sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 29, 2026 ,தை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

/

13

முந்தய பதிப்புகள்

இன்றுநேற்று
இன்றுநேற்று

To type in English

 (or) 

Press CTRL+G 

To type in English

மொத்த செய்திகள்: 1141

அரசியலமைப்பு உறுதிமொழிக்கு எதிரான செயல் | Nirmala Sitharaman | Union Finance Minister | Rupee symbo

வீடியோ: பொது

13-Mar-2025

மேஷம்; அசுவினி: நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பங்குனி மாதம் நன்மையான மாதம். பொருளாதார நிலை உயரும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை நடத்தி முடிக்ககூடிய அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். காவல், பேரிடர் மீட்புத்துறையில் பணிபுரிவோரின் செல்வாக்கு உயரும். நட்சத்திர நாதன் கேது, மாதம் முழுவதும் ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல், மனநிலை சீராகும். வரவு அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் செலவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத மாற்றம் ஏற்படும். அரசுவழி முயற்சி தள்ளிப்போகும். ஒருசிலர் தொழில் காரணமாக வெளியூருக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்படும். சுக்கிர பகவானின் வக்கிரத்தினால் குடும்பத்தில் சல சலப்பு தோன்றும். அவசரத் தேவைகளுக்காக நகைகளை விற்று அடகு வைத்தும் நிலைமையை சமாளிக்க வேண்டியதாக இருக்கும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக இருப்பதால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 19, 20.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 18, 25, 27. ஏப். 7, 9.பரிகாரம்: விநாயகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.பரணி; பங்குனி மாதம் கவனமுடன் செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் ஏப். 7 வரை சாதகமாக சஞ்சரிக்கும் நிலையில் இதுவரை தடைபட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செல்வாக்கு உயரும். துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும் மாதம். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உங்கள் நட்சத்திரநாதன் சுக்கிரன் வக்கிரமாக சஞ்சரிப்பதுடன், சூரியனும் ராகுவும் அங்கே இணைந்திருப்பதால் ஒரு பக்கம் யோகம் என்றால் மறுபக்கம் நெருக்கடி என்ற நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இடைவெளி உண்டாகும். அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். ஆசையுடன் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தை விற்க வேண்டிய நிலை ஏற்படும். வண்டி வாகனம் வகையில் செலவு அதிகரிக்கும் ஆறாம் இட கேதுவும், லாப ஸ்தான சனியும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பர். நினைத்த வேலைகளை நடத்திக்கொள்ள முடியும். முடங்கிக் கிடந்த தொழிலை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வீர்கள். பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். உடல் நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். வழக்குகள் சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு, பதவி வரும். நேற்றைய கனவு நனவாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்று செயல்படுவீர்.சந்திராஷ்டமம்: மார்ச் 20, 21.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.கார்த்திகை 1 ம் பாதம்; பிறக்கும் பங்குனி மாதம் நிதானமான மாதம். உங்கள் நட்சத்திரநாதன் 12 ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த சுபிட்ச நிலையில் மாறும். பண விவகாரத்தில் சங்கடம் உண்டாகும். விரயச்செலவு அதிகரிக்கும். எதிர்பார்ப்புஇழுபறியாகும். அரசுவழி முயற்சி தள்ளிப் போகும். வழக்குகளை சந்தித்தாலும் குரு பகவான் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். செல்வாக்கை உயர்த்துவார். அனைத்திலிருந்தும் உங்களைப் பாதுகாப்பார். நோய் நொடிகள் ஏற்பட்டாலும் மருந்து மாத்திரைகளால் குணமாகும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலைக்காக முயற்சித்து வருவோருக்கு எதிர்பார்த்த தகவல் வரும். மாதத்தின் முற்பகுதியில் ராசிநாதன் சஞ்சரித்தினால் எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்க கூடிய சக்தி உண்டாகும். உங்களுக்கு சனி பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நினைத்ததை உங்களால் நடத்திக்கொள்ள முடியும். வரவு செலவில் கூடுதல் கவனம் தேவை. பொன் பொருட்களில் எச்சரிக்கை அவசியம். வெளியூர் செல்லும்போது வீட்டிற்கு சரியான பாதுகாப்பு இல்லாமல் செல்ல வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: மார்ச் 21.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 19, 27, 28. ஏப். 1, 9, 10.பரிகாரம்: சொக்கநாதரை வழிபட சங்கடம் நீங்கும்.

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செயல்திறனும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் நட்சத்திர நாதனான சூரியன் மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வழி முயற்சிகள் வெற்றியாகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். புதிய முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணியில் முன்னேற்றம் ஏற்படும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உயர்ந்த இடத்தில் இருப்பவர்களின் அறிமுகமும் ஆதரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். அன்னியரால் லாபம் கூடும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். இதுவரை இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும் திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சந்திராஷ்டமம்: மார்ச் 21, 22.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.பரிகாரம்:  சூரியனை வழிபட வெற்றி உண்டாகும்.ரோகிணி:  எதிலும் அமைதியைக் கையாண்டு வெற்றி அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். உயர்கல்விக்காக திட்டமிட்டு படித்து வரும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் உண்டான நெருக்கடி விலகும். நினைத்த இடத்தை வாங்கும் நிலை உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். அரசு வழி வேலை சாதகமாகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். உறவுகள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் வேலையில் இருப்பவர்கள் நியாயம், நேர்மை என்ற வரையறைக்குள் இருப்பது நல்லது. தேவையற்ற சங்கடம் உண்டாகும். பணியில் தவறு செய்பவர்களுக்கு இக்காலம் சோதனைகள் உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 22, 23.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 20, 24, 29. ஏப். 2, 6, 11.பரிகாரம்: கயிலாச நாதரை வழிபட நன்மை அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்: சிந்தனையில் தெளிவும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நினைத்ததை நடத்திக் கொள்ளும் மாதம். உங்கள் நட்சத்திரநாதன் ஏப். 7 வரை இரண்டாம் இடத்தில் கவனம் தேவை. உங்கள் வேலையில் எதிர்ப்பு, பிரச்னை என உருவாகும். உடல் நிலையிலும் ஒருநேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும். மாதத்தின் பிற்பகுதியில் சகாய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நிலைமை சீராகும்.  யோகக் காரகன் ராகு, ஆத்மக் காரகன் சூரியனால் எடுத்த வேலைகளை முடிக்கக் கூடிய நிலை உண்டாகும். தடைபட்ட வேலை நடக்கும். உழைப்பிற்கேற்ற வருமானம் வரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னை முடியும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள்  உயர்த்துவார். செல்வாக்கை அதிகரிப்பார். எத்தகைய பிரச்னை வந்தாலும் அதிலிருந்து விடுபடக்கூடிய சூழலை உருவாக்குவார். தொழிலில் இருந்த தடை விலகி முன்னேற்றம் அடையும். புதிய முயற்சி சாதகமாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை இருக்கும். கூட்டுத்தொழில் லாபம் அடையும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவர்களுக்கு உயர் கல்விக்குரிய வாய்ப்பு இப்போதே அமையும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் போராட்டமான நிலை மாறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைத்த வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கேட்ட இடத்திலிருந்து பணம் கிடைக்கும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும்.சந்திராஷ்டமம்: மார்ச் 23, 24.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 27. ஏப். 6, 9.பரிகாரம்: முருகனை வழிபட நினைத்தது நிறைவேறும்.

மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம் அறிவின் துணை கொண்டு வாழ்க்கையை நடத்தி வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமான மாதம். ஏப். 7 வரை செவ்வாய் ராசிக்குள்ளும் அதன்பிறகு இரண்டாம் இடத்திலும் சஞ்சரிப்பதால் செயல்கள் அனைத்திலும் கவனம் தேவை. சில வேலைகளில் சங்கடங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உடல்நிலை பாதிக்கலாம். புதன் வக்கிரமாக இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது. இடம் விற்பது வாங்குவது போன்ற விவகாரங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. ஒரு சிலருக்கு தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். சனியும், சூரியனும் உங்களை உயர்த்துவார்கள். அரசு வழி முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த மாற்றம், உயர்வு உண்டாகும். எல்லாவற்றையும் சமாளித்திடக்கூடிய நிலையினை 6, 8 ம் இடங்களுக்கு கிடைத்திடக்கூடிய குரு பகவானின் பார்வை உங்களுக்கு வழங்கும். வழக்குகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களின் நிலை மாறும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடக்கும் சூழ்நிலை சாதகமாகும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். மாணவர்கள் தேர்விலும் போட்டித் தேர்வுகளிலும் கூடுதலாக கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. குடும்பத்தில் சின்னச் சின்ன சங்கடம் வந்து செல்லும். தம்பதியர்கள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது இக்காலத்தில் மிக அவசியம். வேலைத் தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு பதவி கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 24.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.பரிகாரம்: பெருமாளை வழிபட நன்மை நடக்கும்.திருவாதிரை: எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு என சஞ்சரிப்பதால் வியாபாரம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் நினைத்த வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். சூரியனால் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் அடையும்.  ராகு பகவான் வருவாயை அதிகரிப்பார். உங்கள் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் ஒத்துழைப்பார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் வார்த்தைகளில் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். இடம் அறிந்து யோசித்து செயல்படுவது நல்லது. எதிலும் அவசர கதி என்பது இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்மறையான பலன்களை உண்டாக்கும். நிதானமாக செயல்படுவதும், பணியில் கவனமாக இருப்பதும், புதிய முயற்சிகளில் நன்மையை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு தொழில் ரீதியாக அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். எல்லாவற்றையும் சமாளிக்ககூடிய சக்தியும் உங்களுக்கு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டிய மாதம் இது. அலட்சியத்திற்கு இடம் கொடுக்காமல் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதும் நற்பலனை கொடுக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 24, 25.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 22, 23, 31. ஏப். 4, 5, 13.பரிகாரம்: விஷ்ணு துர்கையை வழிபட முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்;  நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் நான்கு, ஆறு, எட்டாம் இடங்களுக்கு உண்டாவதால் திட்டமிட்டு செயல்படும் வேலைகளில் லாபம் உண்டாகும். உழைப்பு அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலக ஆரம்பிக்கும். எதிர்ப்பு, பிரச்னை என்றிருந்த நிலை மாறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும். வியாபாரம் லாபம் அடையும். பெரிய மனிதர்களுடைய ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தள்ளிப் போன வழக்கு முடிவிற்கு வரும். தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். சனி பகவானால் எடுத்த வேலைகள் முடிவிற்கு வரும். சுக்கிரன் வக்கிரமாகி இருப்பதால் தம்பதிக்குள் அனுசரித்துச் செல்வது  அவசியம். புதிய முயற்சிகளிலும் கூடுதல் கவனம் தேவை. மாணவர்கள் மாற்று சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாம். சிறு வியாபாரிகள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும். ஷேர் மார்க்கெட்டில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 25, 26.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5, 12.பரிகாரம்: வைத்தியநாத சுவாமியை வழிபட வளம் அதிகரிக்கும்.

கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்; பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடிகளில் இருந்து விடுதலை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடை கொஞ்சம் கொஞ்சமாக விலகும். உங்கள் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சகோதரர்கள், பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். குழந்தைக்காக காத்திருந்தவருக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரன் வரும். நண்பருடன் ஏற்பட்ட பிரச்னை சுமூக முடிவிற்கு வரும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகி இணக்கம் உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செயல்படுவீர். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகும். வயதானவர்கள் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிறு சிறு சங்கடம் தோன்றி உடலில் பிரச்னைகளை உண்டாக்கும். செயல்களில் தாமதம் உண்டாகும். மருத்துவச் செலவு கூடும். உணவு உறக்கம் போன்றவற்றில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.சந்திராஷ்டமம்: மார்ச் 26.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 21, 29, 30. ஏப். 2, 3, 11, 12.பரிகாரம்: மாரியம்மனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.பூசம் : தர்ம படி வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து நெருக்கடிகளை உண்டாக்கி வந்த சூரியன், பாக்கிய ஸ்தானத்தில் மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலக ஆரம்பிக்கும். சனிபகவான் தொடர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை. தொழில் போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக சதி புரிவர். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும். குரு பகவான் பார்வை உங்களுடைய நிலையை உயர்த்தும். நினைத்த வேலைகளை நடத்திக்கொள்ள முடியும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் கேதுவால் திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் செல்வாக்கு உயரும்.வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் முடிவு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகள் பற்றிய கவலை விலகும். மாணவர்களின் உயர்கல்வி நனவாகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறக்கூடிய நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன்வரும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் உண்டு. மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். கேட்ட கடன் கைக்கு வரும். ஷேர் மார்க்கெட், சொத்து வாங்குவது விற்பது போன்ற வேலைகளில் லாபம் கிடைக்கும். களத்திரக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் வக்கிரமடைந்திருப்பதால் தம்பதிக்குள் விட்டுக்கொடுத்து செயல்படுவது நல்லது. உடல்நிலையில் அவ்வப்போது சங்கடம் தோன்ற வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.சந்திராஷ்டமம்: மார்ச் 26, 27.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 29. ஏப். 2, 8, 11.பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் விலகும்ஆயில்யம்: உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். புதன் மார்ச் 30 முதல் வக்கிர நிவர்த்தியாகி யோகப் பலன்களை வழங்கிட இருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த செல்வங்களை வழங்குவார். நீண்டநாள் கனவு நனவாகும். வாங்க நினைத்த இடத்தை வாங்க முடியும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். அரசு வழி முயற்சி சாதகமாகும். பெரியோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். நிதி நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவரின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு படிப்பில் உயர்வு ஏற்படும். விரும்பிய கல்லுாரி, விரும்பிய படிப்பு என்ற கனவு நனவாகும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய், அஷ்டம ஸ்தானத்தில் சனி என்ற நிலையால் உடல் நிலையில் கவனம் வேண்டும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். அரசு பணியில் இருப்பவர்கள் வீண் பிரச்னைகளுக்கு இடம் அளிக்க வேண்டாம். அதனால் நெருக்கடி உண்டாகும். இட மாற்றத்தை ஒரு சிலர் சந்திக்க நேரும். கவனமாக செயல்படுவது அவசியம். குரு பகவானின் பார்வை, கேதுவின் சஞ்சாரமும் முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச்செல்லும். நெருக்கடி தோன்றினாலும் அவற்றிலிருந்து விடுதலை பெறுவீர்கள். நண்பர்கள், வாழ்க்கைத் துணையால் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறுவதற்குரிய சூழல் அமையும். திருமண வயதினருக்கு வரன் வரும். பிள்ளைகளுடைய நிலையில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு உயரும் மாதம்.  வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். விவசாயிகள் இக்காலத்தில் கவனமாக செயல்படுவது அவசியம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.சந்திராஷ்டமம்: மார்ச் 27, 28.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29, ஏப். 2, 5, 11.பரிகாரம்:  நரசிம்மரை வழிபட நன்மை நடக்கும்.

சிம்மம்: மகம்:  நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். கோச்சார ரீதியாக குடும்ப ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சூரியன், மற்றும் சுக்கிரன் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். குடும்பத்தில்  குழப்பங்கள் தோன்றி மறையும். உடல் நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நட்புகளுக்குள் விரிசல், தம்பதிகளுக்குள் இடையேயான உறவில் நெருக்கடி ஏற்படும். குரு பகவானின் பார்வைகள் 2, 4, 6 ம் இடங்களுக்கு கிடைப்பதால் நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்கள். தாய்வழி உறவுகளின் ஆதரவால் உங்கள் வேலை நடக்கும். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வழக்கு வெற்றியாகும். மாணவர்கள் இக்காலத்தில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. வயதானவர்கள் உடல்நலனில் எப்போதும் கவனமாக இருப்பது அவசியம். விவசாயிகளுக்கு லாபம் கூடும். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 28, 29.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 19, 25. ஏப். 1, 7, 10.பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.பூரம்; எதிலும் முன்னேற்றம் அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் சூரியனும் உங்கள் நட்சத்திர நாதன் சுக்கிரனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வருவதால் எதிர்பார்த்த வேலைகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். அரசு வழியில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குடும்பத்திலும் குழப்பம், நிம்மதியற்ற நிலை ஏற்படும். வீண் பிரச்னை உங்களைத் தேடிவரும், உடன் பணி புரிபவர்களும் விரோத மன நிலைக்கு செல்வார்கள் என்றாலும், ஏப். 7 வரை லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் உங்கள் நிலையை உயர்த்துவார். எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதில் இருந்து உங்களை விடுபட வைப்பார். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர்கள். சனிபகவான் சிறு சிறு சங்கடங்களை உண்டாக்கினாலும் நினைத்த வேலைகளை நடத்திக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். குரு பகவானின் பார்வைகளால் கையில் பணம் புரளும். சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது. உடல் நிலையில் சங்கடம் ஏற்பட்டாலும் அதிலிருந்து தேர்ச்சி அடைவீர்கள். வழக்கு விவகாரம் சாதகமாகும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது. தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், விட்டுக்கொடுத்து செயல்படுவதும் நிம்மதிக்கு வழிவகுக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 29, 30.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 19, 24, 28. ஏப். 1, 6, 10.பரிகாரம்: மாரியம்மனை வழிபட சங்கடம் விலகும்.உத்திரம் 1 ம் பாதம்: நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதம். சூரிய பகவான் அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெறுவதால் எடுத்த வேலையை உடனடியாக முடிக்க முடியாமல் போகும். ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக உழைத்திட வேண்டியதாக இருக்கும். எதிரிகளுடைய தொல்லைகளும் இந்த நேரத்தில் அதிகரிக்கும். உடல் நிலையும் ஒரு நேரத்தில் இருப்பதுபோல் மறு நேரத்தில் இல்லாமல் போகும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். சுக்கிரன் மாத முழுவதும் அஷ்டம ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருப்பதால் தம்பதிகளுக்குள் சிறு சிறு பிரச்னை உண்டாகும். நட்புகளால் எதிர்பாராத சங்கடம் ஏற்படும். நன்றாகப் பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மாதம் முழுவதும் குரு பகவானின் பார்வைகளும், ஏப் 7 வரை செவ்வாயின் சஞ்சாரமும் உங்களுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்பு உருவாகும். தேவைக்கேற்ற வரவு இருக்கும். அரசு பணியாளர்கள் மாதம் முழுவதும் தங்கள் பணியில் கவனமாக இருப்பதுடன் அதிகாரிகளின் உத்தரவின்படி செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் மந்தம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று அதன்படி செயல்படுவது நல்லது. விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் சொந்தமாக வீடு, நிலம் வாங்குவீர்கள்.சந்திராஷ்டமம்: மார்ச் 30.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 28. ஏப். 1, 10.பரிகாரம்: மருதமலை முருகனை வழிபட நினைப்பது நடந்தேறும்.

கன்னி: உத்திரம் 2, 3, 4 ம் பாதம்; திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரி தங்கள் தொழிலை விரிவு செய்வதற்காக வெளியூர் செல்வீர்கள். குரு பகவான் உங்கள் ராசியையும் பார்ப்பதால் இதுவரை ஞான மோட்சக்காரகன் கேதுவால் ஏற்பட்ட சங்கடம், நெருக்கடி விலக ஆரம்பிக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய கல்லூரி, விரும்பிய கல்வி என்ற நிலை உருவாகும். மார்ச் 30 முதல் ராசி நாதன்  சாதகமாக இருப்பதால் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வங்கியில் கேட்ட பணம் கைக்கு வரும். இடம் வாங்குவது விற்பது போன்ற விவகாரங்களில் லாபம் உண்டாகும். ஷேர்மார்க்கெட் ஆதாயம் தரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும்.சந்திராஷ்டமம்: மார்ச் 30, 31.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 23, 28. ஏப். 1, 5, 10.பரிகாரம்: அகோர மூர்த்தியை வழிபட பயம் விலகும்.அஸ்தம்: எதிலும் நினைத்த இலக்கை அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதமாகும். சத்துரு ஜெய ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொழிலில் ஏற்பட்ட போட்டி சரியாகும். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்திக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும். குருவால் நீண்ட நாள் கனவுகள் நனவாகும். விலகிச்சென்ற உறவினர்கள் தேடி வருவார்கள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றி அடைவீர்கள். ராகு, சூரியன், குரு ஆகியோர் உங்கள் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலையை உடனே முடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவீர்கள். சூழ்நிலைகளும் உங்களுக்கு சாதகமாகும். கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு உயரும். ஏப். 7 முதல் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட், விவசாயம் லாபம் தரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். வயதானவர்கள் நிலையில் இருந்த சங்கடங்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய பொறுப்பு கிடைக்கும்.சந்திராஷ்டமம்: மார்ச் 31, ஏப். 1.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 20, 23, 29. ஏப். 2, 5, 11.பரிகாரம் வடிவுடை அம்மனை வழிபட வளம் உண்டாகும்.சித்திரை 1, 2 ம் பாதம்எதிலும். வேகம் விவேகத்துடன் செயல்பட்டு வாழ்வில் வெற்றி கண்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். மாதத்தொடக்கத்தில் செவ்வாய் பகவான் உங்கள் வேலைகளை நீங்கள் நினைத்தபடி நடத்தித் தருவார். பிறரால் முடியாதென கைவிடப்பட்ட வேலைகளையும் முடித்துக் காட்டுவீர்கள். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் அடையும். ஏப். 7 ம் தேதி முதல் செவ்வாய் முதலீடுகளை இரட்டிப்பாக்குவார்.  மார்ச் 30 முதல் புதன் பகவானாலும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வியாபாரத்தை விரிவு செய்வதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். மாதம் முழுவதும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும், பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவும் உங்கள் நிலையை உயர்த்துவார்கள். இதுவரையில் உங்கள் வாழ்க்கையில், தொழிலில், முன்னேற்றத்தில் இருந்த பிரச்னை நெருக்கடி போராட்டம் விலக ஆரம்பிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். களத்திரக்காரகன் சுக்கிரன் வக்கிரமடைந்திருப்பதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். மேற்கல்விக்காக எடுக்கும் முயற்சி வெற்றியாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்கள் பலம் கூடும். வயதானவர்கள் இக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப். 1.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 23, 27. ஏப். 5, 9.பரிகாரம்: கபாலீஸ்வரரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்; சித்திரை 3, 4 ம் பாதம்; துணிச்சலுடன் பிறந்த உங்களுக்கு,  இந்த பங்குனி மாதம் மிக யோகமான மாதம். உங்கள் செவ்வாய் மாதத்தின் தொடக்கத்தில் ஜீவன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் செயலில் கவனமாக செயல்பட வேண்டும். வாய்ப்பு தேடி வந்தாலும் அதில் உள்ள நன்மைத் தீமைகளை ஆராய்வீர்கள். குரு சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் போட்டியாளர்கள் மீது எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மறைமுகத் தொல்லை உண்டாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஒரு சிலர் ஆளாவீர்கள். வண்டி வாகன விஷயங்களில் செலவு ஏற்படும். ராகுவும் சூரியனும் எடுத்த வேலைகளை முடிக்க கூடிய ஆற்றலை தருவார்கள். அதற்கேற்ப சூழ்நிலைகளும் அமையும். பெரியவர்கள் ஆதரவு கிடைக்கும். உடல் மனத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். துணிச்சலாக செயல்படுவீர்கள். குரு பகவானின் பார்வைகளால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப காரியம் நடந்தேறும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி ஆட்சியாக சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. புதனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையை முழுமையாக ஏற்பதும் வேறு சிந்தனைகளுக்கு இக்காலத்தில் இடம் கொடுக்காமல் இருப்பதும் நல்லது. சந்திராஷ்டமம்: ஏப். 1, 2.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 18, 24, 27. ஏப். 6, 9.பரிகாரம்: பண்ணாரி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.சுவாதி; அதிர்ஷ்டமும் யோகமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். சத்துரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு நீங்கள் எடுக்கும் வேலைகளில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணியில் இருப்பவர்களுக்கு உண்டான பிரச்னை முடிவடையும். இதுநாள் வரை உங்களை விமர்சனம் செய்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்கள் லாபாதிபதி சூரியனும் சாதகமாக சஞ்சரிப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். அரசு வழி முயற்சி லாபம் தரும். இதுவரை எதிர்பார்த்தும் கிடைக்காத அனுமதி கிடைக்கும். எதிரிகள் விலகிச் செல்வர். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் முடிவிற்கு வரும். களத்திரக்காரகனால்  தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர் ஆலோசனையை ஏற்பது நன்மை தரும். பூர்வீக சொத்துகளில் சிறு பிரச்னை தோன்றினாலும் அதை சரி செய்வீர்.சந்திராஷ்டமம்: ஏப். 2.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 22, 24. 31. ஏப். 4, 6, 13.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட நெருக்கடி நீங்கும்.விசாகம் 1, 2, 3 ம் பாதம்; நினைத்த வாழ்வை வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் உங்கள் ராசிநாதனுடன் பரிவர்த்தனை அடைவதால் நினைத்த வேலை நடக்கும். எதிர்ப்பு விலகும். மனதில் நம்பிக்கை உண்டாகும். குரு பகவானின் பார்வை 12, 2, 4 ம் இடங்களுக்கு உண்டாவதால் இக்காலத்தில் புதிய வாகனம் வாங்குவது, வீடு வாங்குவது என்ற முயற்சிகள் வெற்றியாகும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். அதற்கேற்ற வகையில் வரவும் இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகி முன்னேற்றம் உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். எத்தனைப் பிரச்னை வந்தாலும் அதை தைரியமாக சமாளிப்பீர். சந்தோஷத்துடன் வாழ்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிகள் இருவரும் விட்டுக்கொடுத்து செயல்படுவீர். ஒரு சிலர் புதிய முயற்சி மேற்கொள்வீர்கள். சனி பகவான் ஐந்தாமிடத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் அனைத்திலும் கவனமாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வதும், உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவதும் நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல் உண்டாகும். ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பதும் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப். 3.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 6, 12.பரிகாரம்: வாஞ்சிநாதரை வழிபட நினைப்பது நடந்தேறும்.

விருச்சிகம்: விசாகம் 4 ம் பாதம்; பிறருக்கு வழிகாட்டுவதில் முதலிடத்தை வகிக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். சனி பகவானின் பார்வையால் நீங்கள் அடைந்து வந்த சங்கடம் இனி இருக்காது. உடல் நிலையில் இருந்த பாதிப்பு மன நிலையில் குழப்பம் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். தம்பதிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் தேடிவரும். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை கூடும். எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு தேடிவரும். இதுநாள் வரை போராட்டமாக இருந்த நிலை மாறும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். சனி பகவான் ராகு, சூரியன் சந்திப்பதால் செயல்களில் நிதானம் வேண்டும். ஒவ்வொன்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். ஓய்வு உறக்கமின்றி செயல்படுபவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள், பிள்ளைகளால் மனக்கவலை, தாய்வழி உறவுகளால் நெருக்கடி என ஒரு சிலருக்கு சங்கடம் ஏற்படலாம்.  அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். காவல்துறையினர், பேரிடர் மீட்புத்துறையினர் பணிபுரியும் இடத்திலும் சுய வாழ்க்கையிலும் கவனமாக இருப்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப். 4.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 18, 21, 27, 30. ஏப். 3, 9, 12.பரிகாரம்: வடாரண்யேசுவரரை வழிபட வளம் உண்டாகும்.அனுஷம்; எதிலும் கவனமாக ஈடுபட்டு வெற்றி அடையும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். சனி பகவான் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் உங்கள் ராசியையும் பார்த்து சங்கடங்களையும் நெருக்கடிகளையும் உண்டாக்கி வரும் நிலையில், குரு பகவான் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் அவற்றிலிருந்து விடுதலைக் கிடைக்கும். நேற்று திட்டமிட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்திலும் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்குவது வீடு வாங்குவது என்ற கனவு நனவாகும். அலைச்சலும் உழைப்பும் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சுயதொழில் புரிபவர்களுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் கூடும். மார்ச் 30 முதல் புதன் பகவான் சாதகமாக சஞ்சரிப்பதால் செயல்களில் தெளிவு இருக்கும். வியாபாரிகளுக்கு, கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். தடைகளை சந்தித்து வந்த நிலை மாறும். வங்கியில் கேட்ட பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் மறையும். சிறு வியாபாரிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி வெற்றியாவதுடன் உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். தம்பதிக்குள் அனுசரித்துச்சென்று வேலைகளை நடத்தி முடிப்பீர். மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். சந்திராஷ்டமம்: ஏப். 4, 5.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.பரிகாரம்: பைரவரை வழிபட நெருக்கடி நீங்கும்.கேட்டை; உச்சத்தை எட்டும் பாக்கியம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். கடந்த மாத நெருக்கடி விலக ஆரம்பிக்கும். குடும்பம், தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மாதம் முழுவதும் லாப ஸ்தானம் பலமடைவதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். நட்சத்திரநாதன் புதன் பகவான் மார்ச் 30 முதல் சாதகமாக சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். தொடர்ந்து முயற்சி செய்தும் முடியாமல் இருந்த வேலை முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வியாபாரிகள் செய்து வரும் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். குரு பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் செல்வாக்கு, அந்தஸ்து உயரும். நஷ்டத்தில் இயங்கிய தொழில் முன்னேற்றமடையும். முடங்கிக்கிடந்த தொழில் லாபம் காணும். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். அந்நியரால் லாபம் கூடும்.தம்பதிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். சுக ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதாலும், ராசிநாதன் அஸ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பதாலும் அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது. வாய்ப்பு தேடி வந்தாலும் அவற்றில் உள்ள நன்மைத் தீமைகளை அறிந்து ஏற்றுக்கொள்வது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தேர்வை எளிதாக எதிர்கொள்வீர். மூத்த குடிமக்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப். 5, 6.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14, 18, 23, 27. ஏப். 9.பரிகாரம்: வீர ராகவப் பெருமாளை வழிபட நன்மை உண்டாகும்.

தனுசு: மூலம் நல்லெண்ணத்துடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நன்மையான மாதம். கேது பகவானுக்கு குருவின் பார்வைக் கிடைப்பதால் செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். அலுவலகப் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை, வழக்கு முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்குவதற்காக மேற்கொண்ட முயற்சி ஆதாயம் தரும்.  குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும் எதிர்பார்த்த வரவு இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வெளிநாடு செல்வதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். நேற்றைய முயற்சிகள் வெற்றியாகும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் செயல்களில் வேகம் இருக்கும். திட்டமிடாமல் கூட ஒரு சில வேலைகளில் இறங்கி அதனால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். கேந்திர பலத்துடன் சூரியனும் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்கள் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 6அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16, 21, 25, 31. ஏப். 3, 7, 12.பரிகாரம்: விநாயகரை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.பூராடம்; பிறருக்கு வழிகாட்டியாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். உங்கள் ராசிநாதன் குருவும் நட்சத்திர நாதன் சுக்கிரனும் பரிவர்த்தனை பெறுவதால் எதிர்பார்த்த வருமானம் வரும். திட்டமிட்ட வேலை சுலபமாக நடக்கும். இதுவரை இருந்த நெருக்கடி விலகும். உங்கள் செல்வாக்கு உயரும். பொன் பொருள் சேரும். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். குரு பகவானின் பார்வைகளால் வியாபாரம் மேன்மை அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் பலமும் தலைமையின் ஆதரவும் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப செயல்கள் நடக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை கூடும். எதிலும் தனித்து நின்று சாதித்திடக் கூடிய அளவிற்கு உங்களுடைய நிலையில் முன்னேற்றம் உண்டாகும். கடந்தகால நெருக்கடி விலகும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை. ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. முதியவர்கள் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவதும் நோய் வந்தவுடன் மருத்துவரைச் சந்திப்பதும் அவசியம்.சந்திராஷ்டமம்: ஏப். 7.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3, 6, 12.பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.உத்திராடம் 1 ம் பாதம்; எதிலும் தனித்துவத்துடன் திகழும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். உங்கள் பாக்கியாதிபதி கேந்திர பலம் பெறுவதால் அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னை, வம்பு வழக்கு முடிவிற்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த அனுமதிக் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சி மேற்கொண்டவர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு அமையும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் லாபம் கூடும். அந்நியர்களால் லாபம் கிடைக்கும். சகாய ஸ்தான சனியால் உங்கள் முயற்சி யாவும் வெற்றியாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். உடல் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இதுவரை நடைபெறாமல் இருந்த வேலை இப்போது முடிவிற்கு வரும். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் செவ்வாய் உங்கள் திறமையை அதிகரிப்பார். வேகமாகவும் செயல்பட வைப்பார். இத்தனை நாளும் சோர்வாக இருந்த நீங்கள் இந்த மாதத்தில் வேகமாக செயல்படுவீர்கள். ஒரு சிலருக்கு புதிய இடம், வீடு, வாகனம் வாங்கிடக் கூடிய நிலை உண்டாகும். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. வயதானவர்கள் உடல்நிலையில் கூடுதலாக கவனம் செலுத்துவது அவசியம். தம்பதிக்குள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது முக்கியம். சிறு வியாபாரிகள் நிலை உயரும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் மாதம் இது.சந்திராஷ்டமம்: ஏப். 8.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19, 21, 28, 30. ஏப். 1, 3, 10, 12.பரிகாரம்:  மங்கள ஈஸ்வரரை வழிபட மனக்கவலை விலகும்.

மகரம்: உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்:  வெற்றியை நோக்கி வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதம். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை  வெற்றியாக்குவார். நினைத்த வேலைகளை நடத்தித் தருவார். இதுநாள் வரை தடைபட்ட வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவார். புதிய முயற்சிகளை வெற்றியாக்குவார்.  வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். வருமானம் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். மேலும், செல்வாக்கு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். அரசு பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு தேடி வரும். மார்ச் 30 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். வீட்டில் சுப செயல் நடக்கும்.  திருமண வயதினருக்கு வரன்வரும். வீடு, மனை கனவு நனவாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை உண்டாவதால் உடல் நிலையில் எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் செல்வாக்கினை கண்டு ஒரு சிலர் உங்களுக்கு எதிராக சதி புரிவார்கள். நேர்மையும் ஒழுக்கமும் உங்களைப் பாதுகாக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள் நிலை உயரும். சிறு வியாபாரிகள் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: ஏப். 8, 9.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 19, 26, 28. ஏப். 1, 10.பரிகாரம்:  நவக்கிரக வழிபாடு நன்மையை உண்டாக்கும்.திருவோணம்; எதிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் அதிர்ஷ்டமான மாதம். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்த நெருக்கடி கொஞ்சம் கொஞ்சமாக விலகும். ராகுவும் சூரியனும் நீங்கள் எடுக்கும் வேலைகளை எல்லாம் வெற்றியாக்குவார்கள். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் செல்வாக்கும் உயரும். ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் செல்வாக்கை உயர்த்துவார். சமூகத்தில் அந்தஸ்தையும் கௌரவத்தையும் கொடுப்பார். தொழிலில் லாபத்தை ஏற்படுத்துவார். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து விடுவித்து உங்கள் நிலையில் மாற்றத்தை அளிப்பார். செவ்வாய் பகவான் எதிர்ப்பற்ற நிலையினை உங்களுக்கு வழங்குவார். வியாபாரத்தில் தோன்றிய போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் விலகிச் செல்வர். வழக்கு சாதகமாகும். அதே நேரத்தில் இரண்டாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியும், நான்கு, எட்டாம் இடங்களுக்கு உண்டாகும் அவருடைய பார்வைகளும் உடல் நிலையில் சங்கடங்களை அதிகரிக்கும். எப்போதும் கவனமாக இருப்பது நல்லது. வயதானவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு ஏற்படும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். வீடு, மனை வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். வருமானம் பல வழியிலும் வரும். மாணவர்களுக்கு தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.சந்திராஷ்டமம்: ஏப். 9, 10.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 20, 26, 29. ஏப். 2, 8, 11.பரிகாரம்: பாடலீஸவரரை வழிபட வளம் உண்டாகும்.அவிட்டம் 1, 2 ம் பாதம் ; விடாமுயற்சியுடன் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் முன்னேற்றமான மாதம். செவ்வாய் பகவான் உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாப்பார். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார். உடல் நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். தைரியமாக செயல்படக்கூடிய நிலையினை வழங்குவார். குரு பகவானின் அருளால் செல்வாக்கு மென்மேலும் உயரும். இதுவரை உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் மதிப்பு, மரியாதை கொடுப்பார்கள். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் சூரியனும் நீங்கள் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார்கள். செய்யும் முயற்சிகளை லாபமாக்குவார். வரவேண்டிய பணம் வரும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்குள் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கும். வாங்க நினைத்த சொத்தை வாங்குவீர். அடைய நினைத்த இடத்தை அடைவீர். அரசியலில் உண்மை தொண்டர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். இசை துறையினரின் நிலை உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் தடைபட்ட வேலை நடக்கும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றமும் எதிர்பார்த்த மதிப்பெண்ணும் கிடைக்கும். விவசாயிகள் நிலையில் இருந்த சங்கடம் விலகும். சேவை, தொண்டு புரிபவருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.சந்திராஷ்டமம்: ஏப். 10.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.பரிகாரம்: முருகனை வழிபட தடைபட்ட வேலை நடக்கும்.

கும்பம்: அவிட்டம் 3, 4 ம் பாதம்;  உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தையும் பார்ப்பதால் உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். பிரச்னை, வழக்கு என்று ஏற்பட வாய்ப்புள்ளதால் ஆவேசத்திற்கு இக்காலத்தில் இடம் கொடுக்க வேண்டாம். குழந்தைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. சிலர் உங்களுக்கு எதிராக செயல்படுவர் என்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உடன் பணிபுரிபவர்களும் உங்களுக்கு எதிராக மாறக்கூடும் என்பதால் அலுவலகத்தில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதும், அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதும் உங்களுக்கு நல்லது. தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கூட்டு கிரகங்களால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகலாம். இந்த நேரத்தில் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பதும் உங்களுக்கு நிம்மதியான நிலையை உண்டாக்கும். பணவரவிலும் தடை ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு வேலையிலும் நிதானமாக இருக்க வேண்டும். உங்கள் உடல் நிலையில் கவனம் வேண்டும். குடும்பஸ்தர்கள் வழக்கமான வேலையில் மட்டும் ஈடுபடுவது நன்மையை உண்டாக்கும். மாணவர்கள் ஆசிரியரின் அறிவுரையை ஏற்பது நல்லது.சந்திராஷ்டமம்: ஏப். 10, 11.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 18, 26, 27. ஏப். 8, 9.பரிகாரம்: குல தெய்வத்தை வழிபட குறைகள் நீங்கும்.சதயம்: வாழ்க்கையின் சூட்சுமம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராகு பகவானும், சூரியனும் அரசு வழி முயற்சிகளில் தடை தாமதங்களையும் உண்டாக்குவார். பணவரவும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் போகும். வியாபாரத்தில் சிறிய தடைகளை சந்திக்க நேரும். குடும்பத்திலும் குழப்பம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது, நல்ல நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்பதும், வேலைகளில் கவனமாக இருப்பதும், உடல் நிலையில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம். குருபகவான் அஷ்டம, ஜீவன ஸ்தானங்களையும் பார்ப்பதால் என்ன பிரச்னை வந்தாலும் அதை உங்களால் சமாளிக்க முடியும். எதிர்ப்புகளை வெல்ல முடியும். தொழிலில் லாபம் காண முடியும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சிக்கல் விலகும். கவனமாக செயல்பட்டால் நினைப்பதை சாதிக்க முடியும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பிள்ளைகளுக்காக செலவு அதிகரிக்கும். அதிகபட்சம் உழைக்க வேண்டியதாக இருக்கும். உறவு மத்தியிலும் பிரச்னைகள் உருவாகும் என்பதால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் நிதானமாக இருந்து செயல்படுவது நல்லது. வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவதுடன் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அதிகபட்சமான அக்கறை தேவை.சந்திராஷ்டமம்: மார்ச் 15, ஏப். 11, 12.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 22, 26, 31. ஏப். 4, 8, 13.பரிகாரம்: பிரத்தியங்கிராவை வழிபட தொல்லை விலகும்.பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்; சூழ்நிலை அறிந்து செயல்பட்டு நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ஏற்ற இறக்கமான மாதம். குரு பகவானால் உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். வாகனம், வீடு போன்றவற்றில் செலவு ஏற்படும். 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பிள்ளைகள் வழியில் சங்கடங்களை அதிகரிப்பார். குரு பகவானின் பார்வை சாதகமாக இருப்பதால் எதையும் சமாளிக்க முடியும். பணிபுரியும் இடத்தில் நடைபெறும் சூழ்ச்சிகளை கண்டறிந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகளை சமாளித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும். குடும்பத்திற்காக செலவு அதிகரிக்கும். இந்த நேரத்தில், தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். எந்த ஒரு வாக்குறுதியும் யாருக்கும் இந்த நேரத்தில் வழங்கிட வேண்டாம். கையில் பணம் இருக்கும்போது அதை கவனமாக வைத்திருக்கவும் இல்லை என்றால் களவு போகவும் வாய்ப்புண்டு. மாணவர்கள் ஆசிரியரின் ஆலோசனையை ஏற்று செயல்படுவதால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.சந்திராஷ்டமம்: மார்ச் 15, 16. ஏப். 12, 13.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17, 21, 26, 30. ஏப். 3, 8.பரிகாரம்: அனுமனை வழிபட நன்மைகள் உண்டாகும்.

மீனம்: பூரட்டாதி 4 ம் பாதம்; வழிகாட்டியாக வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் சூரியன், ராகு, புதன், சுக்கிரன் என்று சஞ்சரிப்பதால் செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். விரய ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிப்பதால் எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். குடும்பத்தில்  சுமூகமான நிலை இல்லாமல் போகும். சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அரசு பணியில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளால் நெருக்கடி உண்டாகும். வழக்குகள் வராமல் பார்த்துக் கொள்ளவும். குரு, சுக்கிரன் பரிவர்த்தனையால் சங்கடம் ஏற்பட்டாலும் அவற்றில் இருந்து உங்களால் வெளிவர முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பார்த்த பணம் வரும். திடீர் செலவுகளை சமாளிக்க முடியும். அரசியல்வாதிகள் அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். அதனால் தேவையற்ற பிரச்னை உருவெடுக்கும். மாணவர்கள் குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிறு வியாபாரிகள் முதலீட்டில் கவனமாக இருப்பதுடன் வருமானத்தின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.சந்திராஷ்டமம்: மார்ச் 17. ஏப். 13.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 30. ஏப். 3, 12.பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.உத்திரட்டாதி; எதிலும் தனித்துவத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் போராடி வெற்றிபெற வேண்டிய மாதம். விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் சனி பகவான் பல வகையிலும் செலவுகளை அதிகரிப்பார். குடும்பத்திலும் சிறு சிறு பிரச்னை தோன்றி மறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இழுபறியாகும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு குறையும். தொழிலாளர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். உழைப்பிற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகும். மனம் குழப்பத்திற்கு ஆளாகும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உங்கள் தனாதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பதற்கு மாறான பலன் ஏற்படும். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி எந்த ஒரு வேலையிலும் இறங்கிட வேண்டாம். செய்து வரும் தொழிலில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும், முதலீடுகளில் கவனமாக இருப்பதும் நல்லது. ராசிநாதனின் பார்வை சாதகமாக இருப்பதால் திருமண வயதினருக்கு வரன் வரும். வீடு, இடம் வாங்க வேண்டும் என்ற கனவு நனவாகும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எத்தனைப் பிரச்னை வந்தாலும் உங்களால் சமாளிக்க முடியும். செலவிற்கேற்ற வரவும் இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. வயதானவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.சந்திராஷ்டமம்: மார்ச் 17, 18. ஏப். 13.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 26, 30. ஏப். 3, 8, 12.பரிகாரம் நவக்கிரகத்தில் உள்ள சனி பகவானை வழிபட நன்மை உண்டாகும்.ரேவதி; வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு வரும் உங்களுக்கு பிறக்கும் பங்குனி மாதம் நெருக்கடியான மாதம். புத பகவானின் சஞ்சாரமும், ராசி நாதன் குரு பகவானின் சஞ்சாரமும் சாதகமாக இல்லை ஆதலால் ஒவ்வொரு வேலையிலும் கவனம் வேண்டும். வியாபாரத்திலும், தொழிலிலும் ஒப்பந்தம் செய்கின்றபோது நன்றாகப் படித்துப்பார்த்து கையெழுத்திட வேண்டும். அரசு பணியில் இருப்பவர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி செயல்படுவதால் உங்களுக்கு வரும் சங்கடம் மாற்றம் பெறும். குரு பகவானின் பார்வை உண்டாவதால் வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும். தவறான நண்பர்களால் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். 9, 11 ம் இடங்களுக்கும் குரு பகவானின் பார்வைகள் கிடைப்பதால் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். புதிய வீடு, நிலம் வாங்கவேண்டும் என்ற நீண்டநாள் கனவு நனவாகும். முந்தைய முதலீட்டில் இருந்து லாபம் வரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும் என்றாலும், உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பிரச்னைகளும் வழக்குகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பின் விளைவுகளை யோசித்து அனைத்திலும் அனுசரித்துச் செல்வது நல்லது. மூத்த குடிமக்களுக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவரை சந்திப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்பதும், படிப்பில் கவனமாக இருப்பதும் நல்லது.சந்திராஷ்டமம்: மார்ச் 18, 19.அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21, 23, 30. ஏப். 3, 5, 12.பரிகாரம்: கள்ளழகரை வழிபட நினைப்பது நடந்தேறும்.


ShareTweetShareShare

Advertisement

Advertisement Tariff

Advertisement




      Dinamalar
      Follow us