ஞானக்காரகனான குரு பகவானை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4 ம் பாதமான விருச்சிகம் ராசியில்  பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும் உள்ளனர். சமூகத்தில் தனித்துவத்துடன், பிறருக்கு வழிகாட்டியாக வாழ்ந்து வருபவர்கள் நீங்கள். எங்கு இருந்தாலும் அங்கு உங்கள் வார்த்தைக்கு தனி மதிப்பிருக்கும்.விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் தொழில்  ஸ்தானமான 10 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் 11ம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அதிசாரமாக சஞ்சரிப்பதால், மே 26 முதல், செய்துவரும் தொழிலில் நெருக்கடியும், போராட்டமும், பார்த்துவரும் வேலையில் பிரச்சனைகளும், பண வரவில் தடைகளும், உறவினர்களுடன் இடைவெளியும், ஆரோக்கியத்தில் சங்கடங்களும் ஏற்படும். முதலீட்டிற்கேற்ற ஆதாயம் இல்லாமல் போகும். அக். 20 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் நீங்கள் நினைத்த வேலைகள் நினைத்தபடி நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழில் வளர்ச்சி அடையும். பணவரவு அதிகரிக்கும். மதிப்பு, கௌரவம், செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். விசாகம் 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்திலும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானமான 10 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். அக். 20 முதல் பொருளாதார நெருக்கடி, உத்தியோகத்தில் பிரச்சனை, தொழிலில் மந்தமான நிலை ஏற்படும்.உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால் உங்களுக்கு சங்கடங்கள் வரும்போதெல்லாம் அவரே உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஷேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும்போது நன்மைகள் கூடும். வாழ்க்கை வளமாகும்.சஞ்சாரம், பார்வை பலன்குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தைக்கேற்ப அவர் சஞ்சரிக்கும் இடங்களுக்கு எதிர்மறையான பலன்களை வழங்கினாலும் பார்க்கும் இடங்களுக்கு சுபிட்சத்தையே ஏற்படுத்துவார். விசாகம் 1,2,3, ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 2,4,6 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். கல்வியில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். நோய்கள் விலகும். விரோதிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும் வழக்குகள் சாதகமாகும்.அக். 20 முதல் 3,5,7 ம் இடங்களைக் குரு பார்ப்பதால்,உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் புரிவோருக்கு பணியாளர் ஆதரவு கிடைக்கும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் அமையும். கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.  உயர் கல்வி கனவு நனவாகும்.விசாகம் 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசிக்கும், 3, 5 ம் இடங்களுக்கும் குருப்பார்வை உண்டாவதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடல்நிலை சீராகும். அக். 20 முதல் 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி நிம்மதியான நிலை உண்டாகும். கையில் பணம் புரளும், சேமிப்பு உயரும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். அஸ்தமனம், வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்விசாகம் 1,2,3 ம் பாதத்தினருக்கு லாப கேதுவும், 6 ம் இட சனியும், அக். 20 முதல் லாப குருவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பாக்ய குருவும்,  நவ. 13 முதல் சகாய ராகுவும் யோகப் பலன்களை வழங்குவர். குருப்பார்வைகள் நன்மைகளை வழங்கும் என்பதால் குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கள். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.தொழில்தெளிவான முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு, தொழில் மீதான அக்கறை அதிகரிக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் ஏஜன்சி, பங்கு வர்த்தகம், ரசாயன தொழில்கள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், திருமண மண்டபம், விடுதி, ட்ராவல்ஸ், பில்டிங் டிசைனிங் அண்ட் டெக்கரேஷன், ஆடை வணிகம், ஜுவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், குளிர்பானம், மினரல் வாட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், நவீன சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் வேலைபளு அதிகரித்தாலும் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு தற்போதுள்ள இடத்தை விட வேறு இடத்தில் எதிர்பார்த்த ஊதியத்துடனும் சலுகைகளுடனும் தகுதிக்குரிய வேலைக்கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். தடைபட்ட இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்பெண்கள் எடுத்த வேலைகளை முடிப்பதில் வல்லவரான உங்களுக்கு, உடல்நிலையும் மனநிலையும் மேம்படும். குடும்பத்தில் மதிப்பு கூடும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கணவரின் ஆதரவு கிடைக்கும். கையிருப்பு கூடும். பொன் பொருள் சேரும். உறவுகள் மத்தியில் மதிப்புடன் வாழக்கூடிய நிலை உருவாகும்.கல்வி குரு பகவானின் அருள் பெற்ற உங்களுக்கு இயல்பாகவே படிப்பின் மீது அக்கறையும் ஆர்வமும் இருக்கும். பொதுத்தேர்வில் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என்று விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஉடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மருத்துவச்செலவு குறையும். மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வந்தவர்கள் நிலை மாறும். ஆரோக்கியமாக நடை போடக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம்கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய அக்கறை அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும். நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும்.  பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் ஆபத் சகாயேஸ்வரரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.அனுஷம்: செல்வாக்கு உயரும்கர்மக்காரகன் சனியை நட்சத்திர அதிபதியாகவும், தைரிய வீரிய காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் அச்சம் என்பதை அறியாதவர்கள், ஆற்றல் மிக்கவர்கள், மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள். நிதானமாக செயல்பட்டாலும் நினைத்ததை சாதிக்கும் திறன்கொண்ட உங்களுக்கு, மே 26 முதல் உங்கள் பாக்ய ஸ்தானமான 9 ம் இடத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 10 ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.இதுவரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அல்லல்களை வழங்கி வந்த குரு, மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு யோக காலம் ஆரம்பித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒன்பதாம் இடம் என்பது பிதுர் ஸ்தானம், பாக்ய ஸ்தானம், தர்ம ஸ்தானம் ஆகும் இந்த இடத்தை வைத்துதான் அரசாங்கத்தால் தந்தையால் அடையக்கூடிய நன்மையை தெரிந்து கொள்ளலாம். கிடைக்கப் போகும் பாக்யம், செய்யப் போகும் புண்ணிய செயல்களை தெரிந்து கொள்ளலாம். 9 ம் இடத்திற்கு வரும் குரு பகவான் முதலில் உங்கள் உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மன நிலையில் தெளிவை உண்டாக்குவார். தைரியமாக நடைபோட வைப்பார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பகைவர்களை உங்களிடம் சரணடைய வைப்பார்.  திருமணம் கூடி வரவில்லையே என்ற கவலையை தீர்ப்பார். வீட்டில் மங்கள வாத்தியம் கேட்பதுடன், சிலருக்கு குழந்தை பாக்யமும் ஏற்படும். வாழ்க்கை, தொழில்,  அந்தஸ்து உயரும். பொன் பொருள் சேரும். அக். 20 முதல் உங்கள் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, செய்துவரும் தொழிலில் அக்கறையை அதிகரிப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார். தற்போது பார்த்துவரும் வேலையைவிட உயர்வான வேலைக்கு மாற்றம் செய்வார். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சியை வெற்றியாக்குவார். வருமானத்திற்குரிய வழிகளை ஏற்படுத்துவார்.உங்கள் நட்சத்திராதிபதி சனியும் ராசியாதிபதி செவ்வாயும் குருவிற்கு நட்பானவர்கள் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப் பலன்கள் அதிகரிக்கும். நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குரு தான் சஞ்சரிக்கும் ராசியிலிருந்து 5,7,9ம் பார்வைகளால் பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பதால், மே 26 முதல் உங்கள் ஜென்ம ராசியையும், 3, 5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால் போராட்டமாகவும் பிரச்சனையாகவும் இருந்த உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சொத்து சுகம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். குழந்தைக்காக தவம் இருந்தவர்களுக்கு வரம் கிடைத்ததுபோல் குழந்தை பாக்யம் கிடைக்கும். அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால்,பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி, மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு வாகனம் என்ற முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன் மே 26 முதல் பாக்ய குருவும்,  நவ. 13 முதல் சகாய ராகுவும், 3,6,10,11 ம் இடங்களில் சூரியன் சஞ்சரிக்கும் 120 நாட்களும் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.தொழில்தொழில் காரகனான சனி பகவானே உங்கள் நட்சத்திர அதிபதி என்பதால் சுய தொழிலில் ஆதாயம் காணக்கூடியவர்கள் நீங்கள். செய்யும் தொழிலில் கண்ணும் கருத்துமாக இருந்து முன்னேற்றம் அடையக்கூடியவர்கள். விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில்கள், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், சிறு குறு தொழிற்சாலைகள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், இன்ஜினியரிங் பேக்டரி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, வாகன விற்பனை, கெமிக்கல், மருத்துவம் மற்றும் மருத்துவம  சார்ந்த தொழில்கள், விளையாட்டுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை, கம்ப்யூட்டர், பொறியியல், டிராவல் ஏஜென்சி, ஹார்ட்வேர் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள் கடுமையாக உழைத்தும் முன்னேற்றம் இல்லையே என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். வேலை மீதிருந்த பயம் போகும். நிர்வாகத்தின் ஆதரவும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப்பார்த்துவரும் சிலர் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலை  உருவாகும்.பெண்கள்மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். முன்னேற்றத்தை உண்டாக்குவர். செல்வாக்கோடு நடைபோட வைப்பர் என்பதால், உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், வேலையில் உயர்வு என்று அவரவர் நிலைக்கேற்ப உண்டாகும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். ஆடை ஆபரணம் சேரும். ஆரோக்கியம் சீராகும்.கல்வி மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதுடன், ராசிக்கும் குருப்பார்வை உண்டாவதால் மாணவர்களுக்கு படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர்கல்வி கனவு நனவாகும்.உடல்நிலை நோய் நொடி, விபத்து, மருத்துவச்செலவு என்று நாட்களை நகர்த்தி வந்தவர்களுக்கு பாக்ய குருவின் பார்வை உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். ஆரோக்கியமாக நடைபோட வைக்கும். மருத்துவச்செலவுகள் குறையும்.குடும்பம்வருமானக் குறைவின் காரணமாகவும், உறவினர்கள் தலையீட்டினாலும் குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி குழப்பம் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாவதுடன் குடும்பத்தின் மீது அக்கறையும் அதிகரிக்கும். மற்றவர்களைப்போல் வாழவேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் கடன் பட்டாவது சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.பரிகாரம் திருச்செந்தூர் முருகனை வழிபட சங்கடங்கள் விலகும். வேண்டுதல் பலிதமாகும்.கேட்டை: குருப்பார்வை வந்தாச்சுவித்யாகாரகன் புதனை நட்சத்திர அதிபதியாகவும், ரத்தக்காரகன், யுத்தக் காரகனான செவ்வாயை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் சாதுரியமாக செயல்படக்கூடியவர்கள், நினைத்ததை சாதிப்பதில் உறுதியானவர்கள். எந்த ஒன்றையும் நுட்பமாக அறிந்து செயல்படுவதுடன் அதில் வெற்றியும் பெறக்கூடியவர்களான உங்களுக்கு, மே 26 முதல் குரு பாக்ய ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்தும், அக். 20 முதல் ஜீவன ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரித்தும் பலன்களை வழங்கிட இருக்கிறார்.விவேகம், வித்தை அந்தஸ்திற்கு காரகனான குரு, பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் யோகப்பலன்களை வழங்குவார் என்பது பொது விதி. மே 26 முதல் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு புதிய வீடு வாகனம் சேரும். புத்திர பாக்யம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை இருக்கும். நினைத்ததை சாதித்திடக்கூடிய அளவிற்கு சூழ்நிலைகள் சாதகமாகும். அக். 20 முதல் உங்களுடைய ராசிக்கு ஜீவன ஸ்தானமான சிம்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால் பலன்கள் மாறுபடும். எல்லாவற்றையும் எளிதாக நடத்தி லாபம் கண்டுவந்த நிலைமாறி ஒவ்வொன்றுக்காகவும் போராட வேண்டியதாக இருக்கும். முயற்சிக்கும் உழைப்பிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். தொழிலில் மந்தநிலை ஏற்படும். வேலையில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வருமானம் தடைபடும். மனதில் குழப்பம் அதிகரிக்கும் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதெல்லாம் பொது விதியாகும்.உங்கள் நட்சத்திராதிபதி புதன் குருவிற்கு பகையானவர் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் நட்பானவர் என்பதுடன், உங்கள் ராசிக்கு தன குடும்பாதிபதியும், பூர்வ புண்ணியாதிபதியும் குருவே என்பதால் உங்கள் குடும்ப வாழ்க்கை சுபிட்சமாகவே இருக்கும். பணப்புழக்கமும் இருந்து கொண்டிருக்கும். அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி நட்பு, அதிநட்பு, ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் யோகப் பலன்களையே வழங்குவார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குரு பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், 3, 5 ம் இடங்களையும் பார்ப்பதால், எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசிக்கு 2,4,6 ம் இடங்களைப் பார்ப்பதால், பொருளாதார நெருக்கடி நீங்கும். தேவைக்கேற்ற பணம்வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பழைய கடன்கள் அடைபடும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட எதிர்ப்பு போட்டி என்பதெல்லாம் இல்லாமல் போகும். வழக்கு விவகாரம் வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்போராட்டமும் பிரச்சனையாகவும் இருந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். வியாபாரம் தொழில் லாபம்தரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் புதனை நட்சத்திராதிபதியாக கொண்ட நீங்கள் எதிலும் திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள் மட்டும் அல்ல, எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் எப்படி வெற்றி பெறுவது என்பதை அறிந்தவர்கள். பொதுவாக தொழில் துறையில் சாதித்திடக்கூடியவர்கள் நீங்கள். சிறு வியாபாரம், பெரும் வர்த்தகம், நிதி நிறுவனம், ஸ்டேஷனரி, அச்சகம், செய்தித்தாள், நோட்டுப் புத்தகம் காலண்டர் தயாரிப்பு மற்றும் விற்பனை, தகவல் தொடர்பு, விளம்பரம், ஷேர் மார்க்கெட், காண்ட்ராக்ட், கூட்டுத்தொழில், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வியாபாரம், மருத்துவம், ரசாயனம், டிராவல் ஏஜென்சி, தனியார் பள்ளிகள் கல்லூரிகள் வளர்ச்சி அடையும். லாபம் தரும்.பணியாளர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பார்க்கும் வேலைப் பறிபோய்விடுமோ என்றிருந்த பயம்நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகைகளுடன் உங்களுக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் தேடிவரும்.பெண்கள்குடும்பத்தில் நிம்மதி இல்லை, உடல் நிலையில் பிரச்சனை, எந்த ஒன்றும் கைகூடி வரவில்லை என்றிருந்த நிலையெல்லாம்மே 26 முதல் மாறும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை உருவாகும். எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். கணவரின் புரிதலால் துணிச்சலாக செயல்படுவீர்கள். சிலருக்கு திருமணம் நடந்தேறும். குழந்தை பாக்யம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள்.கல்வி வித்யாகாரகன் புதனை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு இயல்பாகவே படிப்பில் ஆர்வமும் அக்கறையும் இருக்கும். மே 26 முதல் பாக்ய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலை ராசியை விட்டு ஆயுள்காரகன் சனியின் பார்வை விலகி விட்டதாலும், ராசிக்கு மே 26 முதல் குருப்பார்வை உண்டாவதுடன், நவ. 13 முதல் சகாய ஸ்தானத்தில் ராகு சஞ்சரித்து உங்களை சுறுசுறுப்பாக நடைபோடக்கூடிய நிலையை உருவாக்க இருப்பதாலும், மருந்து, மாத்திரை, மருத்துவமனை என்று தொடர்ந்து சங்கடப்பட்டு வந்தவர்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். சிலர் நவீன மருத்துவத்தால் ஆபத்திலிருந்து மீண்டு வருவீர்கள்.குடும்பம்திட்டமிட்டு செயல்படக்கூடிய உங்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனையும், சொத்து சேர்ப்பதில் ஆர்வமும், சேமிப்பில் கவனமும் செல்லும். குடும்பத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். உறவினர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் லட்சுமி நாராயணரை வழிபட நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

தனுசு: மூலம்: எச்சரிக்கை அவசியம்ஞானமோட்சக்காரகன் கேது, மங்களக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த நீங்கள், நல்லது கெட்டது பாவ புண்ணியம் என்பதை எல்லாம் அறிந்தவர்கள். பிறருக்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள். நினைத்ததை அடையும் நிலையும், சாதிக்கும் சக்தியும் இயல்பாகவே உங்களுக்கு இருக்கும். அத்தகைய வலிமை கொண்ட உங்களுக்கு, மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரித்தும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரித்தும் பலன்களை வழங்கிட இருக்கிறார்.உங்கள் ராசிநாதனான குரு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் மறையும் காலம் என்பது உங்கள் கண்களைக்கட்டி காட்டில் விட்டது போன்ற காலமாகும். இக்காலத்தில் திட்டமிடாமல் சில வேலைகளில் இறங்கி அதனால் அவதிக்கு ஆளாவீர்கள். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் கேள்விக்குறியாகும். எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பிரச்னைகள் தேடிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.  அந்நிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். அக். 20 முதல் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான சிம்ம ராசிக்குள் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, இருட்டில் இருந்த உங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவார். உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். தன்னம்பிக்கையை உண்டாக்குவார். செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி என்ற கனவுகளை நனவாக்குவார். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவார். வீடு மனை வாகனம் என வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகளை விலக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தையும், செய்துவரும் தொழிலில் லாபத்தையும் வழங்குவார். எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை வழங்குவார். உயர்கல்வி, திருமணம் என்ற கனவுகளை நனவாக்குவார் என்பதெல்லாம் பொது விதியாகும்.உங்கள் ராசியாதிபதியே குரு என்பதால் எந்த நிலையிலும் உங்கள் கௌரவம் செல்வாக்கு அந்தஸ்திற்கு குறைவு ஏற்படாது என்பதுடன் அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம், ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குரு பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் 12, 2, 4 ம் இடங்களுக்கு கிடைப்பதால் வீண்செலவுகள் குறையும். அலைச்சல் கட்டுப்படும். மனதில் நிம்மதி உண்டாவதுடன் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும், தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், 3,5 ம் இடங்களையும் பார்ப்பதால் உங்கள் நிலை உயரும். மற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் உங்களுடைய வளர்ச்சி இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அக். 20 வரை குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள் உங்களைப் பாதுகாக்கும். நவ. 13 வரை சகாய ஸ்தான ராகு உங்களை தைரியத்துடன் செயல்பட வைப்பார். அக். 20 முதல் பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் வாழ்வை வளமாக்கும்.தொழில்செய்துவரும் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும் விற்பனையில் இருந்த மந்தநிலை மாறும். உங்கள் முயற்சிக்கு பணியாளர்களுடைய ஆதரவு உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த தொழில்கள், ஆன்மீகம் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், காண்ட்ராக்ட், எக்ஸ்போர்ட், ஜூவல்லரி, பங்கு வர்த்தகம், ஆன்லைன் பிசினஸ், கம்ப்யூட்டர், ஐ.டி. தொழில்கள் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அக். 20 முதல் முடங்கிய தொழில்கள் முன்னேற்றம் அடையும்.பணியாளர்கள் மே 26 முதல் அஷ்டம குருவால் பார்த்துவரும் வேலையில் எதிர்பாராத சங்கடங்கள் பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாப்பார். தைரியமுடன் செயல்பட வைப்பார். அக். 20 முதல் பாக்ய குருவால் வேலையில் உங்களுக்கிருந்த பயம் போகும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லை திறமைக்கேற்ற பதவி இல்லை என வருந்திய நிலை மாறும். எதிர்பார்த்த பொறுப்பும் சலுகைகளும் கிடைக்கும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.பெண்கள்அக். 20 வரை மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் குரு சஞ்சரித்தாலும், அவருடைய பார்வைகள், அயன சயனம் மற்றும் குடும்பம், சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் மனதில் நிம்மதி இருக்கும். தாம்பத்தியம் சிறக்கும். பிறந்த இடத்திலும் புகுந்த வீட்டிலும் நிம்மதி இருக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு ஏற்படும். அக். 20 முதல் பாக்ய குருவால் உயர்கல்வி, வேலை என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு கழுத்தில் மாங்கல்யம் ஏறும். பொன் பொருள் சேரும்.கல்வி மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால்  உயர்கல்விக்காக அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். சிலருக்கு விரும்பிய கல்லூரியும் விருப்பப்பட்ட பாடப்பிரிவும் கிடைக்காமல் போகலாம் என்றாலும் உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.உடல்நிலை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு ஆரோக்கியத்தில் சங்கடங்களை ஏற்படுத்தலாம், பரம்பரை நோய், பருவ நோய், தொற்று நோயென சிலருக்கு பாதிப்பு ஏற்படும். வாகனப் பயணத்தில் சங்கடங்களுக்கு ஆளாக நேரும் என்றாலும் அக். 20 முதல் பாக்ய குருவின் பார்வை ராசிக்கு உண்டாவதால் வந்த நோயெல்லாம் வந்தவழித் தெரியாமல் போகும். உடல் நிலை சீராகும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம்நவ. 13 வரை சகாய ராகு, அக். 20 முதல் பாக்ய குருவால் குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். புதிய இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி அந்தஸ்து உண்டாகும்.பரிகாரம் கற்பக விநாயகரை வழிபட நன்மைகள் நடக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.பூராடம்: நிதானம் அவசியம்அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், தனக்காரகன் குரு அம்சத்தில் பிறந்த நீங்கள் திட்டமிட்டு எந்த ஒன்றிலும் செயல்படக் கூடியவர்கள். எது சாதகமாக இருக்கும்? எது பாதகமாக இருக்கும்? என்பதை அறிந்து சாதகமான வழியில் செல்லக்கூடியவர்கள். வெளியில் கண்டிப்பானவர்போல் தெரிந்தாலும் மனதளவில் குழந்தையான உங்களுக்கு,இதுவரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப்பலன்களை வழங்கிவந்த உங்கள் ராசிநாதன் குரு, மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து அக். 20 முதல் அதிசாரமாக பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து பலன்களை வழங்கிட உள்ளார்.விவேகம், வித்தை, அந்தஸ்து என்பதையெல்லாம் வழங்கிடக்கூடிய குரு அஷ்டம ஸ்தானமான 8 ம் இடத்தில் மறையும் காலம் என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையான காலமாக இருக்கும். இக்காலத்தில் இதுவரை உங்களுக்குக் கிடைத்துவந்த நற்பலன்களில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் மந்தமடையும். உங்களிடம் எப்போதும் இருக்கும் சமயோசித புத்தி  மட்டுப்படும். நம்பக்கூடாதவர்களை நம்பி சங்கடத்திற்கு ஆளாவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எப்போதோ செய்த தவறுக்கு இப்போது மெமோ வரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உடல்நிலையிலும் ஏதேனும் ஒரு சங்கடம் இருந்து கொண்டிருக்கும். கணவன் மனைவியும் வடதுருவம் தென்துருவமாக மாறி நிற்கக்கூடிய நிலை உருவாகும். அந்நியர்களால் குடும்ப நிம்மதி கெடும். வரவு செலவில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். எடுத்த வேலைகளை நடத்த முடியாமல் போகும். உங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படும். இவையெல்லாம் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வழங்கும் பொதுப்பலன்களாகும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தை விட்டு அதிசாரமாக உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான சிம்ம ராசிக்குள் சஞ்சரிக்கிறார் குரு. நம்முடைய வாழ்க்கை வளமடைவதற்கும், சோதனைக்கு ஆளாவதற்கும் கிரகங்களே காரணம் என்ற உண்மையை இப்போது நீங்கள் உணர்வீர்கள். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்ததுபோல் உங்கள் நிலை மாறும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்களும் ஆச்சரியமாக பார்த்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வேலையில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகி மகிழ்ச்சி அதிகரிக்கும். விஐபிகள் ஆதரவால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். சிலருக்கு திருமணம் நடந்தேறும். பொன் பொருள் சேரும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும் என்பதெல்லாம் பாக்ய ஸ்தான குரு வழங்கும் பொதுப்பலன்களாகும்.உங்கள் ராசியாதிபதி குரு என்பதால் உங்களுக்குள் சரியான புரிதலும் தெளிவும் இருக்கும். அந்தஸ்தும் செல்வாக்கும் இருக்கும் என்பதுடன் அவர் சஞ்சரிக்கும் பூசம், ஆயில்யம்,மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம், நட்பு, அதிநட்பு தாரைகள் என்பதால் பூசம், ஆயில்யம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். நீங்கள் நினைத்ததை நடத்தி வைப்பார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குரு சஞ்சாரம் பாதகமாக இருந்தாலும் அவர் பார்க்கும் இடங்கள் சிறப்படையும் என்பது விதி. மே 26 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் நிலையில் அவருடைய பார்வைகள் விரயம், தன, குடும்பம், சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் வீண்செலவுகள் குறையும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் ஏற்பட்ட தொல்லை விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகி சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு ஏற்படும்.  தடைபட்ட வேலைகள் நடந்தேறும். சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியம் சீராகும். திடீர் பண வரவு இருக்கும். அக். 20 முதல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், சகாயம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தானங்களையும் பார்ப்பதால், செல்வாக்கு உயரும். புத்திசாலித்தனம் வெளிப்படும். தொழில் வளர்ச்சி அடையும். வாழ்க்கை வளமாகும். பணப்புழக்கம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும் உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி, பொறுப்பு கிடைக்கும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அஷ்டம குருவின் பார்வைகள், சகாய ஸ்தான ராகு, அக். 20 முதல் பாக்ய குருவும் அவருடைய பார்வைகளும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கும். வீடு, வாகனம், ஆடை, ஆபரணம் என்ற கனவை நனவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றத்தில் உத்தியோகத்தில் உயர்வையும் உண்டாக்கும். செல்வம், செல்வாக்கை அதிகரிக்கும்.தொழில் தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். கடந்தகால அனுபவங்களைக் கொண்டு திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். விற்பனையும் வரவும் அதிகரிக்கும். பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம், ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், உணவகம், விடுதி, திருமண மண்டபம், ட்ராவல் ஏஜென்சி, ஆடை வணிகம், கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, நிதி நிறுவனம், ஜூவல்லரி, வாகனம் தயாரிப்பு மற்றும் வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள்வேலைப் பார்க்கும் இடத்தில் வேலை பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய மதிப்புண்டாகும். எதிர்பார்த்த சலுகையும் ஊதியமும் கிடைக்கும். சிலர், பார்க்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்குச் செல்வீர். அரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவரின் கனவு நனவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.கல்விபடிப்பின் மீது அக்கறை கூடும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். மேற்கல்விக்காக சிலர் வெளி மாநிலம் வெளிநாடு என்றும் செல்வீர்கள்.உடல்நிலை பரம்பரை நோய், தொற்று நோய், பருவ நோய், விபத்து என்று ஆரோக்கியத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவையெல்லாம் சிகிச்சையால் சீராகும். மருத்துவச்செலவு குறையும். ஆரோக்கியம் மேம்படும்.குடும்பம் குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னை விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு சிலருக்கு நனவாகும்.  பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம் என்ற ஆசைகள் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும். உத்திராடம் 1:  விருப்பம் நிறைவேறும்––––––ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான மகரத்தில்  பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்திலும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், எதிர்பாராத நெருக்கடிகளும், வேலை மற்றும் தொழிலில் போராட்ட நிலையும், தேவையற்ற பிரச்னைகளும் உருவெடுக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சிலருக்கு பண நெருக்கடி, உடலில் சங்கடம்,  எதை எடுத்தாலும் கைகூடி வராத நிலை என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், இந்த நிலை யாவும் அக். 20 முதல் அப்படியே மாறும். கடலில் தத்தளித்து வந்தவர் கரைக்கு வந்ததுபோல் வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வும், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக். 20 முதல் அஷ்டம குருவால் வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். வருமானம் தடைபடும். கடன் தொல்லையால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் போகும். தவறான நட்புகளால் உங்களுக்கிருந்த செல்வாக்கு விமர்சனத்திற்கு ஆளாகும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு வரும் சங்கடங்கள் எல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மங்களக்காரகன் குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும் ஸ்தானங்கள் சுபிட்சமடையும்.உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12,2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். நஷ்டம் கஷ்டம் என்ற நிலைகள் மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வருமானம் உயரும். பழைய கடன்கள் அடைபடும். செல்வாக்கு ஏற்படும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதிய வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.அக். 20 முதல் ஜென்ம ராசியையும் 3,5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் நிலை உயரும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். உயர் கல்வி கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும்.எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அக். 20 முதல் 12,2,4 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான ராகுவும், அக். 20 முதல் பாக்ய குருவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய சனியும், மே 26 முதல் குருவும், தொடர்ந்து குருவின் பார்வைகளும் நன்மைகளை வழங்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொன் பொருள் சேரும். புகழுடன் வாழும் நிலை உருவாகும்.தொழில்எந்த இடத்திலும் முதன்மையாக இருந்திடக் கூடிய நீங்கள், செய்து வரும் தொழிலிலும் முதல் இடத்தில் இருப்பீர்கள். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி, சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம், ஷேர் மார்க்கெட், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர் தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு  வேலையில் ஏற்பட்ட வழக்கு முடிவடையும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.கல்வி ஆத்ம காரகனின் அம்சமான உங்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். உயர் பதவி என்ற லட்சியத்துடன் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள். பொது மற்றும் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலைஉடல் நிலையில் தொடர்ந்து பாதிப்பு, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியும் குணமடைய முடியவில்லையே என்று வேதனையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்யம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.பரிகாரம் ஆதி ஜெகந்நாதரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.

மகரம்: உத்திராடம் 2,3,4: விருப்பம் நிறைவேறும்ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு, குரு ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான மகரத்தில்  பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும் உள்ளனர்.உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் அஷ்டம ஸ்தானத்திலும், அக். 20 முதல் பாக்ய ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், எதிர்பாராத நெருக்கடிகளும், வேலை மற்றும் தொழிலில் போராட்ட நிலையும், தேவையற்ற பிரச்னைகளும் உருவெடுக்கும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சிலருக்கு பண நெருக்கடி, உடலில் சங்கடம்,  எதை எடுத்தாலும் கைகூடி வராத நிலை என்று சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், இந்த நிலை யாவும் அக். 20 முதல் அப்படியே மாறும். கடலில் தத்தளித்து வந்தவர் கரைக்கு வந்ததுபோல் வாழ்க்கையில் ஏற்பட்ட பயம் போகும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வும், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு செல்வாக்கும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் இடத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானமான 8 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சப்தம குருவால் செல்வாக்கு உயரும். வாழ்க்கையில் இருந்த போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். அக். 20 முதல் அஷ்டம குருவால் வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். வருமானம் தடைபடும். கடன் தொல்லையால் குழப்பம் அதிகரிக்கும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை இல்லாமல் போகும். தவறான நட்புகளால் உங்களுக்கிருந்த செல்வாக்கு விமர்சனத்திற்கு ஆளாகும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். வேலையில் நெருக்கடி அதிகரிக்கும்.உங்கள் நட்சத்திராதிபதி சூரியன் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு வரும் சங்கடங்கள் எல்லாம் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸாதகம் மற்றும் நட்பு தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மங்களக்காரகன் குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகளுக்கு ஆளாகும் ஸ்தானங்கள் சுபிட்சமடையும்.உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் 12,2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். நஷ்டம் கஷ்டம் என்ற நிலைகள் மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வருமானம் உயரும். பழைய கடன்கள் அடைபடும். செல்வாக்கு ஏற்படும். பணம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதிய வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.அக். 20 முதல் ஜென்ம ராசியையும் 3,5 ம் இடங்களையும் குரு பார்ப்பதால், செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றமடையும். பணியாளர் நிலை உயரும். பணம், புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும்.  சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். உயர் கல்வி கனவு நனவாகும். உத்திராடம் 2,3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நஷ்டத்தில் இயங்கிய தொழில்களும் லாபம்தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும்.எடுத்த வேலைகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அக். 20 முதல் 12,2,4 ம் இடங்களுக்கு குருப்பார்வை உண்டாவதால், சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கையில் பணம் புரளும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்உத்திராடம் 1 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான ராகுவும், அக். 20 முதல் பாக்ய குருவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சகாய சனியும், மே 26 முதல் குருவும், தொடர்ந்து குருவின் பார்வைகளும் நன்மைகளை வழங்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொன் பொருள் சேரும். புகழுடன் வாழும் நிலை உருவாகும்.தொழில்எந்த இடத்திலும் முதன்மையாக இருந்திடக் கூடிய நீங்கள், செய்து வரும் தொழிலிலும் முதல் இடத்தில் இருப்பீர்கள். நிதி நிறுவனம், உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகன விற்பனை, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், தகவல் தொடர்பு, ஏ.ஐ., ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், ஜுவல்லரி, சின்னத்திரை, வலைதளம், பதிப்பகம், ஷேர் மார்க்கெட், அழகு சாதனம், கவரிங், பேன்சி ஸ்டோர் தொழில்கள் லாபம்தரும்.பணியாளர்கள் பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் திறமைக்குரிய மரியாதை உண்டாகும். நீண்ட நாளாக எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் கைக்கு வரும். அரசு ஊழியர்களுக்கு  வேலையில் ஏற்பட்ட வழக்கு முடிவடையும். எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.பெண்கள்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியான நிலை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு ஏற்படும். திருமண வயதினருக்கு மாங்கல்யம் ஏறும். சிலருக்கு குழந்தைப்பேறு கிடைக்கும். கணவருடன் ஏற்பட்ட இடைவெளி விலகும். பொன் பொருள் சேரும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.கல்வி ஆத்ம காரகனின் அம்சமான உங்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். உயர் பதவி என்ற லட்சியத்துடன் படிப்பில் ஆர்வமாக இருப்பீர்கள். பொது மற்றும் போட்டித்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும்.உடல்நிலைஉடல் நிலையில் தொடர்ந்து பாதிப்பு, மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியும் குணமடைய முடியவில்லையே என்று வேதனையோடு வாழ்ந்து வந்தவர்களுக்கு சரியான சிகிச்சைகள் கிடைத்து ஆரோக்யம் சீராகும்.குடும்பம்குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். இணக்கமான நிலை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். பிள்ளைகளின் படிப்பு, திருமணம், எதிர்காலத்திற்கு தேவையான வசதிகள் என்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும்.பரிகாரம் ஆதி ஜெகந்நாதரை வழிபட நன்மைகள் நடந்தேறும். வேண்டுதல் பலிதமாகும்.திருவோணம்: வெற்றிமேல் வெற்றிமனக்காரகன் சந்திரன், கர்மக்காரகன் சனி அம்சத்தில் பிறந்த நீங்கள் மன வலிமைக் கொண்டவர்கள். நினைத்ததை சாதிப்பதில் உறுதி மிக்கவர்கள். பிறந்த இடம் எத்தகையதாக இருந்தாலும் உயர்ந்த இடத்தை அடைந்திடக்கூடிய உங்களுக்கு, ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களையும், உடல்நலிவையும், பிரச்னைகளையும் வழங்கிவந்த குரு, மே 26 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து, அதிசாரமாக அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக, பனிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மே. 26 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, செல்வம் செல்வாக்கு அந்தஸ்தினை வழங்குவதுடன் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வழங்குவார். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் இல்லாமல் போகும். இடம் வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும். திருமண வயதினருக்கு கழுத்தில் மணமாலை ஏறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். பொன் பொருள் சேர்க்கை என வாழ்க்கை வளமாகும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இக்காலத்தை உங்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். அரசு துறையினருக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை அமையும்.அக். 20 முதல் குரு அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் உங்கள் முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும். உங்களால் வளர்ந்தவர்களே உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். சிலருக்கு வம்பு வழக்கு பிரச்னை என்று நாட்கள் நகரும். உடல்நிலையிலும் எதிர்பாராத பாதிப்பு ஏற்படும். பணவரவில் தடை உண்டாகும். என்பது பொதுப்பலனாகும். இந்த சமயத்தில் உங்கள் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், யோகமான திசா புத்தி நடந்தால் சங்கடங்கள் எதுவும் உங்களை நெருங்காமல் போகும். உங்கள் நட்சத்திராதிபதி சந்திரனுக்கு குரு நட்பானவர் என்பதுடன் தாரா பலன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு ஸேம தாரையான புனர்பூசத்திலும், ஸாதக தாரையான ஆயில்யத்திலும் குரு சஞ்சரிக்கும் காலங்களில் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மே 26 ல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதார நிலை உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும், உங்கள் செல்வாக்கு உயரும். பட்டம் பதவி தேடிவரும்.  நினைத்த காரியங்கள் நடந்தேறும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என அவரவர் தேவைகள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பணியாளர் ஆதரவு கிடைக்கும்.அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 12,2,4 ம் இடங்களைப் பார்ப்பதால், வீண் செலவுகள் குறையும். உடல்நிலை சீராகும். மனதில் நிம்மதி ஏற்படும். குடும்பத்தில் தோன்றிய குழப்பம் விலகும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற முயற்சி நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும், சகாய ஸ்தானத்தில்  சஞ்சரிக்கும் சனியும், குருவின்  பார்வைகளும், 120 நாட்கள் சூரியனும் நீங்கள் எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.தொழில் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் ராசிநாதனான சனி பகவான், எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். சிலர் வசதியான இடத்திற்கு தொழிலை மாற்றம் செய்வீர்கள். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.உதிரி பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, இயந்திரத் தொழிற்கூடம், வாகனம் தயாரிப்பு மற்றும் விற்பனை, கால்நடை வளர்ப்பு, எண்ணெய் வர்த்தகம், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள், பால், குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஆடை ஆபரணத் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள் வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும், எதிர்பார்த்த சலுகையும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைக்காக கடல் கடந்து செல்ல மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். அரசு பணியாளர்கள், உயர் பதவியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். ஆரோக்கியத்துடன் செயல்படக்கூடிய நிலை உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என அவரவர் கனவு நனவாகும். குடும்பத்தில் செல்வாக்கு உயரும். கணவரின் அன்பு கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் தற்போதுள்ள நிலை உயரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.கல்வி குருப் பார்வையால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலைஅஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் வெளிப்படும் என்றாலும், சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து ராசியைப்பார்க்கும் குருவும் உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார்கள். இதுவரை இருந்த பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும்.குடும்பம்நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த நெருக்கடியும் போராட்டங்களும் விலகும். ஏழாம் இட குருவும், மூன்றாம் இட சனியும் உங்கள் நிலையை உயர்த்துவர். குடும்பத்தில் சுபிட்சமான நிலையை உண்டாக்குவர். தம்பதிக்குள் ஒற்றுமையை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். செல்வாக்கை உயர்த்துவர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.பரிகாரம் இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட சங்கடங்கள் விலகும்.அவிட்டம் 1,2: செயலில் கவனம்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறேவேறும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலை மாறும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்னைகளும், சிலருக்கு உடல்நிலையில் பின்னடைவும் ஏற்படும். தவறானவர்களின் பிடியில் சிக்கி பண இழப்பு அவமானம் என்பதை சந்திக்க வேண்டிவரும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சிலருக்கு ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம், தொழிலில் போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். சிலர் சட்ட சிக்கல்களையும் வம்பு வழக்குகளையும் சந்திக்க வேண்டிவரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, பிரச்னை என ஏற்படும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு  நெருக்கடி, போராட்டம், பிரச்னை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார். செல்வாக்கோடு உங்களை நடைபோட வைப்பார். உடல்நிலை சீராவதுடன் நீண்டநாள் கனவுகளும் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு சங்கடங்கள் வரும் போதெல்லாம் அரணாக நின்று  உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் கிடைக்கும் இடங்கள் சுபிட்சமடையும்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் உங்கள் ராசியையும் லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், வியாபாரம தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். தைரியமாக செயல்பட முடியும். திருமணம், குழந்தை பாக்யம், வேலை என்ற எண்ணங்கள் ஈடேறும்.அக். 20 முதல், 12, 2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் செலவுகளும் வெட்டி அலைச்சலும் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் 10,12,2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவடையும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.எடுத்த வேலைகள் வெற்றியாகும். சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான சனியும், பாக்ய குருவும், 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் குருவும் நன்மைகளை வழங்குவர். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.தொழில் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களுக்கு, செய்யும் தொழிலில் அக்கறை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தமும் பணியாளர் ஆதரவும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும்.பெண்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வெளியூரில் தங்கி வேலைப் பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் தேவைகள் பூர்த்தியாகும்.கல்விஉயர்வான வாழ்க்கையையும் அதிகாரமிக்க பதவியையும் விரும்பும் உங்களுக்கு, படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறீர்கள்.குடும்பம்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் யோக நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.

கும்பம்: அவிட்டம் 3,4: செயலில் கவனம்தைரிய வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2ம் பாதங்களான மகர ராசியில் பிறந்தவர்களுக்கும், 3,4 ம் பாதங்களான கும்பத்தில் பிறந்தவர்களுக்கும் சனி பகவானே ராசிநாதனாவார்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் சப்தம ஸ்தானத்திலும், அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், வாழ்க்கை வளமாகும். நெருக்கடிகள் நீங்கும். பொருளாதார நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் நிறேவேறும். அக். 20 முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலை மாறும். வியாபாரம் தொழிலில் மந்தநிலை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்னைகளும், சிலருக்கு உடல்நிலையில் பின்னடைவும் ஏற்படும். தவறானவர்களின் பிடியில் சிக்கி பண இழப்பு அவமானம் என்பதை சந்திக்க வேண்டிவரும். எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானமான 7 ம் வீட்டிலும் குரு சஞ்சரிப்பதால், மே 26 முதல் சிலருக்கு ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும். வியாபாரம், தொழிலில் போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத்தொல்லை அதிகரிக்கும். சிலர் சட்ட சிக்கல்களையும் வம்பு வழக்குகளையும் சந்திக்க வேண்டிவரும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு, பிரச்னை என ஏற்படும். அக். 20 முதல் இந்த நிலை மாறும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு  நெருக்கடி, போராட்டம், பிரச்னை என்பதையெல்லாம் இல்லாமல் செய்வார். செல்வாக்கோடு உங்களை நடைபோட வைப்பார். உடல்நிலை சீராவதுடன் நீண்டநாள் கனவுகளும் நனவாகும், பட்டம், பதவி, அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் எல்லாம் தேடிவரும். பொன் பொருள் சேரும், குடும்பத்திலும் வேலையிலும் நிம்மதியான நிலை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும்.உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் குருவிற்கு நட்பானவர் என்பதால், உங்களுக்கு சங்கடங்கள் வரும் போதெல்லாம் அரணாக நின்று  உங்களைப் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸேமம் மற்றும் ஸாதக தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் நன்மைகள் கூடும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் கிடைக்கும் இடங்கள் சுபிட்சமடையும்.அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் உங்கள் ராசியையும் லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், வியாபாரம தொழில் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். தைரியமாக செயல்பட முடியும். திருமணம், குழந்தை பாக்யம், வேலை என்ற எண்ணங்கள் ஈடேறும்.அக். 20 முதல், 12, 2,4 ம் இடங்களைக் குரு பார்ப்பதால், வீண் செலவுகளும் வெட்டி அலைச்சலும் குறையும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். அவிட்டம் 3,4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் 10,12,2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்துவரும் தொழில் லாபம்தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவடையும். எதிர்பார்த்த உயர்வு ஏற்படும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும்.பணப்புழக்கம் அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.எடுத்த வேலைகள் வெற்றியாகும். சேமிப்பில் கவனம் செல்லும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். அக். 20 முதல் ஜென்ம ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும், உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்அவிட்டம் 1,2 ம் பாதத்தினருக்கு சகாய ஸ்தான சனியும், பாக்ய குருவும், 3,4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் குருவும் நன்மைகளை வழங்குவர். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் சேரும்.தொழில் தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக்கூடிய உங்களுக்கு, செய்யும் தொழிலில் அக்கறை உண்டாகும். உற்பத்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தமும் பணியாளர் ஆதரவும் கிடைக்கும். ரியல் எஸ்டேட், மெடிக்கல், மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், உணவகம், ரசாயன விற்பனை, ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், வாகன விற்பனை, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லை சலுகைகள் இல்லை என்று வருத்தப்பட்டு வந்த நிலை மாறும்.பெண்கள்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். நெருக்கடிகள் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேரும். வெளியூரில் தங்கி வேலைப் பார்த்து வருபவர்களுக்கு சொந்த ஊருக்கு மாறுதல் கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். உயர்கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற அவரவர் தேவைகள் பூர்த்தியாகும்.கல்விஉயர்வான வாழ்க்கையையும் அதிகாரமிக்க பதவியையும் விரும்பும் உங்களுக்கு, படிப்பின்மீது அக்கறை அதிகரிக்கும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைபரம்பரை நோய், தொற்றுநோய், விபத்து என்று சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். பாதிப்புகள் விலகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குகிறீர்கள்.குடும்பம்குருப்பார்வைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள், நெருக்கடிகள் முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மீது அக்கறை கூடும். புதிய இடம் வீடு வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம் யோக நரசிம்மரை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.சதயம்: கவனம் தேவையோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், கர்மக்காரகனான சனியை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் அதை யாராலும் மாற்ற முடியாது. எடுத்த வேலைகளை மட்டும் அல்லாமல் பிறரால் செய்ய முடியாத வேலைகளையும் செய்து வெற்றிபெறக்கூடியவர்கள் நீங்கள் என்பதால் உங்களுக்கென்று எப்போதும் தனி செல்வாக்கு இருக்கும். இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரித்து உங்கள் முயற்சிகளை வெற்றியாக்கி செல்வாக்கோடு நடைபோடவைத்த குரு,மே 26 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6 ம் இடத்தில் சஞ்சரித்து, அதிசாரமாக அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.இதன் காரணமாக, மே. 26 முதல் 6 ம் இட குரு எடுக்கும் வேலைகளில் இழுபறியான நிலையினையும், எதிரிகளால் தொல்லைகளையும், வம்பு வழக்குகளையும், ஆரோக்கியத்தில் சங்கடத்தையும், பண வரவில் தடைகளையும், வியாபாரத்தில் மந்தமான நிலையினையும், குடும்பத்தில் குழப்பத்தையும், கணவன் மனைவிக்குள் பிரச்னைகளையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏதாகிலும் ஒரு பிரச்னை என்று ஒன்று விட்டு ஒன்று வந்து கொண்டிருக்கும். தொழிலும் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பது பொதுவான விதி. அக். 20 முதல் இந்த நிலை மாறும். மந்திரம் போட்டதுபோல் உங்கள் வாழ்க்கை வளமாகும்.செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இடம் வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு உண்டாகும். திருமண வயதினர் மணமேடை ஏறுவர். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு பதவி கிடைக்கும்.உங்கள் ராசியாதிபதி சனிக்கு, குரு நட்பானவர் என்பதுடன் தாரா பலன்படி உங்கள் நட்சத்திரத்திற்கு ஸாதக தாரையான புனர்பூசத்திலும், ஷேம தாரையான ஆயில்யத்திலும் சஞ்சரிக்கும் காலங்களில் குரு அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்குவார்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மே 26 ல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசிக்கு 10,12, 2 ம் இடங்களைப் பார்ப்பதால் செய்துவரும் தொழில் லாபம் தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வேலைக்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலைக்கிடைக்கும். வீண்செலவுகள் குறையும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியடையும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அக். 20 ல் அதிசாரமாக சிம்மத்தில் சஞ்சரிக்கும் குரு, உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் பார்ப்பதால், உங்களிடம் புதிய நம்பிக்கை உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் விருப்பம் நிறைவேறும். திருமண வயதினருக்கு திருமணம் நடக்கும். சேமிப்பு உயரும். உடல், மனம் உற்சாகம் அடையும். திருமண வயதினருக்கு வரன் வரும். முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். தைரியத்துடன் செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். பணியாளர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். பழைய முதலீடுகளில் இருந்து வட்டியுடன் பணம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பாலினரின் நட்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் சுபப் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன் மே 26 முதல் குருவின் பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவும், அவரின் பார்வைகளும் ,உங்கள் வாழ்வை வளமாக்கும், எடுத்த வேலைகளை வெற்றியாக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்கும். நவம்பர் 13 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது உங்களை செல்வாக்குடன் நடைபோட வைப்பார்.தொழில்இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானுக்கு மே 26 முதல் குருப்பார்வை கிடைப்பதுடன், சனி பகவானின் 10 ம் பார்வை உங்கள் லாப ஸ்தானத்திற்கு உண்டாவதால், செய்து வரும் தொழில் வளர்ச்சி அடையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், நிதி நிறுவனம், சினிமா, தொலைக்காட்சி, மருத்துவம் சார்ந்த தொழில்கள், கெமிக்கல், ரசாயனம், இயந்திரத் தொழில் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு, வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஜூவல்லரி, எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஆன்லைன் வர்த்தகம், ஆட்டோ மொபைல்ஸ், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், உணவகம், செங்கல் தயாரிப்பு, எம்சாண்ட் தொழில்கள் லாபம் தரும்.பணியாளர்கள் தொழில்காரகன் சனி பகவான் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலையின் மீதிருந்த பயம் போகும். எதிர்பார்த்த சலுகையும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வேலைக்காக கடல் கடந்து செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.பெண்கள்குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்னை, உடல் நிலையிலும் பாதிப்பு என்றிருந்த நிலைகள் மாறும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவரின் அன்பு கூடும்.  படிப்பு, வேலை, திருமணம் என்ற  அவரவரின் கனவுகள் நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.கல்வி குருப் பார்வையால் படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மேற் கல்விக்காக சிலர் வெளி மாநிலத்திற்கும் வெளிநாட்டிற்கும் செல்வீர்கள்.உடல்நிலைகுருப்பார்வையும், நவ. 13 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் உங்களை ஆரோக்கியமாக நடைபோட வைப்பார்கள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மருத்துவத்தால் குணமாகும்.குடும்பம் குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மருத்துவ செலவுகள் குறையும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.பரிகாரம் தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரட்டாதி 1,2,3: வழக்கில் வெற்றி––––––ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், இதுவரை அடைந்துவந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். சுபிட்சம் மறையும். சோதனைகள் அதிகரிக்கும். உடலில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன்தொல்லை வேதனைதரும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும் என்பது ஆறாமிட குரு வழங்கும் பொதுப்பலனாகும். அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலையாவும் மாறும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் கூடும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு,மே 26 முதல், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, நினைத்ததை சாதிக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பட்டம், பதவி, பொறுப்பு என்ற கனவை நனவாக்குவார். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபிட்சமான நிலையினை உண்டாக்குவார். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியத்தை வழங்குவார். சொந்த வீடு, குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்ப்பார். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நிலையை மாற்றுவார். எந்த ஒன்றிலும் இழுபறியான நிலை ஏற்படும். உடல்நிலையிலும் ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு உங்கள் செயல்பாட்டை தடுக்கும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என உங்கள் நிம்மதியைக் கெடுக்கும். பணவரவிலும் தடை ஏற்படும், வியாபாரம் தொழிலிலும் நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்திலும் சங்கடங்கள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும்.இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால், உங்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவாரே ஒழிய கடுமையாக சோதிக்க மாட்டார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸம்பத், மற்றும் ஷேம தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் படும் இடங்கள் சுபிட்சமடையும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், 10,12,2 ம் இடங்களை குரு பார்ப்பதால், வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பாத சனியின் பாதிப்பு நீங்கும்.அக். 20 முதல், உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மற்றவர்கள் மதிக்கும் வகையில் உங்கள் நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும்.  தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், ஜென்ம சனியின் பாதிப்புவிலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கட விலகும். எதிர்பார்த்த புகழும் பெருமையும் கிடைக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த வேலைகளிலும் இப்போது ஆதாயம் உண்டாகும். அரசாங்க உதவியும் ஆதரவும் கிடைக்கும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எண்ணம் நிறைவேறும்.அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம், வசதி வாய்ப்பு கூடும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருப்பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளும், நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும் அவருடைய பார்வைகளும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் அரண்போல் இருந்து பாதுகாப்பர்.நன்மைகளை வழங்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். சுபிட்சத்தை ஏற்படுத்துவர். பொன் பொருள் புகழுக்கு வழிகாட்டுவர். வழக்கில் வெற்றியை உண்டாக்குவர்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிய தொழில் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜூவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நெருக்கடி நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.பெண்கள்குரு பகவானின் பார்வைகளும் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதுடன், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும், பொன் பொருளும் சேரும்.கல்விஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு, படிப்பின் மீது அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும், மங்களக்காரகன் குருவின் பார்வைகளும் சஞ்சாரமும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும் ஆபத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடை போடுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம் ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.

மீனம்: பூரட்டாதி 4: வழக்கில் வெற்றிஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக நீங்கள் கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதமான மீனத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவானே ராசிநாதனாகவும் உள்ளார்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும், அக். 20 முதல் சப்தம ஸ்தானத்திலும் சஞ்சரித்து குரு பலன்களை வழங்கிட உள்ளதால், மே 26 முதல், இதுவரை அடைந்துவந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். சுபிட்சம் மறையும். சோதனைகள் அதிகரிக்கும். உடலில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரியாக மாறும் நிலை ஏற்படும். தொழிலில் முதலீடு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் இல்லாமல் போகும். கடன்தொல்லை வேதனைதரும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வரும் என்பது ஆறாமிட குரு வழங்கும் பொதுப்பலனாகும். அக். 20 முதல் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் இந்த நிலையாவும் மாறும். இதுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். செல்வம் செல்வாக்கு அந்தஸ்து உயரும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். சொத்து சுகம் கூடும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். தொழில் வளர்ச்சி அடையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு,மே 26 முதல், பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு, நினைத்ததை சாதிக்க வைப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பட்டம், பதவி, பொறுப்பு என்ற கனவை நனவாக்குவார். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றத்தை வழங்குவார். குடும்பத்தில் சுபிட்சமான நிலையினை உண்டாக்குவார். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியத்தை வழங்குவார். சொந்த வீடு, குழந்தை பாக்யத்திற்காக ஏங்கியோரின் ஏக்கத்தை தீர்ப்பார். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குரு, முன்பிருந்த நிலையை மாற்றுவார். எந்த ஒன்றிலும் இழுபறியான நிலை ஏற்படும். உடல்நிலையிலும் ஏதாகிலும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு உங்கள் செயல்பாட்டை தடுக்கும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என உங்கள் நிம்மதியைக் கெடுக்கும். பணவரவிலும் தடை ஏற்படும், வியாபாரம் தொழிலிலும் நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்திலும் சங்கடங்கள் உருவாகும். குடும்பத்தில் நிம்மதி இல்லா நிலை உருவாகும்.இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் நட்சத்திராதிபதியே குரு என்பதால், உங்களுக்கு அவர் வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவாரே ஒழிய கடுமையாக சோதிக்க மாட்டார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி ஸம்பத், மற்றும் ஷேம தாரைகள் என்பதால் பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குருவின் சஞ்சார நிலை பாதகமாக இருக்கும் காலத்திலும் அவருடைய பார்வைகள் படும் இடங்கள் சுபிட்சமடையும்.பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல், 10,12,2 ம் இடங்களை குரு பார்ப்பதால், வியாபாரம் வளர்ச்சி அடையும். தொழில் லாபம்தரும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். வீண் செலவுகளும் அலைச்சலும் குறையும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். பாத சனியின் பாதிப்பு நீங்கும்.அக். 20 முதல், உங்கள் ராசியையும், லாபம் மற்றும் சகாய ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் மற்றும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். மற்றவர்கள் மதிக்கும் வகையில் உங்கள் நிலை உயரும். சேமிப்பு அதிகரிக்கும். பட்டம் பதவி தேடிவரும். திருமண வயதினருக்கு வரன் அமையும்.  தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சொந்த வீடு, வாகனம் என்ற கனவுகள் நனவாகும்.பூரட்டாதி 4 ம் பாதத்தினருக்கு, மே 26 முதல் உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் குரு பார்ப்பதால், ஜென்ம சனியின் பாதிப்புவிலகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கட விலகும். எதிர்பார்த்த புகழும் பெருமையும் கிடைக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த வேலைகளிலும் இப்போது ஆதாயம் உண்டாகும். அரசாங்க உதவியும் ஆதரவும் கிடைக்கும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். புதிய சொத்து வாங்குவீர்கள். வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற எண்ணம் நிறைவேறும்.அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைக் குரு பார்ப்பதால், செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு என்பதிலிருந்து விடுதலைக் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்வு மேம்படும். தொழிலைப் புதுப்பிக்கும் பணி நடந்தேறும். புதிய வாகனம், வசதி வாய்ப்பு கூடும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன்பூரட்டாதி 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் குருப்பார்வைகளும், அக். 20 முதல் சப்தம குருவின் சஞ்சாரம் மற்றும் பார்வைகளும், நவ. 13 முதல் சத்ரு ஜெய ஸ்தான கேதுவும், 4 ம் பாதத்தினருக்கு மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும் அவருடைய பார்வைகளும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் அரண்போல் இருந்து பாதுகாப்பர்.நன்மைகளை வழங்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். சுபிட்சத்தை ஏற்படுத்துவர். பொன் பொருள் புகழுக்கு வழிகாட்டுவர். வழக்கில் வெற்றியை உண்டாக்குவர்.தொழில்தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். முடங்கிய தொழில் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பாக இருப்பர். ஜூவல்லரி, ஆடை வர்த்தகம், சிறு குறு நிறுவனங்கள், பெரு வணிகம், நிதி நிறுவனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு, பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஏ.ஐ., ஆன்லைன் வர்த்தகம், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், வேளாண் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள்தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். நெருக்கடி நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் எதிர்பார்த்த சலுகையும் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும்.பெண்கள்குரு பகவானின் பார்வைகளும் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதுடன், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். சிலருக்கு மறுமணம் நடந்தேறும் வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையும், பொன் பொருளும் சேரும்.கல்விஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்ட உங்களுக்கு, படிப்பின் மீது அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். விரும்பிய கல்லூரியில், விருப்பப்பட்ட பாடப்பிரிவில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரமும் பார்வைகளும் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும் என்றாலும், மங்களக்காரகன் குருவின் பார்வைகளும் சஞ்சாரமும், சர்ப்ப கிரகங்களின் சஞ்சாரங்களும் ஆபத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். நோய் நொடி என்றிருந்த நிலை மாறும். மருத்துவச் செலவு குறையும். தொடர்ந்து மருத்துவச் சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடை போடுவீர்கள்.குடும்பம்குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழக்கூடிய நிலை ஏற்படும்.பரிகாரம் ஸ்ரீ வாஞ்சிநாதரை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திரட்டாதி: நீங்கதான் நம்பர் 1கர்மக்காரனான சனி பகவானை நட்சத்திர அதிபதியாகவும், தன புத்திரக்காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள் எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியானவர்கள். நீங்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டால் அதை எவராலும் மாற்ற முடியாது. சாதாரண இடத்தில் பிறந்திருந்தாலும் உங்கள் வாழ்க்கை வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்கும் என்றாலும், குரு சனி சேர்க்கையின் காரணமாக வெண்ணை திரண்டுவரும் வேளையில் தாழி உடைந்ததுபோல் எல்லாம் கைக்கு வரும் நேரத்தில் அதில் ஒரு தடை வந்துவிடும். மற்றவர்களுக்கு வழிகாட்டிடக்கூடிய உங்களுக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து மன உளைச்சலையும், நிம்மதியற்ற நிலையினையும் வழங்கிவந்த குரு, மே 26 முதல், உங்கள் பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரித்து, அக். 20 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.இதன் காரணமாக, மே 26 முதல் 5 ம் இட குருவால் உங்கள் சங்கடங்கள் தீரும். பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் போகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உங்களைவிட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். சிலருக்கு காதல் தோன்றும். திருமண வயதினருக்கு திருமணம் முடியும். செய்துவரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஆடை ஆபரணம் சேரும். எதிர்பாலினரின் உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். ஆரோக்யம் சீராகும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், முன்புபோல் யோகப்பலன்களை வழங்க முடியாமல் போகும். ராசிநாதனும் சுப கிரகமுமான குரு மறைவு பெறுவதால் சுபிட்சங்கள் மறையும், நன்மை விலகும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பண வரவில் தடை உண்டாகும். நண்பர்களும் எதிரிகளாக மாறுவர். தொழிலில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படும். எதிர்ப்பு, போட்டி, பகை, வம்பு, வழக்கு என சங்கடங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்திலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும்.இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும்.உங்கள் நட்சத்திராதிபதி சனி குருவிற்கு நட்பானவர் என்பதுடன், ராசிநாதனே குரு என்பதால், உங்களுக்கு சங்கடமான காலத்திலும் அவர் நன்மைகளையே வழங்குவார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், ஆயில்யம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் உங்கள் நிலை உயரும். நன்மைகள் அதிகரிக்கும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் பார்ப்பதால், ஜென்ம சனியால் சந்தித்துவரும் பாதகப்பலன்கள் விலகும். ஆரோக்கியமாகவும் செல்வாக்குடனும் நடைபோடுவீர்கள். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். பட்டம், பதவி, அந்தஸ்து என்ற கனவு நனவாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன் பொருள் சேரும். புதிய இடம், வீடு என்ற எண்ணம் நிறைவேறும். விலகி இருந்த நண்பர்கள் உறவினர்கள் உங்களைத்தேடி வருவர். சிலருக்கு, வேலை, திருமணம், குழந்தை பாக்யம் என்ற கனவு நனவாகும். வியாபாரம் தொழில் வளர்ச்சி அடையும். லாபம் கூடும். பொருளாதார நிலை உயரும்.அக். 20 முதல், 10,12, 2ம் இடங்களைப் பார்க்கும் குருவால், வேலைக்காகவும், புதிய தொழில் தொடங்கவும் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட சிக்கல், வழக்கு முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு பட்டம் பதவி என யோகம் உண்டாகும். இடம், வீடு வாங்குதல், வீடு கட்டுதல் என வாழ்க்கை மேம்படும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அலைச்சல் குறையும். வருமானம் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன் மே 26 முதல் பூர்வ புண்ணிய ஸ்தான குருவும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். செல்வம் செல்வாக்கோடு வாழ வைப்பர். பட்டம் பதவி என்ற கனவை நனவாக்குவர். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பத்தில் உயர்வை ஏற்படுத்துவர். நோய் நொடி எதிர்ப்பு வம்பு வழக்கிலிருந்து விடுவிப்பர்.தொழில்தொழில்காரகன் சனிபகவான் ராசிக்குள் அமர்ந்து தொழில் ஸ்தானத்தையும் பார்ப்பதுடன், ராசிநாதன் குரு, சனி பகவானைப் பார்ப்பதுடன் அக். 20 முதல் குருவும் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். நிதி நிறுவனம், ஜுவல்லரி, பங்கு வர்த்தகம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ட்ராவல்ஸ், ஹார்ட்வேர், மென்பொருள், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், பதிப்பகம், அச்சகம், கல்வி சார்ந்த தொழில்கள் வளர்ச்சி அடையும்.பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் ஏற்பட்ட வழக்கு, நெருக்கடி முடிவிற்கு வரும். தடைபட்டிருந்த பதவி உயர்வும் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வேலைப் பார்க்கும் இடத்தில் மதிப்பு உயரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சிலர் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு கடல் கடந்து செல்வீர். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள்ராசிக்குள் சனி பகவான் சஞ்சரித்தாலும், குருப்பார்வை ராசிக்கு கிடைப்பதுடன், குருப் பார்வைகளும், ராகு கேது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால், நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். படிப்பு, வேலை, திருமணம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். மாங்கல்யம் பலம் பெறும். கருத்து வேறுபாட்டாலும் வேலையின் காரணமாகவும் பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குழந்தைகளின் நலனில் அக்கறைகூடும். புதிய வீடு வாகனம் என வாங்குவீர்கள். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும்.கல்வி படிப்பும் உத்தியோகமும்தான் வாழ்க்கை என்பதை உணர்ந்திருக்கும் உங்களுக்கு, உயர்கல்வி முயற்சி வெற்றியாகும். விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.உடல்நிலைஆயுள்காரகன் சனி பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினாலும், குரு சஞ்சாரமும் பார்வைகளும், ஆறாமிட கேதுவும் படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து நடமாட வைப்பார்கள். விபத்து, நோய் என்று மருத்துவ மனைகளுக்கு சென்று வந்தவர்கள் நலமடைவர். ஆரோக்கியம் சீராகும் மருத்துவச்செலவுகள் குறையும்.குடும்பம்தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்குவரும். உறவினர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உங்கள் நிலை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். சேமிப்பு உயரும். வீட்டிற்குள் புதிய உறவு வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும்.பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வழிபட தடைகள் விலகும். வேண்டுதல் நிறைவேறும்.ரேவதி: நல்லதே நடக்கும்வித்யாகாரனான புதன் பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஞானக்  காரகனான குருவை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதித்திடக் கூடியவர்கள். செல்வாக்கு அந்தஸ்தோடு வாழக்கூடியவர்கள். எந்த ஒன்றையும் சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு,மே 26 முதல், உங்கள் ராசிநாதன் குரு பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான 5 ம் வீட்டில் உச்சமாக சஞ்சரிக்கப் போகிறார், அங்கிருந்து அக். 20 முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கிறார்.மே 26 முதல் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். சுப காரியங்கள் நடந்தேறும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த வருமானம் வரும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். உயர்கல்வி பட்டம் பதவி என பெருமைகள் சேரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். கடந்த காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் விலகி நன்மைகள் உண்டாகும். அக். 20. முதல் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அதிசாரமாக சஞ்சரிக்கும் குருவால், உடல் நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். எதிர்ப்பு அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லாத நிலை உருவாகும். பணவரவில் தடை, கடன் தொல்லை, உத்தியோகத்தில் நெருக்கடி, தொழிலில் முன்னேற்றம் இல்லாத நிலை, குடும்பத்தில் பிரச்னை, தம்பதிக்குள் கருத்து வேறுபாடு, உறவினர்களுடனும் நண்பர்களுடனும் பிரச்னை என்று பலன்கள் மாறும். இவை எல்லாம் குரு வழங்கும் பலன்களேயாகும். உங்கள் ராசிநாதனே குரு என்பதால், நீங்கள் தடுமாறும் போதெல்லாம் தாங்கிப் பிடிப்பார். நெருக்கடிக்கு ஆளாகும் போதெல்லாம் பாதுகாப்பார் என்பதுடன், அவர் சஞ்சரிக்கும் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்கள் தாரா பலன்படி நட்பு, அதிநட்பு மற்றும் ஸம்பத் தாரைகள் என்பதால் புனர்பூசம், பூசம், மகம் நட்சத்திரங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் எடுத்த வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும்.சஞ்சாரம் மற்றும் பார்வை பலன்குரு சஞ்சரிக்கும் இடங்கள் எதிர்மறையாக இருந்தாலும் அவர் பார்க்கும் மூன்று இடங்களும் சுபத்துவம் அடையும் என்பது ஜோதிடவிதி.மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு அங்கிருந்து உங்கள் ராசியையும், பாக்யம் மற்றும் லாப ஸ்தானங்களையும் பார்ப்பதால், உங்கள் வாழ்க்கை வளமாகும். செல்வாக்குடன் வாழ்ந்திடும் நிலை உருவாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்களும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலை ஏற்படும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். பட்டம் பதவி என்பதெல்லாம் தேடி வரும்.  ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனி பகவானின் பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். வேலை, திருமணம், குழந்தை பாக்யம், சொந்த வீடு, வாகனம் என்ற எண்ணம் பூர்த்தியாகும். பண நெருக்கடி நீங்கும். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.அக். 20 முதல் உங்கள் ராசிக்கு 10,12, 2ம் இடங்களைப் பார்க்கும் குருவால், செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த பதிவு உயர்வு கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வீண் செலவுகள் குறையும். கடன் தொல்லை விலகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.அஸ்தமனம் மற்றும் வக்ர காலங்கள்ஜூலை 10 முதல் ஆக. 9 வரை கடக ராசியில் குரு அஸ்தமனம் அடைவதால் அவரால் உண்டாகும் பலன்களில் தடையுண்டாகும். டிச. 22 முதல் 2027, பிப். 13 வரை சிம்மத்திலும், அதன்பிறகு ஏப். 20 வரை கடகத்திலும் வக்ர கதியிலேயே சஞ்சரிப்பதால் மேலே உள்ள பலன்கள் மாறுபடும். பொதுப்பலன் மே 26 முதல் கடகத்தில் சஞ்சரிக்கும் குருவும், அக். 20 முதல் குருவின் பார்வைகளும், நவ. 13 வரை சத்ரு ஜெய ஸ்தான கேதுவும். நவ.13 முதல் லாப ஸ்தான ராகுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். நோய் நொடி வம்பு வழக்கு என்றிருந்த நிலைகளை இல்லாமல் செய்வர். வீடு வாகனம் என்ற கனவுகளை நனவாக்குவர். ஆரோக்கியமாகவும் செல்வாக்குடனும் உங்களை நடைபோட வைப்பர்.தொழில்செய்து வரும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். வர்த்தகம் செழிக்கும். வருவாய் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.பங்கு வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனம், ஜூவல்லரி, ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், காண்ட்ராக்ட், பதிப்பகம், அச்சகம், செய்தித்தாள், தனியார் பள்ளிகள், ஆன்லைன் வர்த்தகம், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆன்மீகப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை, தொலைக்காட்சி, யூட்யூப், மின்சாதன விற்பனை லாபம் தரும்.பணியாளர்கள் ஐ.டி. துறையில் வேலைப்பார்த்து வருபவர்களுக்கு  வேலையின் மீதிருந்த பயம் போகும். சிலருக்கு புதிய பொறுப்பும் சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலைப் பார்த்து வருபவர்களுக்கு மனதில் நிம்மதி உண்டாகும். அரசு பணியாளர்களுக்கு தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.பெண்கள் பூர்வ புண்ணிய ஸ்தான குரு, ஆறாமிட கேது, நவ. 13 முதல் லாப ஸ்தான ராகு என்று உங்கள் வாழ்க்கையை வளமாக்குவர்.போராட்டங்களையே சந்தித்து வந்தவர்களுக்கு அவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும். நினைத்தது நடந்தேறும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என்ற அவரவர் கனவு நனவாகும். வேலைப்பார்க்கும்  இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். சுய தொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் கூடும். பொன் பொருள் சேரும். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.கல்வி வித்யாகாரகன், ஞானக் காரகன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, படிப்பில் அக்கறை இருக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். எதிர்பார்த்த பாடப்பிரிவில் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். சிலர் வெளிமாநிலம் வெளிநாடு என்றும் மேற்கல்விக்காக செல்வீர்கள்.உடல்நிலைஆறாமிட கேதுவும், குரு சஞ்சாரமும், பார்வைகளும் உங்கள் உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடங்களை நீக்கும். பார்க்காத டாக்டர் இல்லை போகாத ஆஸ்பிட்டல் இல்லை என விரக்தி அடைந்தவர்களின் நிலை இப்போது மாறும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு குணமாகும். ஆரோக்கியமாக நடைபோடக்கூடிய நிலை உருவாகும்.குடும்பம் பூர்வ புண்ணிய ஸ்தான குரு, ஆறாமிட கேது, நவ. 13 முதல் லாப ஸ்தான ராகு என கிரகங்கள் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். பணப்புழக்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை கூடும். நோய் நொடி வம்பு வழக்கு என்று வாழ்ந்த நிலைமாறும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.பரிகாரம்  ஏழு மலைவாழ் வெங்கடாஜலபதியை வழிபட நன்மைகள் நடக்கும். வேண்டுதல் நிறைவேறும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us