தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

/

16

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1044

பிரிட்டன் ராயல் சொசைட்டி விருதுக்கு புதுச்சேரி பல்கலை., பேராசிரியர் தேர்வு 

புதுச்சேரி

2 minutes ago

மேஷம்:அசுவினி: உழைப்பாலும், சுய முயற்சியாலும் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது மனதில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவார். பிள்ளைகளால் சிலருக்கு நெருக்கடி ஏற்படும். பிரச்னைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட விவகாரம் நீடிக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி இல்லை என்ற நிலை உருவாகும் என்றாலும், லாப ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். தொழில் நிறுவனம் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரமாக சஞ்சரிப்பதும், ஆக.9 வரை குரு அஸ்தமன நிலையை அடைந்திருப்பதும் எதிர்பாராத நெருக்கடி, சங்கடங்களை ஏற்படுத்தும். உங்கள் செயல்களில் தடை, தடுமாற்றம் உண்டாகும். யோசிக்காமல் சில வேலைகளில் இறங்கி அவதிக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும் என்பதால், ஒவ்வொரு வேலையிலும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது. முடிந்தவரை குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை எடுப்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஜூலை 23, 24.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 16, 18, 25, 27. ஆக. 7, 9, 16.பரிகாரம்: இம்மையிலும் நன்மை தருவாரை வழிபட நன்மை உண்டாகும்.பரணி: அதிர்ஷ்ட வாய்ப்பிற்காக காத்திருக்காமல் சுய உழைப்பால் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் ஆக.1 வரை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வரும். திட்டமிட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் வளர்ச்சி அடையும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். பொன் பொருள் சேரும். பணியாளர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும் என்றாலும், ஆக.2 முதல் சுக்கிரன் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன், ஆத்மகாரகன் சூரியனும் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிரி தொல்லையும், உடல் பாதிப்பும், மனதில் சங்கடமும், நோயும் சிலருக்கு உண்டாகும். ராசிநாதனும் தைரிய காரகனுமான செவ்வாய் ஆக.2 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உருவாகும். எந்த ஒன்றாக இருந்தாலும் அதில் முதலிடத்தில் இருக்க முடியும். உடன் பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும். தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு ஏற்படும். ஆக. 1 முதல் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எதை எப்படிச் செய்ய வேண்டும், எதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் உருவாகும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். யோகக்காரகன் ராகுவின் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பணப்புழக்கம் இருந்து கொண்டிருக்கும். சிலருக்கு சொத்து சேரும். வயதானவர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அக்கறை ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 24, 25.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 18, 27. ஆக. 6, 9, 15.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.கார்த்திகை 1ம் பாதம்: பிறந்த இடம் எதுவாக இருந்தாலும் வாழும் வாழ்க்கையை மேலானதாக மாற்றிக் கொள்ளும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி  யோசித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஆத்ம காரகன் சூரியன் மாதம் முழுவதும் நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களையும் அறியாமல் மனதில் பயம் மேலோங்கும். எதிரிகளால் தொல்லை உண்டாகும். நெருக்கடி அதிகரிக்கும் என்றாலும், ராசிநாதன் செவ்வாய் ஆக. 2 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டாகும். எடுக்கின்ற முயற்சி யாவும் வெற்றியாகும். ஆரோக்கியம் சீராகும். வம்பு வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும். அதிர்ஷ்டக்காரகன் ராகுவும் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கையில் பணம் இருந்து கொண்டிருக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். சேமிப்பு உயரும். உழைப்பாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும், நவீன பொருட்களின் சேர்க்கையும் இருக்கும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை அதிகரிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது சில சங்கடம் தோன்ற வாய்ப்பு இருப்பதால், நோய் வரும்போதே சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.  சிலருக்கு  சொத்து சேரும். ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதும், தவறான நண்பர்களை விட்டு விலகுவதும் மாணவர்களுக்கு நன்மை தரும். சந்திராஷ்டமம்: ஜூலை 26அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 19, 27, 28. ஆக. 1, 9, 10பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட்டு வர சங்கடம் விலகும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்வாழ்க்கை என்பது ஜெயிப்பதற்காகத் தான் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். சகாய ஸ்தானத்தில் ஆத்ம காரகன் சூரியன் சஞ்சரிப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி விலகும். தன்னம்பிக்கை கூடும். எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியமாக செயல்படக் கூடிய நிலை உருவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வீடு, வாகனம், வசதி வாய்ப்பு என்ற கனவு நனவாகும். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். எந்த ஒன்றாக இருந்தாலும் திட்டமிட்டு செயல்படுவது நன்மை தரும். இந்த நேரத்தில் தனக்காரகன் குருவும் ஆக.9 வரை அஸ்தமனமாக இருப்பதால் திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பொன், பொருள் என்ற கனவு ஆக.9 க்கு பிறகு நிறைவேறும். பெரியோரின் ஆதரவு கிடைப்பதுடன் தெய்வ அருளும் உண்டாகும். ஜென்ம ராசியை விட்டு உங்கள் விரயாதிபதி செவ்வாய் ஆக.2 முதல் விலகுவதால் மனதில்  நம்பிக்கை பிறக்கும். பயம், பதட்டம் இருந்த இடம் தெரியாமல் போகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். செலவிற்கு ஏற்ற வரவு வந்து கொண்டிருக்கும். பெண்களுக்கு பொறுப்பு கூடும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் காற்று, அடைமழை ஏற்பட வாய்ப்பிருப்பதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.சந்திராஷ்டமம்: ஜூலை 26அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.பரிகாரம்: அகோர மூர்த்தியை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.ரோகிணிதிட்டமிட்டு செயல்படுவதில் சாமர்த்தியசாலியான உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஆக.1 வரை ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் செயலில் தடுமாற்றம், குழப்பம் ஏற்படும். எடுத்த வேலைகள் இழுபறியாகும். மனதில் பதட்டம் இருந்து கொண்டிருக்கும். ஞான மோட்சக்காரகன் கேது நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் சங்கடம் தோன்றும். தாய்வழி உறவுகளுக்கும் உங்களுக்கும் இடைவெளி உண்டாகும். ஆக.1 முதல் வித்யாகாரகன் புதன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அறிவு பூர்வமாக செயல்படக்கூடிய உங்களுக்கு அதில் பின்னடைவு ஏற்படும். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். யாரை நம்புவது! யாரை நம்பக்கூடாது? என தெரியாமல் போகும். வியாபாரிகளுக்கு சந்தை நிலவரத்தை கணிக்க முடியாமல் போகும். அதனால் முதலீடு அதிகரித்தாலும் லாபம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. தொழில் ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஆதாயம் கூடும். வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சூழ்நிலைகள் சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த வருமானம் வரும். தொழிலதிபர்களுக்கு பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் வக்கிரமாக இருப்பதால் இதுவரை சுலபமாக நடந்த வேலைகள் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றியாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.  ராசிநாதன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். சந்திராஷ்டமம்: ஜூலை 27அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 20, 24, 29. ஆக. 2, 6, 11, 15பரிகாரம்: சிவபெருமானை வழிபட சங்கடம் விலகும். மனம் தெளிவடையும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்நடப்பது எதுவாக இருந்தாலும் அதை நம்மால் மாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். செவ்வாய் ஆக.1 வரை உங்கள் ராசிக்குள் சஞ்சரிப்பதால்  குழப்பம், வீண் சிந்தனை, எடுக்கும் வேலையில் இழுபறி ஏற்படும். உங்கள் வழக்கமான திறமையும் இந்த நேரத்தில் வெளிப்படாமல் போகும். உறவினர்கள், உடன் இருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பர். ஆக.2 முதல் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்பு, உடலில் சங்கடத்தை சந்திக்க நேரிடும். எதிர்பார்த்த பணமும் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களைப் பாதுகாப்பார். திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் வெற்றி உண்டாகும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் கூடும். உங்களுக்கு தொல்லைகள் கொடுத்தவர் விலகிச் செல்வர். வேலையில் ஏற்பட்ட பிரச்னை இருந்த இடம் தெரியாமல் போகும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். தேவைக்கேற்ற பணம் வரும்.  தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் நிம்மதி நீடிக்கும். சங்கடம் ஏற்படாமல் போகும். புதியவர்கள் தலையீட்டை குடும்பத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நீங்களே பேசி முடிவு எடுப்பது நல்லது.  அந்நியரால் வீண் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உங்கள் தனிப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு இடமளிக்க வேண்டாம். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது அவசியம். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவதும், ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பதும் அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 28அதிர்ஷ்ட நாள்: ஜூலை 15, 18, 24, 27. ஆக. 6, 9, 15பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட சங்கடம் தீரும்.  நன்மை நடக்கும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்வெற்றிக்குரிய வழிகளை பின்பற்றி முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். மாதத்தின் முற்பகுதியில் விரய ஸ்தானத்திலும், அதன்பின் ஜென்ம ராசிக்குள்ளும் சஞ்சரிக்கும் செவ்வாய் செலவுகளை அதிகரிப்பார். அலைச்சலை ஏற்படுத்துவார். நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். ஞான மோட்சக்காரகன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலைகளை முடிக்கும் சக்தி உண்டாகும் இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாதம் முழுவதும் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடி, தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் சகாய ஸ்தனாதிபதி சூரியன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும், பண விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பதும் நன்மை தரும். அரசியல்வாதிகள் தலைமையின் வார்த்தைக்கு மதிப்பளித்து செயல்படுவதால் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள் விளைச்சலில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 28, 29.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: அக்னீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகி நன்மை உண்டாகும்.திருவாதிரைஉயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்ற உறுதியோடு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதம். யோகக்காரகன் ராகு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். ராசிநாதன் புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் மனதில் இருந்த சுமை இறங்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்பம் தொழில் மேன்மை அடையும். சிலர் குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். நேர்த்திக்கடனை செலுத்தி வருவீர்கள். அதனால் நிம்மதி ஏற்படும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான் ஆக.9 வரை அஸ்தமனமாகி இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானம் வேண்டும். புதிய முயற்சியில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனால் வசதி வாய்ப்பு அதிகரிக்கும். செல்வாக்கோடு நடை போட முடியும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஆத்ம காரகன் சூரியன், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானம் தேவை. வருமான விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்க வேண்டும். உடன் இருப்போரின் ஆலோசனைகளை ஏற்க வேண்டும். பணியாளர்கள் நேர்வழியில் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாணவர்கள் தவறான நட்பை விட்டு விலகுவதால் படிப்பில் முன்னேற்றமடைய முடியும்.சந்திராஷ்டமம்: ஜூலை 29, 30.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 23, 31. ஆக. 4, 5, 13, 14.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும். எதிர்ப்பு விலகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்நாளை என்ன நடக்கும் என்பதை இன்றே கணக்கிட்டு செயல்படும் உங்களுக்கு, ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். தன புத்திரக்காரகன் குரு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உச்சமாக சஞ்சரித்தாலும் ஆக.9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் கடந்த மாதம் வழங்கியது போல் இந்த மாதத்தில் அவரால் யோக பலனை வழங்க முடியாது. திட்டமிடாமல் வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டி வரும். எதிர்பார்த்த வரவும் இழுபறியாகும். குடும்பத்திலும் நிம்மதியற்ற நிலை இருக்கும். பத்தாம் இடத்தில் சஞ்சரித்து வரும் சனிபகவானால் வேலையில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.  தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்காது. சிலர் வேலையை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்யும் நிலை உருவாகும். சுய தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்காமல் போகும். பல வழியிலும் செலவு ஏற்படும். சிலர் கடனை அடைப்பதற்கு மறு இடத்தில் கடன் வாங்குவீர்கள். ஆக.9 முதல் மீண்டும் குரு உச்சமாக சஞ்சரிப்பதால் அதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் நிம்மதி உருவாகும். தொழிலில் ஆதாயம் கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்குள் இணக்கம் இருக்கும். எடுத்த வேலைகள் எல்லாம் வெற்றியாகும் விவசாயிகள் இந்த மாதத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஜூலை 30, 31அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 23. ஆக. 3, 5, 12, 14பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட சங்கடம் விலகும்.

கடகம்; புனர்பூசம் 4 ம் பாதம்நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்ந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன, புத்திர காரகனான குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் வீண் அலைச்சல் குறையும். வேலையின் காரணமாக தான் ஒரிடம் குடும்பம் வேறிடம் என்றிருந்த நிலை மாறும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பிள்ளைகள் மீது அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர்கள். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் மாதம் முழுவதும் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை அவரால் கிடைத்துவந்த யோகப் பலன்கள் மட்டுப்படும். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்கும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை எல்லாம் சாதித்து வந்த நிலையில் பின்னடைவு உண்டாகும். செய்துவரும் தொழிலில் கூடுதல் அக்கறை தேவைப்படும். வருமானத்திலும் பண விவகாரத்திலும் கவனமாக இருப்பது நன்மையாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சூரியன் உங்களுக்குள் பதட்டத்தையும் வேகத்தையும் ஏற்படுத்துவார். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படும். சங்கடங்கள் அதிகரிக்கும். குடும்பத்திலும் ஒருநேரம் இருப்பது போல் மறுநேரம் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகும். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிராக மாறும் என்பதால் அனைத்திலும் நிதானமாக இருப்பது நன்மையளிக்கும். புதிய முயற்சிகளை முடிந்தவரை தள்ளி வைப்பது அவசியம். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். பிற்பகுதியில் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 31.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 21, 29, 30. ஆக. 2, 3, 11, 12.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூசம்: தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கு கிடைத்த வந்த நற்பலன்களில் பின்னடைவு ஏற்படும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்களுடன் இடைவெளி ஏற்படும். உடல் நிலையிலும் மனநிலையிலும் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். திட்டமிட்ட வேலைகளிலும் தடைகள் தடுமாற்றங்கள் என்று ஏற்படும் என்றாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் சிலருக்கு திடீர் வாய்ப்புகள் தேடிவரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ஆக. 9 முதல் குரு நேர்கதியில் உச்சமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கேற்பட்ட நெருக்கடிகள் விலகும். நட்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். பொறுப்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வர வேண்டிய பணம்வரும். விவசாயிகளுக்கு இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நன்மை அளிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 31. ஆக. 1.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2, 8, 11, 17.பரிகாரம்: சனிக்கிழமையில் நவகிரகத்திற்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.ஆயில்யம்: சூழ்நிலைக்கேற்ப செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 31 வரை வித்யா காரகன் புதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் இழுபறியாகும். வரவேண்டிய வரவிலும் தடை உண்டாகும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதில் இழுபறி இருக்கும். நம்பிக்கையோடு மேற்கொண்ட வேலைகளிலும் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படும். ஆக. 1 முதல் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். ஆக. 1 வரை உங்கள் ஜீவனாதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். அனைத்தையும் சமாளித்து முன்னேற முடியும். எதிர்பாராத நேரத்தில் வரவேண்டிய பணம் வரும். சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு, தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் கேது, ஜென்ம ராசிக்குள் சூரியன் சஞ்சரிப்பதால் ஒரு பிரச்னையை முடித்து நிம்மதி அடையும் நேரத்தில் வேறு ஒரு பிரச்னை உங்கள் முன் வந்து நிற்கும் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் கவனமாக இருப்பது நன்மையை உண்டாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பின்விளைவுகள் பற்றி ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம். இக்காலத்தில் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் சங்கடங்கள் உங்களை நெருங்காமல் போகும். குடும்பத்திலும் நிம்மதி இருக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் கலகலப்பான நிலை இருக்கும். நவீன பொருட்கள் சேரும். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். புதிய சொத்து வாங்குகின்ற முயற்சி சிலருக்கு வெற்றியாகும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஆக. 1, 2.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 5, 11, 14.பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

சிம்மம்: மகம்வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானித்து செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்படும். எந்த ஒன்றிலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். குடும்பத்திலும் புயல் வீசும். கணவன் மனைவிக்குள் இடையே விரிசல் ஏற்படும். நல்லவர்கள் என்று வீடுவரை அழைத்து வரப்பட்டவர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் உண்டாகும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த பணம்வரும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உழைப்பாளர்களுக்கு வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் செலவுகள் கட்டுப்படும். அலைச்சல் குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பெண்களுக்கு மனதளவில் ஏற்பட்ட குழப்பம் விலகும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதி யோக காலமாக இருக்கும். கையில் பணம் புரளும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவைப்படும்.சந்திராஷ்டமம்: ஆக. 2, 3.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 16, 19, 25, 28. ஆக. 1, 7, 10, 16.பரிகாரம்: கற்பக விநாயகரை வழிபட சங்கடங்கள் விலகும்.பூரம்: வாழ்க்கையில் அர்த்தம் இருக்க வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். ஆக. 1 வரை ஜென்ம ராசிக்குள்ளும் அதன் பிறகு இரண்டாம் இடமான தன குடும்ப வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார். பணப் புழக்கத்தை ஏற்படுத்துவார். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலையினை உருவாக்குவார். பொன் பொருள் புதிய வாகனம் என்ற கனவை நனவாக்குவார். எடுக்கின்ற முயற்சிகளை வெற்றியாக்குவார். இக்காலத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதும். விரய குரு அஸ்தமனம் ஆகி இருப்பதும் கடந்த மாதத்தில் உங்களுக்கிருந்த நெருக்கடிகளையும் போராட்டங்களையும் பிரச்னைகளையும் இல்லாமல் செய்யும். உங்கள லாபாதிபதி புதனும் ஜூலை 31 வரை லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதற்காகவும் தொழில் தொடங்குவதற்காகவும் வங்கியில் கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும் என்றாலும், ராசிநாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவுகளில் கூடுதல் கவனம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். அறிமுகம் இல்லாதவரை நம்பி எந்தவொரு முயற்சியிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். நண்பர்கள் விஷயத்தில் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை உண்டாக்கும். கூட்டுத் தொழிலும் இந்த நேரத்தில் சங்கடத்தை உண்டாக்கும் என்பதால் ஒவ்வொன்றிலும் திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு நன்மையாகும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்காமல் எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். சிறு தொழில் செய்து வருபவர்களுக்கு லாபநிலை இருக்கும். விவசாயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் ஆக. 1 முதல் படிப்பில் கவனமாக இருப்பது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 3, 4.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 24, 28. ஆக. 1, 6, 10, 15.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.உத்திரம் 1 ம் பாதம்தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் விரயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் கிடைத்த யோகப்பலன்களில் மாற்றம் ஏற்படும். சரளமாக வந்து கொண்டிருந்த வரவில் தடை ஏற்படும். செலவு பல வழியிலும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வந்து சோதனைக்கு ஆளாக்கும். அவசர தேவைகளுக்காக கையிருப்பு கரையும். கையில் இருப்பதை வைத்து சமாளிக்க வேண்டிய நிலைவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். மேல் அதிகாரியுடன் இணக்கமற்ற நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு போராட்ட மயமாக இருக்கும் என்றாலும், ஆக. 2 முதல் உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். புதிய இடம் வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆக. 9 முதல் விரய குரு நேர்கதியில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வைகள் உங்கள் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பை நீக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வம்பு வழக்கு எதிர்ப்பு என்றிருந்த நிலைகளை மாற்றும். அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் முதலீட்டிற்ற ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது அவசியம்.சந்திராஷ்டமம்: ஆக. 4.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 28. ஆக. 1, 10.பரிகாரம்: அண்ணாமலையாரை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆத்ம காரகன் சூரியனால் உங்கள் செல்வாக்கு உயரும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள் இல்லாமல் போகும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். அரசுவழி வேலைகளில் லாபம் வரும்.  அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்கள் நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். கடந்த காலத்தில் மெமோ வழக்கு இடைநீக்கம் என்று சங்கடங்களை சதித்தவர்களுக்கு அவற்றிலிருந்து மாற்றம் ஏற்படும். வரவேண்டிய சலுகைகள் வரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உறவினருடன் ஏற்பட்ட பகை விலகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். கண்டக சனி வக்கிரம் அடைந்திருப்பதால் நட்பு வட்டத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள்.  விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.சந்திராஷ்டமம்: ஆக. 4, 5.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 23, 28. ஆக. 1, 10, 14.பரிகாரம்: தண்டாயுதபாணியை வழிபட மனதில் நிம்மதி உண்டாகும்.அஸ்தம்திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். உங்கள் ராசிநாதனான புதன் ஜூலை 31 வரை கேந்திர பலத்துடன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும்.  எடுத்த வேலைகள் வெற்றியாகும். செய்துவரும் தொழில் வளர்ச்சி அடையும்.  வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆக. 1 முதல் லாப ஸ்தானத்திற்கு புதன் பெயர்ச்சியாவதால் வரவு அதிகரிக்கும். பழைய முதலீட்டில் இருந்து ஆதாயம் வரும்.நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மதிப்பும் மரியாதையும் உண்டாகும். உங்கள் தன குடும்பாதிபதி சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணம் வாகனம் என்று சேரும். சிலர் நவீன பொருட்கள் வாங்குவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு தேடிவரும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் சுமூகமான நிலை இருக்கும். பெண்களுக்கு உடல்நிலையும் மனநிலையும் ஆரோக்கியமாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். ஆக. 9 முதல் குரு லாப ஸ்தானத்தில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடையக்கூடிய நிலையும்  ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். கூட்டுத்தொழில் லாபம் தரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 5, 6.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 23, 29. ஆக. 2, 11, 14.பரிகாரம்: திங்களூர் சந்திரனை வழிபட மனம் தெளிவடையும். பயம் விலகும்.சித்திரை 1, 2 ம் பாதம்உழைப்பதற்கு தயங்காத உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் பொறுமையாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகன் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமற்று இருப்பதால் எடுக்கின்ற வேலைகள் இழுபறியாகும். முதலீட்டிற்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காமல் போகும். சிந்திக்காமல் சில வேலைகளில் இறங்கி அங்கு சங்கடத்திற்கு ஆளாக நேரும். பணமும் நேரமும் விரயமாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையாகும். எந்தவொரு வேலையாக இருந்தாலும் சரியான திட்டமிடுதல் என்பது இந்த நேரத்தில் வேண்டும். அதே நேரத்தில், சூரியன் லாப ஸ்தானத்திலும், யோகக்காரகன் ராகு சத்ரு ஜெய ஸ்தானத்திலும், அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரனும், வித்யாகாரன் புதனும் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் எதிர்கொண்டு உங்களால் வெற்றிபெற முடியும். சுய அறிவும் ஆற்றலும் நினைத்த இடத்திற்கு உங்களைக் கொண்டுச்சென்று நிறுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். வியாபாரத்தில் சிறு சிறு தடைகள் வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து லாபம் காண்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இருக்கும். உறவுகளுக்கும் உங்களுக்கும் இணக்கமான நிலை ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசியல் வாதிகளுக்கு பட்டம் பதவி செல்வாக்கு அந்தஸ்து ஏற்படும். திருமண வயதினருக்கு மாதத்தின் பிற்பகுதியில் தகுதியான வரன்வரும். வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் ஆதாயம் கூடும். மூத்த குடிமக்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 6.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் விலகும்.

துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய காரகனான செவ்வாய் ஆக. 1 வரை அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எடுக்கின்ற வேலைகள் இழுபறியாகும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். உங்களுக்குள் இருந்த தைரியம், வேகம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.  அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையிலும் மனநிலையிலும் ஏதேனும் சங்கடங்கள் இருந்து கொண்டிருக்கும். குடும்பத்திலும் நிம்மதியான நிலை இல்லாமல் போகும் என்றாலும், ஞான மோட்சக்காரகன் கேது லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வந்து கொண்டிருக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எப்போதோ உங்களால் பலன் அடைந்தவர்கள் இந்த நேரத்தில் ஓடோடிவந்து உதவி புரிவர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். குடும்பத்திற்குள் இருந்த சங்கடங்கள் விலகும். ஆக. 9 முதல் குரு நேர் கதியில் சஞ்சரிப்பதால் அவருடைய பார்வைகளால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலை மாறும். செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவைப்படும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 7.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 24, 27. ஆக. 6, 9, 15.பரிகாரம்: ராஜ ராஜேஸ்வரியை வழிபட நன்மைகள் நடக்கும்.சுவாதிஉயர்ந்த லட்சியத்தோடு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். யோகக்காரகன் ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். திருமண முயற்சி கை கூடவில்லையே என்று வருத்தம் மேலோங்கும். பூர்வீக சொத்திலும் பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கும். உறவுகளுடன் இணக்கமற்ற நிலை இருக்கும். உங்கள் லாபாதிபதி சூரியன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேல் அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தகுதியின் அடிப்படையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அரசு அனுமதிக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு தகுதியான வேலைக் கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலர் வசிக்கும் இடத்தை மாற்ற வேண்டிய நிலை உருவாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். ருண ரோக சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரித்து யோகப் பலன்களை வழங்கி வந்த சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் வேண்டும். முடிந்தவரை உடன் இருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நன்மையளிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது ஏதேனும் சங்கடங்கள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனமாக இருந்து கொள்வதும் உடனடியாக மருத்துவரை சந்திப்பதும்  நன்மையை உண்டாக்கும். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். இழுபறியாகும் என்பதால் அனைத்திலும் நிதானம் காப்பது நன்மையாகும். உங்கள் தன குடும்பாதிபதியும் சப்தமாதிபதியுமான செவ்வாய் மாதத்தின் முற்பகுதியில் மறைவு பெறுவதால் முடிந்தவரை குடும்பத்தினரையும் வாழ்க்கைத் துணையையும் அனுசரித்துச்செல்வது நன்மையாகும். வியாபாரிகள் புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும். விவசாயிகளுக்கு இந்த மாதம் நெருக்கடியான மாதமாக இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி நன்மைதரும்.சந்திராஷ்டமம்: ஆக. 7, 8.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 24, 31. ஆக. 4, 6, 13, 15.பரிகாரம்: தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்பிறரை வழிநடத்தும் அளவிற்கு திறமை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். தன புத்திர காரகன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் வேலையில் ஏற்பட்ட நெருக்கடிகள், பிரச்னைகள் விலகும். உடன் பணிபுரிவோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். மேல் அதிகாரியின் உதவியால் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும். ஆத்ம காரகன் சூரியன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் எடுத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண முடியும். வருமானத்திற்குரிய வழிகள் தெரியும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல் வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். ராசிநாதன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். ஆடை ஆபரணம் வாகனம் என்ற கனவு நனவாகும். கையில் பணம் புரளும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை இருக்கும். குழந்தைகள் நலனில் அக்கறை உண்டாகும். ஆக. 1 முதல் உங்கள் பாக்யாதிபதி புதன் கேந்திர பலம் பெறுவதால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கேட்ட இடத்திலிருந்து பணம் வரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். பெண்களுக்கு குடும்பத்தில் மரியாதை கூடும். விவசாயிகளுக்கு செலவு அதிகரிக்கும். மனம் குழப்பமடையும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஆக. 8.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 12, 15.பரிகாரம்: சுப்ரமணியரை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்உயர்ந்த இடத்தை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவரும் குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால், இதுவரை உங்களுக்கிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். சுலபமாக நடந்து வந்த வேலைகளும் இழுபறியாகும். கைக்கு வந்தது வாய்க்கு வராமல் போனதுபோல் உங்களுக்கு வரும் வாய்ப்புகள் தட்டிக்கொண்டே போகும். நீங்கள் நினைப்பது இந்த நேரத்தில் நடைபெறாமல் போகும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் ஆபத்து அவசரம் என்று போகும்போது கையை விரித்து விடுவார்கள். குடும்பத்திலும் எதிர்பாராத சங்கடங்கள் நெருக்கடிகள் என்பது இருக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராசிநாதன் செவ்வாய் தன்னுடைய ஏழாம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் கூடும். எந்த ஒன்றிலும் நிதானமின்றி செயல்பட்டு அதனால் சங்கடத்திற்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள்ளும் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும். ஆக. 2 முதல் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைவதால் எடுக்கும் வேலைகளில் நிதானமும் கவனமும் தேவை. பிறரை நம்பி எந்தவொரு வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சிகளைக் கூட ஒத்தி வைப்பது நன்மையாகும். மனதுக்குள் இனம் புரியாத பயம் இருக்கும் என்பதால் குழப்பமான நிலைத் தொடர்ந்து கொண்டிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியின் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிவரும். செய்துவரும் தொழிலும் எதிர்பார்த்த அளவிற்கு கை கொடுக்காமல் போகும். விவசாயிகளுக்கு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 9.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 21, 27, 30. ஆக. 3, 12.பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும். நன்மைகள் நடக்கும்.அனுஷம்நமக்கு நடப்பதெல்லாம் நாம் செய்த பூர்வ புண்ணிய பலன்களின் விளைவே என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும்.  குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். மனதில் தெளிவு உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உங்கள் லாபாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதன் ஜூலை 31 வரை அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதாரநிலை உயரும். புதிய இடம் வீடு வாங்குவதற்காக எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். உறவினர்கள் ஆதரவு அதிகரிக்கும்.  பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்களாக மாறுவீர்கள். அதனால் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். சுக ஸ்தானத்தில் யோக, போக காரகனான ராகு சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலம் அதிகரிக்கும். சபலம் ஏற்படும். களத்திரக்காரகன் சுக்கிரன் பத்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் கையிருப்பும் கரைய ஆரம்பிக்கும். சம்பாதித்து சேர்த்த பணத்தை தங்களின் சந்தோஷத்திற்காக சிலர் செலவழிப்பீர்கள். வீண் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் முடிந்தவரை அனைத்திலும் நிதானமாகவும் கவனமாகவும் செயல்படுவது நன்மையளிக்கும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 9, 10.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 17.பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மை உண்டாகும்.கேட்டைவெற்றியின் சூட்சுமங்களை அறிந்த உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜூலை 31 வரை புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். வியாபாரம் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். மாமனின் ஆதரவு கூடும். ஆக் 2 முதல் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடிகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். உங்கள் ஜீவனாதிபதி சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இனம் புரியாத குழப்பம், பயம் என்பதெல்லாம் இருக்கும். அதே நேரத்தில் பெரியோரின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். எல்லாவற்றையும் சரிசெய்து கொள்ளக்கூடிய நிலை உங்களுக்கு ஏற்படும். ஆக. 9 முதல் குரு அஸ்தமனத்தில் இருந்து  நேர்கதியில் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு உயரும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். குழந்தைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். விவசாயிகளுக்கு நெருக்கடி இருக்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆலோணனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 10, 11.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடங்கள் விலகும். வாழ்க்கை வளமாகும்.

தனுசு; மூலம்எதிர்காலம் பற்றிய சிந்தனை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஞானமோட்சக்காரகன் கேது பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தெய்வ அருளும் பெரியோரின் ஆதரவும் கிடைக்கும். குலதெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக குலதெய்வ ஆலயத்திற்கு குடும்பத்தினருடன் சென்று வருவீர்கள். மனதில் நிம்மதியும் தெளிவும் ஏற்படும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசுவழி முயற்சிகளில் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையான செயல்பாடுகளை மேற்கொள்வது நன்மையாகும். தவறானவர்களின் சிபாரிசுகளையும், தவறான வழிமுறைகளையும் இந்த நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம் அதனால் சங்கடங்களை அடைய வேண்டியதாக இருக்கும். வேலை பளுவின் காரணமாக சிலருக்கு உடல்நிலையில் சிறு சங்கடங்கள் வந்து போகும் என்றாலும், அவையெல்லாம் மருத்துவத்தால் சீராகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். யோகக்காரகன் ராகு சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் ஆதாயம் தரும். முயற்சிக்கேற்ற, முதலீட்டிற்கேற்ற லாபம் வரும். பெரிய நிறுவனங்கள் நடத்தி வருபவர்களுக்கு பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். சகோதரர்களுடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். விவசாயிகளுக்கு மாதத்தின் முற்பகுதி யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 11.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 25, 30. ஆக. 3, 7, 12, 16.பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட குறைகள் விலகும். நன்மைகள் நடக்கும்.பூராடம்மனம் சொல்வதின்படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் ஆக. 1 வரை பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம்வரும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். பொன் பொருள் ஆடை ஆபரணம் என்ற கனவு நனவாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் பிரச்னைகள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தைரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆக. 1 வரை சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். எதிர்ப்பு வம்பு வழக்கு என்றிருந்த நிலையெல்லாம் மாறும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்திடக்கூடிய அளவிற்கு செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்னச்சின்ன பிரச்னைகள் தலைக் காட்டினாலும் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். சிலர் குலதெய்வ  வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமான நிலையும் இருக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலைப்பார்க்கும் இடத்திலும் வீட்டிலும் மதிப்பும் மரியாதையும் ஏற்படும். வயதானவர்களுக்கு மனக்குறை விலகும். உடல்நிலை சீராகும். விவசாயிகளுக்கு ஆதாயம் கூடும். மாணவர்களுக்கு படிப்பிலிருந்த தடை விலகும்.சந்திராஷ்டமம்: ஆக. 12.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 24, 30. ஆக. 3, 6, 15.பரிகாரம்: சமயபுரம் மாரியம்மனை வழிபட சங்கடங்கள் விலகும்.உத்திராடம் 1 ம் பாதம்வாழ்வில் முன்னேற்றத்தை நோக்கி செல்லும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் பாக்யாதிபதியான ஆத்ம காரகன் சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தள்ளிப்போகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரிகள் கணக்கு வழக்குகள் காரணமாக அரசுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை உருவாகும் என்றாலும், ஆக. 1 வரை செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்ததை சாதிப்பீர்கள். எந்தவிதமான எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அதை உங்களால் சரி செய்ய முடியும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு வெற்றியாகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கையில் பணம் புரளும். ஆக. 1 முதல் உங்கள் சப்தமாதிபதி புதன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை உங்களுக்கு உண்டாக்குவார். தடைபட்ட வருமானம் வரும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும் புதிய தொழில் தொடங்கவும், இடம் வீடு வாங்கவும் கடனாக கேட்டிருந்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நிம்மதியான நிலை உருவாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். ஆக. 9 முதல் குரு வக்கிர நிவர்த்தி அடைவதால் வீண் அலைச்சலும் விரய செலவுகளும் குறையும். மனதில் நிம்மதி இருக்கும். பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். விவசாயம் ஆதாயம் தரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைக் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஆக. 13.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 21, 28, 30. ஆக. 1, 3, 10, 12.பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வெற்றி உண்டாகும். எடுத்த வேலைகள் நடந்தேறும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்பகைவருக்கும் அருளக்கூடிய உள்ளம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் முன்னேற்றமான மாதமாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆத்ம காரகன் சூரியனால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். நினைத்த காரியங்கள் நடந்தேறும். உங்களிடம் இருந்த சோர்வு நீங்கி சுறு சுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு வேலைபளு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலை விரிவு செய்ய திட்டமிடுவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும். பண விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அறிமுகம் இல்லாதவர்களை நம்பி இந்த நேரத்தில் எந்தவிதமான முயற்சிகளிலும் ஈடுபட வேண்டாம்.  அஷ்டம ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் அவ்வப்போது உடல்நிலையில் ஏதேனும் சங்கடங்கள் தோன்றும் இல்லையெனில் பொருளாதார ரீதியாக சிலருக்கு ஏமாற்றங்கள் உண்டாகும். கொடுத்து வைத்த பணம் கைக்கு வராமல் மனதில் சங்கடம் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகள் நெருக்கடிகள் பிரச்சனைகள் என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் நிதானமும் கவனமும் தேவை. பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை கேட்டு செயல்படுவது நன்மையளிக்கும். புதிவர்களிடம் குடும்ப விவகாரங்கள் பற்றி விவாதிக்கவும் பேசவும் வேண்டாம். அது உங்களுக்கே எதிராக மாறும். சிலர் அவப்பெயரையும் சந்திக்க வேண்டிவரும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம்: ஜூலை 17. ஆக. 13.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 19, 26, 28. ஆக. 1, 8, 10, 17.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும். நன்மைகள் நடக்கும்.திருவோணம்எதிர்காலத்தை நினைத்து அதற்கேற்ப செயல்பட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும். நல்ல முறையில் நடந்து வந்த வேலைகளிலும் தடை தாமதம் என்ற நிலை உருவாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவானும் ஆக. 9 வரை அஸ்தமனம் ஆகியிருப்பதால் நடுக்காட்டில் விட்டதுபோல் உங்கள் நிலைமாறும். செயல்களில் கவனம் குறையும். திட்டமிடாமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாக வேண்டிவரும். வியாபாரம் தொழிலில் நெருக்கடிகளும் பிரச்சனைகளும் உண்டாகும். போட்டி அதிகரிக்கும். வரவு செலவில் இழுபறியான நிலை இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும் என்றாலும் ஆக. 9 முதல் குரு நேர்கதியில் சஞ்சரிப்பதால் நிலைமை சீராகும். வியாபாரம் தொழில் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பிக்கும். வரவேண்டிய பணம்வரும். சேமிப்பு உயரும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடும். பிள்ளைகள் பற்றிய கவலை அதிகரிக்கும். உடல் நிலையில் அவ்வப்போது சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும் என்றாலும், மாதத்தின் பிற்பகுதியில் அனைத்திலிருந்தும் விடுபட முடியும். குடும்பத்தினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். விவசாயிகளுக்கு மாதத்தின் பிற்பகுதியில் ஆதாய நிலை இருக்கும். கையில் பணம் புழங்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையளிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 17, 18. ஆக. 14.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20, 26, 29. ஆக. 2, 8, 11, 17.பரிகாரம்: பண்ணாரி மாரியம்மனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம்தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். மாதத்தின் முற்பகுதியில் தைரிய வீரிய காரகன் செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். முயற்சிக்கேற்ற வருமானம் இல்லை என்ற நிலை இருக்கும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். பிள்ளைகள் பற்றிய கவலை ஏற்படும். மனம் குழப்பம் அடையும் என்றாலும், ஆக. 2 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலையை முடிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். உடன் பணி புரிபவர்களுடன் இணக்கமான நிலை உண்டாகும். உறவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடைகள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். உடல் நிலையில் தோன்றிய சங்கடங்கள் விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். ஜூலை 31 வரை புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். நிதிநிலை உயரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக புதிய முதலீடு மேற்கொள்வீர்கள். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். பொன் பொருள் சேரும். உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். சிலர் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில்  இருக்கும் சிலருக்கு திடீர் இடமாற்றமும் அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படும். விவசாயிகளுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கையில் பணம் புரளும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 18, 19. ஆக. 15.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 26, 27. ஆக. 8, 9, 17.பரிகாரம்: திருத்தணி முருகனை வழிபட தடைபட்ட வேலைகள் நடந்தேறும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்உழைப்பையும் முயற்சியையும் மூலதனமாகக் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். மாதத்தின் தொடக்கத்தில் ரத்தக் காரகன் செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வேலை பளு கூடும். உழைப்பிற்கேற்ற ஆதாயம் இல்லை என்ற வருத்தம் மேலோங்கும். திடீரென சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்படும். உடன் இருப்பவர்களுடன் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். சிலருக்கு உடல்நிலையில் சிறு பாதிப்பு தோன்றி விலகும். ஆக. 2 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் செவ்வாயால் மனம் குழப்பம் அடையும். தேவையற்ற சிந்தனைகள் மேலோங்கும். குடும்பத்திலும் ஒற்றுமை என்பது இல்லாமல் போகும் என்றாலும், ஆக. 1 முதல் புதன் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேவைக்கேற்ற பணம் வரும். நெருக்கடியை ஏற்படுத்தி வந்த கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்திலும் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய பொருட்கள் சேரும். வியாபாரிகளுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். சப்தம ஸ்தானத்தில் ஆக. 1 வரை சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது நன்மையை உண்டாக்கும். குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விவசாயிகளுக்கு விளைச்சலில் கூடுதல் கவனம் தேவை. மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி நன்மையாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 19. ஆக. 15.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 18, 26, 27. ஆக. 8, 9, 17.பரிகாரம்: வீரராகவ பெருமாளை வழிபட உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.சதயம்லட்சியத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஜென்ம ராசிக்குள் ராகு சஞ்சரிப்பதால் பெரிய அளவில் திட்டமிடுவீர்கள் என்றாலும், உங்கள் உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். நண்பர்களாக நினைத்துப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர். குடும்பத்திலும் நிம்மதி என்பது இல்லாமல் போகும். கணவன் மனைவிக்குள் சின்னச்சின்ன மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். இந்த நேரத்தில் ராசிநாதன் சனி வக்கிரம் அடைந்திருப்பதால் ஏழரைச்சனியின் பாதிப்பு விலகும். ஆரோக்யம் மேம்படும். திடீர் வாய்ப்புகள் தேடிவரும். மனதில் இருந்த பயம் போகும். சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் எதிர்ப்பு நோய் நொடி பிரச்னை வம்பு வழக்கு என்பதெல்லாம் இல்லாமல் இருக்கும். ஆத்ம காரகன் சூரியன் சஞ்சாரம் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடித்திடக்கூடிய நிலை உண்டாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் உங்களை விட்டு விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் முடிந்தவரை எதிர்ப்பாலினர் விஷயத்தில் ஓரடி விலகி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். கௌரவத்தை ஏற்படுத்தும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனை இல்லாமல் எந்த வேலயிலும் ஈடுபட வேண்டாம். நண்பர்களிடமும் கொஞ்சம் விலகியே இருப்பது நன்மையாகும். வயதானவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். பணியாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு உழைப்பு அதிகரிக்கும். மாணவர்கள் தவறான நட்புகளை விட்டு விலகுவது நன்மையாகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 19, 20. ஆக. 16.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 22, 26, 31. ஆக. 4, 8, 13, 17.பரிகாரம்: கோமதி அம்மனை வழிபட சங்கடங்கள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்நாளை என்ன நடக்கும் என்பதை இன்றே உணர்ந்திடக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதமாகும். ஞானக்காரகன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் செயல்களில் தடுமாற்றம் இருக்கும். உங்கள் புத்திசாலித்தனம் தடைபடும். யோசிக்காமல் சில வேலைகளை எடுத்து அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். களத்திரக்காரகன் சுக்கிரன் ஆக. 1 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் சஞ்சலமும் சபலமும் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதுடன் இந்த நேரத்தில் உங்கள் செல்வாக்கு அந்தஸ்தில் குறைவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் முடிந்தவரை எதிர்பாலினரை விட்டு ஒதுங்கி இருப்பது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும். புதியதாக அறிமுகம் ஆகும் யார்மீதும் இந்த நேரத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் நிலையினையும் வேலைகளையும் குடும்பத்தினரிடம் கூறி ஆலோசனைபெற்று அதன்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் சங்கடங்கள் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் போகும். மாதம் முழுவதும் ஆத்ம காரகன் சூரியனும், மாதத்தின் பிற்பகுதியில் புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால்  நினைத்ததை உங்களால் நடத்திக் கொள்ள முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். பெண்கள் குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பது நன்மையாகும். விவசாயிகள் காலநிலை அறிந்து செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதியில் படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 20, 21. ஆக. 17.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 26, 30. ஆக. 3, 8,12.பரிகாரம்: முன்னோரை வழிபட நன்மைகள் நடக்கும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்பிறர் நலனில் அக்கறை கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடிகள், குடும்பத்திலும், தொழிலிலும் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட வேலைகள் முடிவிற்குவரும். ஆரோக்கியம் சீராகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்புகள் வைத்தியத்திற்கு கட்டுப்படும். உங்கள் ராசி நாதன் குரு ஆக. 9 வரை அஸ்தமனம் அடைந்திருப்பதால் எடுக்கும் வேலைகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொழில் செய்து வருபவர்கள் சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்வது நன்மையாகும். ஆக. 9 முதல் புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம்வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நினைத்ததை சாதித்து முடித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடும். சிலருக்கு திடீர் இடமாற்றம், குடும்பத்தை விட்டு விலகிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் வேலையில் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி முன்னேற்றமாக இருக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 21.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 30. ஆக. 3, 12.பரிகாரம்: அபிராமியை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.உத்திரட்டாதிஎடுக்கும் வேலையில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, இந்த மாதம் நன்மையான மாதமாக இருக்கும். உங்கள் தன குடும்பாதிபதி செவ்வாய் ஆக. 1 வரை சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். ஆரோக்கியம் மேம்படும். சொந்த வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்த சனி வக்கிரம் அடைந்திருப்பதால் ஏழரைச்சனியினால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும் என்றாலும், விரய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் செலவு அதிகரித்துக் கொண்டிருக்கும். உங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தாராளமாக செலவுகள் செய்வீர்கள். அதன்வழியே உங்கள் செல்வாக்கும் உயரும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சாரம் எதிர்மறையாக இருப்பதால் உடல் நிலையில் கவனம் செலுத்தி வருவதுடன் எதிர்பாலினர் விஷயத்திலும் கவனமாக இருப்பது நன்மையளிக்கும். ஆக. 1 முதல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதன் உங்கள் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கையாக இருப்பது நன்மையாகும். தவறானவர்களை ஒதுக்கி வைப்பதும் நன்மை அளிக்கும். அடுத்தவர் விமர்சனத்திற்கு ஆளாகாத வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருப்பது அவசியம். பிள்ளைகள் நலனில் அக்கறை ஏற்படும். பெண்களுக்கு புதிய நட்புகளால் சங்கடமும் வெளிவட்டாரத்தில் அவப்பெயரும் குடும்பத்திற்குள் குழப்பமும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினர. அல்லாதவரிடம் ஓரடி விலகி இருப்பது நன்மையாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது அவசியம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் விலகும்.சந்திராஷ்டமம்: ஜூலை 22.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 21, 26, 30. ஆக. 3, 8, 12, 17.பரிகாரம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நெருக்கடிகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.ரேவதிதிட்டம் தீட்டி அதன்படி வெற்றி அடையும் உங்களுக்கு, ஆடி மாதம் யோகமான மாதமாக இருக்கும். ஜூலை 31 வரை வித்யா காரகன் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். எந்த வேலையை எப்படிச்செய்து முடிப்பது என்ற அறிவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு தேடிவரும். உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். ஞான மோட்சக்காரகன் கேது ஆறாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் ஆற்றல் வெளிப்படும். எந்த ஒன்றையும் எதிர்கொண்டு வெற்றியடையும் நிலை ஏற்படும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். போட்டி பிரச்சனை வம்பு வழக்கு என்பதெல்லாம் முடிவிற்கு வரும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும் என்றாலும், ஆத்ம காரகன் சூரியன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் சின்னச் சின்ன சங்கடங்கள் வந்து போகும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். சுய தொழில் செய்து வருபவர்கள் வியாபார வளர்ச்சிக்காக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று வரக்கூடிய வாய்ப்பும் வரும். வெளிநாட்டில் வசித்து வருபவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலருக்கு நீண்டநாள் கனவு நனவாகும். நிரந்தர குடியுரிமை கிடைக்கும். பெண்களுக்கு தைரியம் கூடும். உடல்நிலை சீராகும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துக்கொள்ள முடியும். விவசாயிகளுக்கு இந்த மாதம் யோகமானதாக இருக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆலோசனைக் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஜூலை 23.அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21, 30. ஆக. 3, 5, 12, 14.பரிகாரம்: ஆதி திருவரங்கனை வழிபட எடுத்த வேலைகள் வெற்றியாகும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us